gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: கும்பகோணம்-6
படம்: Sri Nageswarar temple_thirunageswaram
தகவல்கள்:

ஊர்:திருநாகேச்சுவரம்#தி.த-146+நவ-8/9+மு.திருநாகேஸ்வரம்.சண்பகவனம், கிரிகன்னிகைவனம். 
மூலவர்:
இறைவன்: 1.ஸ்ரீநாகேஸ்வரர், ஸ்ரீநாகநாதர், ஸ்ரீசண்பகாரண்யேஸ்வரர், 2.ஸ்ரீஅர்த்தநாரீசர்
இறைவி: ஸ்ரீஅம்பாள்2சன்னதிகள் 1.ஸ்ரீபிரையணிநுதலாள், 2.ஸ்ரீகிரிகுஜாம்பிகை, ஸ்ரீகுன்றாமாமுலையம்மை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசந்திரசேகர், ஸ்ரீநடராஜர், ஸ்ரீபஞ்சலிங்கம், ஸ்ரீலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி. ஸ்ரீமங்களராகு- ஸ்ரீராகுபகவான், ஸ்ரீநாகவல்லி&நாககன்னி. ஸ்ரீமுருகன்ஒருமுகம்-4கரங்கள், வள்ளி, தெய்வானை.  ஸ்ரீசேக்கிழார், ஸ்ரீஅதிகாரநந்தி, ஸ்ரீஐயனார், ஸ்ரீபாலவிநாயகர், ஸ்ரீபாலசுப்ரமணிஸ்ரீபைரவர்
த.வி. சண்பகவிநாயகர்-சாட்சி விநாயகர். 
4புறராஜகோபுரம்-5நி.கி.ராஜகோபுரம்+5நி.உள்கோபுரம்.3பிரகாரங்கள்.
தீர்-சூர்ய,இமய,சந்திர,அக்னி,துர்கா,கௌதம,பாராசர,இந்திர,பிருகு,கண்வ,வசிட்ட.
மரம்-சண்பகம். 
தி.நே-0600-1300,1600-2030

 

சிறப்புகள்:

