ஊர்: நல்லிச்சேரி , நந்திமங்கை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஜம்புகேஸ்வரர்.
இறைவி: ஸ்ரீஅலங்காரவல்லி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீமுருகன்.ஸ்ரீவிநாயகர். ஸ்ரீவிஷ்ணு துர்க்கை.
மரம்:
தீர்: தி.நே-0900-1000,1730-1900
சப்த மங்கையரும் காளிதேவிக்குத் துணையாகப் போருக்குச் செல்லுமுன் ஒவ்வொருவரும் ஒவ்வோர் தலத்தில் சிவபூஜை செய்தனர். சக்கரப்பள்ளி- சக்ரமங்கை, ஹரிமங்கை- அரிமங்கை(அய்யம்பேட்டை ரயிலடி-1), சூலமங்கலம்- சூலமங்கை(பசுபதிகோவில் ரயிலடிக்கு அருகில்), நல்லிச்சேரி- நந்திமங்கை(அய்யம்பேட்டை-3), பசுபதிகோவில்- பசுமங்கை, பசுபதிகோவில் -தாழமங்கை, பசுபதிகோவில் –திருப்புள்ளமங்கை இந்த எழு தலங்களிலும் மங்கைப் பருவ தேவியர் சிவ பூஜை செய்து சிவதரிசனம் பெற்ற ஏழு தலங்களும் சப்த மங்கைத் தலங்கள் எனப்பட்டன. ஏழு தலங்களும் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகில் உள்ள தலங்கள்.
சப்த மாதர்களில் நாராயணி-(வைஷ்ணவிதேவி) பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம். நல்லிச்சேரி- நந்திமங்கை. நந்திகேசுவரர் ஈசனை பூஜித்து நடராஜர் பாத தரிசனம் கண்ட தலம். ஈசன் ஜம்புகேஸ்வரர். இந்த அம்பிகை அலங்காரவல்லி, காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர் வேண்டுதலுக்கிணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் நான்காவதான கன்னிகை வடிவில் காட்சி. நாராயணி-அனைத்து உலகங்களையும் பரிபாலனம் செய்ய திருமாலுக்கு உதவி.
சப்த மங்கைகள் தரிசித்த இந்த ஏழு தலங்களுக்கும் பார்வதி வந்தபோது இறைவன் சிறப்பு காட்சி தந்ததால் இத்தலங்களின் தரிசனம் 1.நெற்றிக்கண் தரிசனம், 2.கங்காதேவி தரிசனம், 3. திரிசூல தரிசனம், 4.பாத தரிசனம், 5.உடுக்கை தரிசனம், 6.மூன்றாம்பிறை தரிசனம், 7.நாக தரிசனம் எனப்படும். சக்ரப்பள்ளி சப்தஸ்தான ஏழூர் திருவிழா2 நாட்கள் பங்குனிமாதம் சித்திரை நடசத்திரத்தன்று புஷ்ப பல்லக்கில் சக்கரவகீஸரும், வேதநாயகியும் எழுந்தருள, வெட்டிவேர் பல்லக்கில் நாதன்சர்மா-அனவித்யை தம்பதிகளுடன் புறப்பட்டு ஆறு தலங்களுக்கும் சென்று திரும்பும்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)