ஊர்:கூத்தைப்பார்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமருந்தீஸர், ஸ்ரீமத்தியார்சுனேஸ்வரர், ஸ்ரீகூத்தபெருமான்,
இறைவி: ஸ்ரீஆனந்தவல்லி.
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீமஹாமாயாகாளீஸ்வரி-54' ஸ்ரீதிருப்பெருங்காலமுடையார்-59'
5நிலைராஜகோபுரம்.
தீர்-அக்னி.
மரம்-வன்னி,வில்வம்
தி.நே-0700-1200,1700-2000
கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோவில். இராஜராஜ சோழன் திருப்பணி.
அம்மனுக்கு முதல் மரியாதை. இங்கு கூடியிருக்கும் அடியார்கள், முனிவர்கள் அனைவரும் முக்தியடைவார்களா அல்லது வாழ்வின் சூழலில் சிக்கி மீண்டும் பிறப்பார்களா எனப் பார்வதி கேட்க, நான் என நினைத்தவர்கள் பேரின்ப பேற்றினை அடைய முடியாதவர்கள். மற்ற தலங்களில் ஆடிய நடனம் போலில்லாமல் எக்காலத்திலும் சிறந்த இத்தலத்தில் ஆடும் முக்தி தாண்டவத்தை பக்தியுடன் காண்பவர்கள் முக்தியடைவர் என்றார்.
தில்லையில் ஆடிய திருக்கூத்தை ஈசன் மீண்டும் ஆடிய தலம். அன்னைக்கு-ஆனந்த, பக்தர்களுக்கு-ஞானமுக்தி, எல்லா உயிர்களுக்கு-நிருத்த தாண்டவம்-பவளசபையில்.
நாகதோஷம் நீங்கும். திருமணம் விரைவில் நடைபெரும்.
வன்னி மரத்தடியில் நந்தி கேஸ்வரர் அம்மனை பார்த்தபடி. வடக்கே பத்ரகாளி.
விச்சுவரசு கல்வி கேள்விகளிலும் ஆகமத்திலும் சிறந்து விளங்கினான். திருமணமாகி குழந்தைவேண்டி காசியில் வீரேசலிங்கத்தை நோக்கி ஓர் ஆண்டு தவம் செய்ய 8வயது சிறுவனாக வீரேசர் தோன்றி ஆண் குழந்தை பிறக்க அருள். நாரதர் அந்த குழந்தையின் 32 லட்சணங்களைப் பார்த்து 12வது வயதில் ஆண் இடி தாக்கும் எனச் சொல்லியதால் வருந்திய பெற்றோரை பார்த்து கிரகபதி தான் சிவனை நோக்கித் தவமிருப்பதாக கூறி காசி சென்று தவமிருக்க இந்திரன் வடிவில் சிவன் வந்து என்ன வரம் வேண்டுமென கேட்க சிவனியன்றி யாரிடமும் தான் வரம் கேட்பதில்லை எனக் கூற இடிவிழ அதை இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் தடுத்தான். கிரகபதி மயக்கம் தெளிந்த பின்னும் இந்திரனிடம் வரம் கேட்கவில்லை. அவன் மன உறுதியை சிலாகித்த சிவன் அவனுக்கு இடி தாக்காமலிருக்க வரமளித்தார். கிரகபதி தனக்கு திக்கு பாலகர்கள் நிலையைக் கேட்க கூத்தைப்பாரில் நதிக்கரையில் தவம் செய் என அறிவுறை. இங்கு தவமிருந்து ஈசனிடம் அந்த வரத்தைப் பெற்றான்.
பவளம் போன்ற நிறத்துடன் சிவன்- பவளநாதர்,
மருத மரங்கள் நடுவில் தோன்றியதால் மருதீசர், மத்யாணர்ச்சுனர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)