ஓம்நமசிவய!
அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலி
ஒப்பிலா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்து
எப்பொழுதும் வணங்கிடவே எனையாள வேண்டுமென
அப்பனுக்கு முந்திவரும் அருட்கனியே கணபதியே!
#*#*#*#*#
25.குற்றங்கள்-தண்டனை-அரச தர்மங்கள்!
ஒருவன் தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்தால் மனமுருகிப் பிராயச்சித்தம் மேற்கொள்ள வேண்டும். தவறு செய்தவனுக்கு அவன் செய்த குற்றங்களின் தீவிரம், அதனால் ஏற்பட்ட இழப்புகளின் தன்மை, நஷ்டம் அடைந்தவர்களின் பாதிப்பு, சமுதாயத்தின் நிலை என பலவகைகளுடன் சம்பந்தப்பட்டு இருப்பதால் அதை தீர விசாரனை செய்து தண்டனை வழங்க வேண்டும்.
பிறரைக் கொல்வது, கொல்ல நினைப்பது, மது அருந்துவது, தங்கத்தை திருடுவது, பிறர் மனைவியுடன் சேர்வது ஆகிய குற்றங்கள் மகா பாதகச் செயல்களாக கருதப்படும்.
உண்மையை மறைத்து பொய்யான தீர்ப்பைச் சொன்னால் அது கொலை பாதகத்திற்குச் சமம்.
பசுவைக் கொல்வது, கோவில் காரியங்களுக்கு இடையூறு செய்தல், விபசாரத்தொழில் செய்வது, பெற்றோரை கைவிடுதல், வேதம் படித்தவர்கள் ஓதாமலிருப்பது,
பெண்களைக் கொல்வது, எளியவர்களை அழிப்பது, சிசுவதை ஆகியவைகள் குற்றங்கள்.
கருச்சிதைவு பிரமஹத்தி தோஷமாகும்
பொய் சாட்சி சொல்வது குற்றம். அவன் சொத்தில் எட்டில் ஒரு பகுதி அரசுக்கு சொந்தமாக்க வேண்டும். நீதி ஸ்தலத்தில் பொய் சாட்சி சொல்பவனுக்கு இரட்டை தண்டனை வழங்க வேண்டும்.
தான் சம்பாதிப்பதில் ஆறில் ஒரு பங்கு மக்களின் பொது நலனுக்காக அரசுக்கு செலுத்தாமலிருப்பது குற்றம்.
பிறரால் ஒப்படைக்கப்பட்ட அல்லது பொது சொத்தை தனதாக்கியவனுக்கு அந்த சொத்தின் மதிப்பைப்போல் இரண்டு மடங்கு தொகை அபராதம்.
முன் பணம் பெற்று வேலைக்கு வரவில்லை என்றால் அதற்கு தண்டனை உண்டு.
வார்த்தை தவறி நடப்பவனுக்கும் தண்டனை உண்டு.
குறிப்பிட்ட காலம் வர வேலை செய்ய ஒருவரை அமர்த்திவிட்டு இடையில் நீக்கம் செய்வது தண்டனைக்குரியதாகும்.
வரப்பு மற்றும் எல்லைகளை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளுதல் தண்டனைக்குரியது.
ஒருவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்குமாறு பேசினாலும் தண்டனை அளிக்க வேண்டும்.
இயற்கையை அழிப்பதும் நல்ல கனி தரும் மரங்களை அழிப்பதும் குற்றமே.
பெண்களை இழிவு படுத்துதல் கற்பை சூறையாடுதல் ஆகியவற்றிற்கு கடுமையான தண்டனைகள்.
அளவுகளிலும் தரத்திலும் தில்லு முல்லு செய்தல் குற்றம்.
அரசு உத்தரவுகளை நிறைவேற்றாமல் மீறுவது குற்றம்.
குற்றம் செய்தவர்களை தப்பவிடுதல் குற்றமோ குற்றம்
நியாமற்ற முறையில் நீதிபதிகள் ஒருவருக்கு தண்டனை அளித்து விட்டால் அதற்கான தண்டனை அவர்களுக்கும் அளிக்கப்படவேண்டும்.
அபராதங்களை செலுத்த தவறினால் அதற்குப் பதிலாக வேறு தண்டனைகள் வழங்கப் படவேண்டும்.
#*#*#*#*#