ஊர்: கட்டிமாங்கோடு
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமகாதேவர்
இறைவி:
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீ விநாயகர், ஸ்ரீசாஸ்தா, ஸ்ரீநாகர்கள்.
மரம்:
தீர்:
தி.நே-0600-9000,1700-1800
பாண்டவர்கள் வன வாசத்தின்போது தங்கியிருந்த தலம். தாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து கோவிலுக்குச் செல்லும் வழியில் ஓர் மா மரம் கண்டனர். அதில் ஒரு பழம் பழுத்திருக்கக்கண்ட அர்ஜுணன் அம்பெய்தி அதை வீழ்த்தினான். தன் ஜோதிட ஞானத்தால், இந்த மரம் ஒரே ஒரு கனியைத்தான் தரும். அதை கலைக்கோட்டு முனிவர் சித்திரை விஷு அன்று சிவனுக்கு படைப்பார். அந்தக் கனியை இவ்வாறு கொய்து விட்டீர்களே என வருந்தினான், அவர் வரும் போது கனி இல்லையேல் கோபங்கொள்வார். இப்போது என்ன செய்வது என யோசித்து தங்கள் ஆபத்பாந்தவன் கிருஷ்ணனை நினைத்தனர். கிருஷ்ணன் தோன்றி நீங்கள் அனைவரும் உங்கள் மனதில் உள்ள இரகசியத்தை கூறினால் பழம் சிறிது சிறிதாக் மேழெலும்பி மரத்தில் சேரும் என்றார். எல்லோரும் மற்றவர்களுக்குத் தெரியாமல் மனதில் வைத்திருந்த விஷயத்தை வாய்விட்டுக் கூற மாங்கனி கொஞ்சம் கொஞ்சமாக மேலே சென்று மரத்தில் ஒட்டியது. அதே சமயம் அந்த முனிவர் அங்குவந்தார். நடந்ததைக் கூர எல்லாம் அவன் செயல் என்று கலைக்கோட்டு முனிவர் கூறித் தன் கையை நீட்ட மாங்கனி அவர் கரங்களில் சேர்ந்தது. அதை மகாதேவருக்குப் படைத்து பாண்டவர்களுக்கு பிரசாதமாக அளித்தார். உடன் தியனத்தில் அமர்ந்து விட்டார். மீண்டும் அடுத்த வருடம் விஷுவன்றுதான் தியானத்திலிருந்து எழுவார் என்பதால் பாண்டவர்கள் அனைவரும் இங்கேயே ஒரு வருடம் தங்கி அவரை அடுத்த வருடம் சந்தித்து விடைபெற்றுச் சென்றனர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)