ஊர்: பெருஞ்சேரி,
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவாகீஸ்வரர், ஸ்ரீவாக்கு நல்கிய வள்ளல்
இறைவி: ஸ்ரீசுவாந்திரநாயகி
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஆதிகுரு தட்சிணாமூர்த்தி, ஸ்ரீசோமாஸ்கந்தர்,
மூன்று நிலை ராஜ கோபுரம் மரம்: பன்னீர்மரம்
தீர்: ஞான தீர்த்தம்
தி.நே-0600-1200,1600-2100
800 ஆண்டுகள் பழமை. பெரும்-பெருமைமிக்க, சேரி- மக்கள் சேர்ந்து வாழும் பகுதி. பெரும்சேரி.
தலவரலாறு- ப்ருகஸ்பதி என்ற தேவகுரு வியாழபகவான் உருவாக்கிய தீர்த்தம் ஞான தீர்த்தம். ப்ரகஸ்பதி, சந்திரன், சரஸ்வதி, தத்தன் ஆகியோர் வழிபட்டுள்ளனர். தன் மனைவி யும் சந்திரனும் ஒருவரை ஒருவர் நேசித்ததால் மனம் நொந்த வியாழன் இதற்கு தன் கர்ம விதியும் காரணமாக இருக்கும் என நினைத்து யாத்திரை சென்றார். இங்கு வந்ததும் அவர் மனம் ஒரு நிலைபட்டு நிம்மதியடைந்தது. இங்கேயே தங்கி பன்னிரண்டு ஆண்டுகள் தவம் செய்ய சிவன் காட்சி கொடுக்க மெய் ஞானம் பெற்றார். மயூரம் சென்று வழிபட்டபோது தேவகுரு ஆக விண்ணப்பிக்க சிவன் அவரை மீண்டும் இங்கே வந்து பூஜை செய்யச் சொன்னார். சிலகாலம் சென்று அவருக்கு காட்சி கொடுத்து தேவகுரு பதவியைத் தந்தார்.அதனால் சொல்லிய வண்ணம் செய்த இறைவனை வாக்கு நல்கிய வள்ளல் என அழைக்கப்படுகின்றார்.குரு பரிகாரத்தலம்
அன்னையை வழிபட்டு தனது சுவாசக் கோளாறு நீங்கி பேறு பெற்ற சோழமன்னன் தத்தனுக்கும் அவர் மனைவிக்கும் சன்னதி.
தக்கனின் யாகத்தில் கலந்துகொண்டு வீரபத்திரரால் மூக்கறுபட்ட சரஸ்வதி இங்கு வழிபட்டு சாபவிமோசனம். வாக்கு வண்மையை சரஸ்வதிக்கு அருளியதாலும் வாக்கு நல்கிய வள்ளல்.-வாகீஸ்வரர்
சதுர்யுக பைரவர் வழிபாடு சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)