# 03112003-குருஸ்ரீ பகோரா பயணித்தது(4)

தொலைபேசி-0435-2463354  

சென்பக வனத்தில் சென்பக மரத்தின் கீழ் எழுந்தருளிய லிங்கம். பாற்கடலை கடைந்து பெற்ற அமுதத்தை விப்ரசித்து-சிம்ஹிகை மகன் அசுரன் சுவர்ணபான குறுக்கு வழியில் தேவ வடிவத்தில் பெற்றதால் பெருமாள் அவன் தலையை வெட்ட தலை ராகு உடல் கேதுவாக மாறியது. அமிர்தம் உண்டதால் இறக்கவில்லை. பைடினஸன் தம்பதியினர்  அந்த தலையை எடுத்து வளர்த்தனர். வளர்ந்ததும் விஷ்ணுவை வழிபட்டு மன்னிக்கவேண்டிய ராகுக்கு பாம்பு உடலை கொடுத்து, கிரகப் பதவியை கொடுத்தார் விஷ்ணு. ராகுவும் கேதுவும் எதிர் எதிர் கிரகங்கள். இராகு பூசித்தைமையால் நாகேஸ்வரம். விப்ரசித்தி மன்னன்- சிம்ஹிகை என்ற அசுரப் பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தவர். நாகவல்லி, நாககன்னி என இரண்டு மனைவிகளுடன்- மங்கள இராகு. ஞானம் தருபவர் இராகுபகவான். கண்ணாடிப் பேழையில் பாம்பு சட்டை. ராகு வெற்றிதரும் வித்தகன் நவக்கிரகத் தலம்-8/9.  (ஞாயிற்றுக்கிழமை-தோஷ நிவர்த்தி -காரிய சித்தி). தட்சன், ஆதிசேஷன்,  நந்தி, கார்கோடகன், கௌதமர், நளன், பராசர், பகீரதன், வசிட்டர், பிரம்மன், சித்திரசேனன் வழிபாடு. பெருமானுக்கு பால் அபிஷேகம் நீலநிறமாகிறது. கிரிகுஜாம்பிகை அம்மனுடன், மகாலட்சுமி, சரஸ்வதி 3 சக்திகள். காலை-குடந்தைகீழ் கோட்டம், பகல்-திருநாகேசுவரம், மாலை-திருபாம்புரம் மற்றும் நாகை காரோணம் வழிபடுதல் சிறப்பு. எல்லாத்தலங்களிலும் நாகேஸ்வரர். நல்ல மனைவி வளமான வாழ்வு அமைய வழிபாடு. சூரியன் வழிபட்டு தன் சக்தியைப் பெருதல். கௌதமர் வழிபட்டு அகலிகையை அடைந்தார். பராசமுனி வழிபட்டு பாவம் நீங்கினார். விநாயகர் வழிபட்டு கணங்களுக்கு அதிபதியானார். நளன் வழிபட்டு தன் மனைவியை பெற்றான். விசித்திரசேனன் மன்னன் வழிபட்டு நல்ல குழைந்தைபேறு பெற்றான். சேக்கிழார் திருவடி ஞானம் பெற்று திருப்பணி செய்துள்ளார். பிரமனும் பகீதரனும் வழிபட்டு புனிதமடைந்தனர். சேக்கிழார் பெருமான் இத்தலத்து இறைவனை தான் தினமும் வணங்கவேண்டும் என்பதானால் தான் பிறந்த குன்றத்தூரில் பிரதிஷ்டை செய்து வழிபாடு- வடநாகேஸ்வரம். சம்புமாரி தான் செய்து வந்த அன்றைய அறத்தை முடித்துவிட்டதால் யாசகம் தராதமுடியாத நிலையில் காளங்கி முனிவரால் சபிக்கப்பட்டு அலகை உருவுடன் 1008 சிவதலங்களில் வழிபட்டு இங்குள்ள சூர்ய தீர்த்தத்தில் மூழ்கி வழிபட்டு சாபவிமோசனம் பெற்றான். 12 மாதங்களிலும் விழாக்கள். கார்த்திகையில் பெருவிழா. அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். பஞ்சகுரோசத் தலங்கள்-1/5. எந்த நாளும்- மந்தாரை மலருடன் வழிபாடு சிறப்பு.

நைசர்க்க பலம்- நவகிரக சனியைவிட செவ்வாயும், செவ்வாயைவிட புதனும், புதனைவிட குருவும், குருவைவிட சூரியனும், சுக்கிரனைவிட சாந்திரனும், சந்திரனைவிட சூரியனும் இவர்கள் அனைவரையும் விட இராகுவும் கேதுவும் பலம் பொருந்தியவர்கள். இவர்களுக்கு சொந்த வீடு கிடையாது. எந்த ராசியில் இருக்கின்றார்களோ அந்த இடத்தின் பலன். 

ராகு-கேது தோஷம், திருமணத்தடை, பித்ரு தோஷம், களத்திர தோஷம், நாக தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்க வழிபாடு. தன் மகனான சுகர்மனைத் தீண்டிய நாக அரசன் தக்கனை பூவுலகில்  மனிதனாக பிறக்க சாபம். காசிப முனிவரின் ஆலோசனைப்படி இங்கு வந்து செண்பக மரத்தடியில் தன் இருமனைவியருடன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட சிவபெருமான் காட்சி கொடுத்து சாப விமோசனம் அருளினார். இவரே நாகநாதர். கார்த்திகை மாத பௌர்ணமி நாளில் சந்திரன் ஒளி அம்பாளின்மீது. கௌதமர் வழிபட்டு அகலிகையுடன் சேர்ந்தார். நளன் வழிபட்டு தான் இழந்தவன எல்லாம் மீண்டும் பெற்றான். சூர்ய தீர்த்தத்தில் நீரடி வழிபட்டு சந்திரவர்மன் நாய் வடிவம் நீங்கப் பெற்றான்.

சிவனை மட்டும் வணங்கிய பிருங்கி முனிவரின் சக்தியை பிரித்து விட்டதால் தன் அடியவர் துன்பபடுதலைக் கண்ட பெருமான் பார்வதிக்கு சாபமிட  அவர் இங்குவந்து தவம். அவருக்குத் துணையாக சரஸ்வதியும், லட்சுமியும் வந்தனர்.

 

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-31

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27091500
All
27091500
Your IP: 18.224.33.107
2024-04-27 04:44

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg