ஊர்: திருநாங்கூர்+பெ #
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமதங்கீசுவரர் ஸ்ரீநம்புவார்க்கு அன்பன், ஸ்ரீபக்தவத்ஸலேஸ்வரர்,
இறைவி: ஸ்ரீராஜமாதங்கீசுவரி. ஸ்ரீநம்பிபிரியாள், ஸ்ரீபக்தவத்ஸலேஸ்வரி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீமதங்க விநாயகர், ஸ்ரீமுருகன் - வள்ளி,தெய்வானை, ஸ்ரீகுபேர தட்சிணாமூர்த்தி, ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீகைலாசநாதர், ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர், ஸ்ரீசூரியன். ஸ்ரீநாராயணப்பெருமாள்மோகினிஅவதாரம். ஸ்ரீமகாகாளி-8கரங்களுடன். மதங்க மகரிஷி சன்னதி. ஸ்ரீவலஞ்சுழி மதங்க விநாயகர், ஸ்ரீபிரசன்ன சுப்ரமண்யர்-வள்ளி,தெய்வானை, ஸ்ரீதேவி,பூதேவி, ஸ்ரீமகாலட்சுமி.
இரண்டுகால பூஜை
தி.நே-0800-1000,1800-2000
#11062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
1100 ஆண்டுகள் பழமை. தட்சன் அழைக்காத யாகத்திற்கு சென்று அவமானமடைந்து சபித்து திருப்பிய பார்வதி மீது கோபங்கொண்டு ருத்திரதாண்டவமாடிய சிவன் முடி பட்டு 11 சிவரூபங்கள் ஆட சாந்தப் படுத்தவந்து ஆடிய பரமபதநாதனைக் கண்ட சிவன் கொடூர தாண்டவத்தை நிறுத்தி தன்னைப்போல் ஏகாதச உருவம் கொண்டு 11 திருமால்களாக காட்சியளிக்க வேண்ட அந்த அவதார மூர்த்திகள் 11பேரும் 11சிவ ரூபங்களை ஒரு சிவனுக்குள் ஒன்றாக செலுத்தி பார்வதியை ஏற்றுக்கொள்ள வைத்த தலம். 1.ஸ்ரீமதங்கேசுவரர்-தத்புருஷபீடம்-நாராயணமூர்த்தி. 2.ஸ்ரீஆரண்யேஸ்வரர்-அகோரபீடம்- பார்த்தசாரதி, 3.ஸ்ரீயோகநாதர்-வாமபீடம்- அண்ணன் பெருமாள், 4.ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர்-சத்யோஜத பீடம்-பேரருளாளப் பெருமாள், 5.ஸ்ரீஜுரஹரேசுவரர்-சோம பீடம்-குடமாடும் கூத்தர் பெருமாள், 6.ஸ்ரீநாகநாதர் -சர்வபீடம்-பள்ளிகொண்ட பெருமாள், 7.ஸ்ரீநம்புவார்க்கன்பர்-மகாதேவபீடம்-புருஷோத்தம பெருமாள், 8.ஸ்ரீகைலாசநாதர்-பீமபீடம்-வைகுந்தபெருமாள், 9.ஸ்ரீசுந்தரேசுவரர்-பவபீடம்-திருமேனிஅழகர், 10.ஸ்ரீசிராவதேசர்-பிராணபீடம்-மாதவப்பெருமாள், 11.கலிகாமேஸ்வரர்-ருத்ர பீடம்-நரசிம்ம பெருமாள், 12.ஸ்ரீநயனார்ப்பணேசுவரர்-பாசுபதபீடம்-லட்சுமிநாராயணன்-12பீடங்களை 12 மூர்த்திகளாக பெருமாள் வழிபட்டார்.
திருவெண்காட்டீசர் பிரும்மவித்யாம்பிகை மணம் செய்த தலம்.
2நந்திகள் எதிரும் புதிரும்.-மதங்க நந்தி,சுவேத நந்தி-
திருநாங்கூர் 11 சிவ -வைஷ்ணவத் தலங்களின் ஆதாரத்தலம்.
பிரம்மனின் மானஸ புத்திரர் தந்தையின் ஆணைப்படி தவம் செய்ய சிறந்த இடத்தை நாரதரிடம் கேட்டு சுவேதவனம் வந்து தவம் செய்ய அதைத் தடுக்க மன்மதனும் விஷ்ணுவும் வர மன்மதனை சிவபெருமானின் நெற்றிக்கண்ணால் நீ அழிவாய் என்று சாபம் கொடுத்தார். மன்மதன் சாப விமோசனம் கேட்க கிருஷ்ண பரம்மாத்மாவின் புதல்வனாகப் பிறந்து சரீரம் பெறுவாய் என விமோசனம் அளித்தார். மோகினியாக இருந்த விஷ்ணுவை சபிக்க முறபடும்போது விஷ்ணு காட்சியளித்து உன் தவத்தை சோதனை செய்யவே வந்தோம் என்று கூறி மதங்கர் விருப்பப்படி மோகினியாக தரிசனம் தந்து அங்கிருக்க சம்மதம் தந்தார். சிவபெருமான் காட்சியளித்து மதங்க முனிவர் விருப்பப்படி மாதங்கீஸராகவும் அன்னை மாதங்கீஸ்வரியாகவும் காட்சி தந்து அருள்.
திருமணம் தடைபட்டவர்கள் மட்டை உரிக்காத தேங்காயுடன் அஷ்டமி அன்று வந்து வழிபாடு. பின் வீட்டில் வைத்து தேங்காயை 11 மாதங்கள் பூஜித்தால் அதற்குள் திருமணம் கைகூடும். பின் மீண்டும் இங்குவந்து 11முறை வலம் வந்து அம்மன் சன்னதியில் தேங்காயை வைத்து வழிபடுகின்றனர்.
இறைவன் 16 பட்டைகளுடன் அமைந்த லிங்கம். இங்கு நாலாயிரம் அந்தணர்கள் வாழ்ந்ததால் விநாயகர் நாலாயிரத்து ஒருவர் என அழைக்கப் பட்டார். 27 நட்சத்திரங்களுக்குரிய 12ராசிகளையும் கொண்டு ராசி மண்டல குபேர ஞான வித்யா தட்சிணாமூர்த்தி சிறப்பு.
பேரூழியிலும் அழியாத இத்தலத்தில் மதங்கீஸர் தவமிருக்க மகாவிஷ்ணு மோகினி வடிவில் தோன்றி ஆசி வழங்க விநாயகர் தோன்றி மதங்கருக்கு அஷ்டமா சித்திகளை வழங்கினார். மீண்டும் தவமிருந்து அம்பிகையுடன் சிவபெருமான் காட்சி தர அம்பிகையை மகவாய் பிறக்க வேண்டி நிற்க யான் அறிவு வடிவான சித்ரூபி, ஆதலால் உனக்கு மகவாக தோன்றமுடியாது அதற்கு பதிலாக எம்வடிவான மந்திரிணியான சியாமளாதேவியை உனது மகளாகப் பிறக்கச் செய்கின்றென் என்று ஆசி , அதன் படிமதங்க தீர்த்த பொய்கையில் நீலோத்பல மலர்மேல் சியாமளாதேவி குழந்தையாகதோன்ற அவளை எடுத்து வந்து வளர்த்தார் மதங்கீஸர். பின்னாளில் ரிஷபத்தில் வந்து சிவன் மணம் முடித்தார். இந்த ரிஷப சேவை இன்றும் இராஜமாதங்கி உடனுறை மதங்கீஸர் திருக்கோவிலில் நடைபெற்று வருகின்றது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)