gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
சனிக்கிழமை, 20 June 2020 12:22

போசன விதி! பிட்சாவிதி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!

#####

போசன விதி!

1884. இந்த உலகத்தில் எட்டுத் திசையிலும் இறைவன் அடியவர்க்கு அளித்த உணவை அவர்கள் அமுதம் என்று ஏற்பர். ஏனெனில் உடலான ஒரு நிலத்தைப் பொருந்தி அதைப் போற்றுபவர் அவ்வாறு அதனைப் பாதுகாக்காமல் பாழாய்க் கிடக்க விரும்பமாட்டார்.

1885. அடியார் அச்சிவன் உடலுள் உயிர்க்கு உயிராய் விளங்கும் அருளை உணர்ந்தவர், உச்சிப் போதில் மனத்தில் அயர்ந்திருக்கும் தலைவனுக்குப் பிச்சை ஏற்று உண்டு வேறுபாடில்லாத ஞானம் கைவரப் பெற்று ஆசையைவிட்டுத் தனியே சகசிரதளத்தில் இருப்பர்.

#####

பிட்சாவிதி!

1886. விந்துவான விதையைச் சேமிக்க உடம்பான பாத்திரம் உண்டு. விதையை விதைப்பதற்குப் பாதுகாப்பான சக்சிரதளம் என்ற நிலம் உண்டு. ஆஞ்ஞை சக்கரமான் உச்சிக்கு முன்பு தியான்மான வடிவு அமைந்தது. அச்சம் இல்லாமல் மேல் முகமாய் விளங்கும் சக்சிரதளமான அந்த நிலத்தில் பொருந்திச் சமாதியான் பயனை அடைய மாட்டாதவர் விருப்பம் காரணமாய் வெளியே போய்ப் பிச்சை ஏற்ருத் திரிந்கிறார்களே என்னே!

1887. சுவாதிட்டான சக்கரத்தில் உள்ள பிரம்ம படைப்பான வீரியத்தை இறைவன் ஏற்றான். காம உணர்ச்சியால் கழியாமல் நன்மை பெற இவ்வாறு பலி கொண்டான். நான்முகனின் தலையைக் கொண்டே காமக் கலையை மேலே எடுத்துக் கொண்டு போகப் பலி ஏற்றான். நான்முகன் பரமாகவேதான் இப்படிப் பலியைக் கொண்டான்.

1888. நீக்கம் இல்லாமல் நிறைந்து ஏழு உலகையும் படைத்த இறைவனை உலகத்தார் யாசித்து உண்பவன் என்று இகழ்ந்து நகையாடுவர். அப்பொருமான் ஏன் இரக்கின்றான். இடைவிடாமல் தன்னையே எண்னிக்கொண்டிருக்கும் அடியார்கள் வீரியத்தை ஏற்று ஒளியாய் மாற்றத் தன்திருவடியை அருளினான்.

1889. சிவபெருமானை தன்னை அடியவர் வந்து அடையும் நெறியில் நின்று உதவுவான். தன் நல்ல மெய்யடியார்க்குத் தன்னை இன்பவடிவில் தர இருந்தான். அடியார்க்கு அடக்கலமாக அடையும்படி இருந்தான். இங்ஙனம் அவன் தம் வரவை நோக்கியிருத்தலால் அவனை அறியாதவன் எனக் கூறலாமோ!

1890. சிவன் அடியார் தீயை ஒத்த பசி, ஆசை, சினம் என்ற குற்றங்களில் தங்கார். உடல் இன்பத்தை அவர்கள் நாட மாட்டார்கள். இந்த உலகத்திலும் பொன்னுலகத்திலும் தங்க விரும்ப மாட்டார்கள். சிவத்தையே கூடிட விரும்புவார்கள்.

1891. உண்மையான ஆன்ம ஞனத்தைப் பெற்று அறிவில் தெளிந்தவர்களும் கொடுக்கும் வள்ளன்மை உடையவர். வாயிலுக்கே செல்வர் பிச்சைக்குச் செல்லாமல் ஈசன் செயல் என்று இருந்த தவம் உடையவர். உலகவர் எல்லாம் தம்மிடத்தே வருவதற்கு இருந்தவர் ஆவர்.

#####

Read 1319 times
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

25107445
All
25107445
Your IP: 44.200.112.172
2023-06-07 19:00

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg