ஊர்:வெம்பக்கோட்டை ,வைப்பாறு நதியின் மேற்குக்கரை:
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசொக்கநாதர்
இறைவி: ஸ்ரீமீனாட்சி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீகன்னிமூலை கணபதி, ஸ்ரீசுப்ரமணி-வள்ளி, தெய்வானை, ஸ்ரீசர்ப்ப விநாயகர், ஸ்ரீதுர்கை, ஸ்ரீசனிபகவான், ஸ்ரீகாலபைரவர்
மரம்:வன்னி
தீர்: தி.நே-0700-1100,1600-2030
சிற்றரசன் தினமும் குதிரையில் மதுரை சென்று மீனாட்சியை தரிசித்து வந்தான். ஒருநாள் வழியில் நதியில் நீர் அதிகமாக செல்லமுடியாமல் வருந்தினான். அப்போது அசரீரி நாளை சூரியோத வேளையில் கருடன் வட்டமிடும் பகுதியில் இருக்கும் வன்னி மரத்தருகே எனக்கு கோவில் கட்டு என்றது. அதன்படி வெண்புள்ளான கருடன் அடையாளம் காட்டிய இடமாதலால்-வெண்புள்கோட்டை- மருவி வெம்பக்கோட்டை.
இராமர் சீதையை மீட்க இலங்கை செல்லும் வழியில் இப்பகுதி அகத்தியர் ஆசிரமத்திற்கு வந்தபோது அகத்தியர் ஆதித்திய ஹிருதய மந்திரத்தை உபயோகித்து தனது கமண்டலத்திலிருந்து கங்கையை வரவழைத்து ஆசிர்வதிக்க அந்த தீர்த்தம் ராமரின் கையிலிருந்து வழிந்தோடி வைப்பாறு ஆனது. தெற்கு வடக்காக- உத்திரவாகினியாக பிரவாகிப்பதால் கங்கைக்குச் சமம்- நீத்தார் கிரியையை இங்கு செய்வது சிறப்பு. கலைநயமிக்க சிறபத் தூண்கள். தட்சிணாயணாம், உத்ராயணாம் தொடங்கும் நாட்களில் சூரிய ஒளி மூலவர் மீது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)