ஊர்: மேல்திருப்பூந்துருத்தி.திருப்பூந்துருத்தி.தி.த-128+மு
மூலவர்:
இறைவன்:ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர், ஸ்ரீஆதிபுராணர், ஸ்ரீபொய்யிலியர், ஸ்ரீபூவனநாதர், ஸ்ரீபூந்துருத்தி உடையார்.
இறைவி: ஸ்ரீசௌந்தரநாயகி. ஸ்ரீஅழகாலமர்ந்தநாயகி,
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீசாந்ததுர்க்கை, ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள்,வள்ளி,தெய்வானையுடன்- ஸ்ரீநடராஜர்சபை, ஸ்ரீசப்த ஸ்தான லிங்கங்கள். ஸ்ரீமகாலட்சுமி
த.வி- ஸ்ரீவீணாதரதட்சிணாமூர்த்தி.
5நிலைராஜகோபுரம்+இரண்டாம் கோபுரம்+3நிலைமூன்றாம்கோபுரம்.
தீர்-சூரிய, தீர்த்தக் கிணறு.
மரம்-வில்வம்.
தி.நே-0700-1200,1800-2000
சிவபூஜை செய்ய லிங்கத்தை தேடிய சோழமன்னனுக்கு உலைக்களத்துருத்தியையே சிவலிங்கமாகக் காட்டி பூஜித்ததால் அத்துருத்தியே சுயம்பு லிங்கமாக மாறியது- திருப்பூந்துருத்தி. ஆறுகள் இரு கூறாகப் பிரிந்து மீண்டும் கூடும் இடத்தில் தலம் அமைந்தால்-துருத்தி. காவிரி, குடமுருட்டி ஆறுகளுக்கிடையில் அமைந்ததால் துருத்தி எனப் பெயர். திருவையாற்று சப்தஸ்தானத்தலம்-1/7. அப்பர் தொண்டு செய்த தலமாதலால் ஞான சம்பந்தர் வெளியில் நிற்க-நந்தி ஈசனை மறைக்க நந்தியைவிலகச் செய்து இறைவன் காட்சி. துருத்தி- காற்றுப்பை- உயிர் சக்தியான பிராணனை சகல உயிர்களுக்கும் பரவச்செய்யும் ஆதாரம் ஈசன். ஆடி அமாவாசையன்று காசி விஸ்வநாதர்- விசாலாட்சியாக கௌசிக முனிவருக்கு காட்சி- 13கங்கைகள் தீர்த்தம் அருள்- பிதுர் தோஷம் நீங்கும் தலம். இந்திரன், இலக்குமி, சூரியன், காசிபர், திருமால், வழிபட்டது. பூந்துருத்தி காடவநம்பி- அவதாரத் தலம். குரு-பரிகாரத்தலம். அப்பர் -பாடல் பெற்ற தலம். ஒரே தூணில் வெல்லேந்திய வேலவர், விநாயகர், சப்தமாதர், ஊசிமுனையில் தவம் புரியும் துர்க்கை சிறப்பு. திருமால், திருமகள் தேவேந்திரன் பூஜித்தது. காசிப முனி 13 கங்கைகளை ஆதி விநாயகர் சன்னதி கிணற்றில் வரவழைத்து நீராட்டி வழிபாடு. உடம்பெல்லாம் 1000 கண்கள்ல்பெற்ற இந்திரன் வழிபாடு. சூரியன் , விஞ்சையர் வழிபாடு.
திருப்பூந்துருத்தியில் மடம் அமைத்து அப்பர்-திருநாவுக்கரசர் தொண்டு செய்து வருவதை அறிந்த சம்பந்தர் இத்தலம் வர சம்பந்தரை சுமந்து வந்த பல்லக்கை தோள் கொடுத்து தூக்கி வந்தார் திருநாவுக்கரசர். இதை அறிந்த சம்பந்தர் பதறி பல்லக்கை விட்டிறங்கி நாவுக்கரசரை கட்டித் தழுவி தாங்கள் என் அப்பன் என்றார். பூந்துருத்தியில் விஷ்ணு பூஜை மட்டுமே போதும் என வைணவர்கள் நிறுத்தியதைக் கேள்விப்பட்ட சம்பந்தர் இறைவனை வேண்டி மாயவனார் கோவிலுக்குச் சென்று பாட திருமால் உருகி சிவலிங்கமாக மாறினார். அரி உருவே சிவ உருவானது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)