ஊர்:மலையடிப்பட்டி #
மூலவர்:ஸ்ரீபள்ளிகொண்டபெருமாள்,ஸ்ரீதேவி, பூதேவி.
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீகமலவல்லித்தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீபுருஷோத்தமன், ஸ்ரீஹயக்கிரீவர், ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீபரமபதநாதன்,
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
#-26-02-2017-குருஸ்ரீ பகோரா பயணித்தது
திவாகரமுனி தினமும் பெருமாளை வணங்கிவிட்டுத்தான் உணவு உண்பது என்றிருப்பவர். ஒருநாள் வழி எங்கும் பெருமாள் கோவில் காணவில்லை. வயல்வெளியில் ஒரு சிறுவன் மாடு மேய்க்க அவனிடம் கோவில் பற்றி விசாரித்தார். கோவில் ஏதுமில்லை. அதோ அங்கே படுத்துக் கிடக்கும் ஒன்றைதான் நாங்கள் கும்பிடுகின்றோம் என வழி காண்பிக்க குகை உள்ளே சென்றவர்க்கு பாம்பணையில் அரங்கன் படுத்திருப்பதும் மற்றவர் இருப்பதும் புலப்பட ஆனந்தம் மேலிட வெளிவந்து குளித்து காட்டு மலர்களைப் பறித்து வந்தவருக்கு உள்ளே அரங்கன் அவரது பரிவாரங்கள் யாரையும் காணவில்லை. மாடு மேய்த்த அந்த சிறுவனைக் கூப்பிட்டு இங்கிருந்த சாமி எங்கே எனக்கேட்க சிறுவன் மாயமாய் சிரிக்க அப்போதுதான் அது யாரென்று தெரிய காலடியில் வீழ்ந்து வணங்கினான். புருஷோத்தமனாகவும், ஹயக்கிரீவராகவும், நரசிம்மராகவும், பரமபதநாதனாகவும், அரங்கனாகவும் காட்சி கொடுத்து எங்கும் உறைபவன் நான். என்னைத்தேடி அலைவதை விட்டுவிடு எனக்கூறி மலையாக மாறினார். மலையே வணங்கப் பட்டு பின் காலப்போக்கில் மலையைக் குடைந்து திரு உருவங்களுடன் குடவரைக் கோவிலானது. அன்பர்கள் வருகை, வழிபாடு என அனைத்தையும் மவுன சாட்சியாக கவனித்து பெருமாளிடம் பரிந்துரைக்கும் அறிநேத்திரத் தூண்கள் (திருநேத்திரதூண்கள்) திருமாலுக்கு முன்புறம். அரங்கர் திருமார்பில் ஒரு லட்சுமி, வைகுண்டநாதருக்கு அருகே ஸ்ரீதேவி,பூதேவி என உபய நாச்சியார்களாக இரண்டிரண்டு லட்சுமிகள், லட்சுமி நாரயனர் மடியில் ஒரு லட்சுமி, தனிக்கோவிலில் கமலவல்லிதாயார், மற்றும் தீபஸ்தம்பம் அருகில் ஒரு லட்சுமி என எட்டு லட்சுமிகள். 1300 ஆண்டுகள் பழமையானவை. புராதனச் சின்னம். தொல்பொருள்துறை பாதுகாக்கின்றது. ஒரே குன்றில் கடைந்தெடுக்கப்பட்ட சிவா விஷ்னு குடவரைக் கோயில்கள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)