ஊர்:திருவழுந்தூர்#தி.தே-23.தேரழுந்தூர்.
மூலவர்: ஸ்ரீதேவாதிராஜன்-5ஆயுதங்கள்,நி.கோலம்.ருக்மணி,சத்யபாமா
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீசெங்கமலவல்லி-தனிசன்னதி
உ:ஸ்ரீஆமருவியப்பன்
பிறசன்னதிகள்:ஸ்ரீகோசகன்,ஸ்ரீவேதபுரீசுவரர். ஸ்ரீராமர் பசுவுடன்ஸ்ரீ கிருஷ்ணன்ஸ்ரீயோகநரசிம்மர்
3நிலைராஜகோபுரம்.
தீர்-தர்சனபுஷ்கரனி,காவிரி.
வி-கருட
தி.நே-06-12,16-21
.
#11062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது
காவேரி, கருடன், அகத்தியர், தருமதேவதை வழி பட்டது. கிருஷ்ணாரண்யம்.
கோகுலத்தில் கண்ணன் பசுகளை மேயவிட்டு விளையாடிக்கொண்டிருந்தபோது பிரம்மா அந்தப் பசுக்களை கவர்ந்து தேரெழுந்தூர் வந்தார். பசுக்கூட்டத்தைக் காணாத கண்ணன் கோபர்களுக்காக இன்னொரு பசுக் கூட்டத்தை தோற்றுவித்தார். பசுக்கூட்டத்தைக் தேடி கண்ணன் இங்கு வருவார் என எதிர்பார்து ஏமாந்ததால் கிருஷ்ணனை நோக்கித்தவமிருந்து இங்கு வருகைபுரிய வேண்டுகோள்.
இந்திரன் பரிசாகக் கொடுத்த புஷ்பக விமானத்தில் அஷ்டவசுக்களில் ஒருவனான உபரிசரவசு தன் மனைவியுடன் செல்ல அவன் மனைவி கீழே தேவாதி ராஜனை வணங்கிச் செல்ல விரும்ப உபரிசரவசு கர்வத்தால் தன்னைவிடச் சிறந்தவன் அல்லன் எனக்கூற இதையறிந்த பெருமாள் பெரிய திருவடியைப் பார்க்க அவர் புஷ்பக விமானத்தின் நிழலை தன் காலால் அழுத்த விமானம் இங்கு தரைதட்டியது. குழந்தை கிருஷ்ணன் -குழந்தைபாக்ய வழிபாடு. கம்பர் பிறந்த தலம். அகத்தியர் வழிபாடு.
இந்திரன் தன்னிடமுள்ள வைரமுடி மற்றும் விமானத்தை கருடனிடம்தந்து விரும்பியதலத்தில் வைக்கச் சொல்ல வைரமுடியை மைசூர் அருகில் உள்ள மேலக்கோட்டையிலும் விமானத்தை இங்கும் வைத்தார். பெருமாளின் எதிரில் இல்லாமல் இங்கு அருகில் நின்று அருள். 16 வயது போதும் என நினைத்த மார்க்கண்டேயர் ஆமருவியப்பரை வணங்கி ஆலோசனை கேட்ட தலம்.
சிவன் பெருமாள் சொக்கட்டான் ஆட்டத்தில் பார்வதி விளையாட்டாக தன் அண்ணன் ஜெயித்ததாகக் கூறியதால் கோபம் கொண்ட சிவன் பசுவாக பிறக்க சாபம். பசுவான தன் தங்கைக்கு துணையாக பெருமாள் ஆமருவியப்பனாக வந்து தலம் கொண்டார். எதிரில் வேதபுரீஸ்வரர் கோவில்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)