ஊர்: கடுவெளி#
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஆகாசபுரீஸ்வரர்.
இறைவி: ஸ்ரீ மங்களாம்பிகை
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீநிவாசபெருமாள், ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீபாலதண்டபாணி, ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீகடுவெளிசித்தர்.
மரம்: புரசுமரம்
தீர்: காவிரி
தி.நே-0700-1200,1700-2000
# 26-07-2018-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
கடுவெளி சித்தர் தவமிருந்து ஜீவசமாதி அடைந்த தலம். பூராட நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டியது.
முத்திக்கு தவமே சிறந்த வழி என்றுணர்ந்த அவ்வூரிலிருந்த மாயாண்டி புரசு மரத்தடியில் அமர்ந்து தியானம். பசிவந்தபோது கையை நீட்ட கையில் விழும் புரச இலையை உணவாக உட்கொண்டு த்வம் செய்தார். இதைப் பார்த்த ஒரு பெண் அவர்மேல் பரிதாப் பட்டு அவ்ர் கையை நீட்டும்போது உப்பிட்ட அப்பளத்தை வைக்க அது புரசு இலை என உண்ண உப்பின் ருசி அறிய தவம் கலைந்தது. இனி இங்கு இருக்கலாகாது என்று கால் போன் போக்கில் சுற்றி இரும்பை மாகளாத்தில் அரசு மரத்தடியில் அமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்தார். அப்போது அந்த ஊரில் வறட்சி ஏற்பட்டது. மன்னர் மந்திரியுடன் நகர்வலம் வரும்போது அரச மரத்தடியில் இருக்கும் இவரைப்பார்த்து மந்திரியிடம் கேட்க இவர் கடுவெளியில் இருந்து இங்குவந்து தவம் செய்கின்றார் என்றார். அவரை எழுப்பினால் பஞ்சத்தைப் போக்க வழி கிடைகும் என்று அவரை எழுப்பச் சொன்னான் மன்னர். சித்தரின் தவத்தை கலைத்தால் அவரது கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் யாவரும் பயந்தனர்.
அக்கோவிலில் நடனமாடும் பெண் அரச இலைபோன்று மாவில் உப்புசேர்த்து இலை செய்து சித்தர் பசிஎடுத்து அரச இலைக்காக கை நீட்டும்போது இந்த உப்பு மாவு இலையை அவர்கையில் வைக்க சித்தர் உண்ண ஒருநாளில் உப்பின் சுவை அவருக்கு உணர்வை ஏற்படுத்த தவம் கலைந்து எழுந்தார். அப்போது அங்கிருந்த பெண்ணைப் பார்த்து நீங்கள் கோவிலுக்கு வரவேண்டும் என்றாள். அவரும் வர சம்மதித்தார். சித்தரை வரவேற்க கோவிலில் கும்ப மரியாதை செய்தார்கள் தன் பங்கிற்கு நடண மங்கை சிவ சிந்தனையுடன் இறைவன் முன்னிலையில் நடனம் ஆடியபோது அவல் கால் சலங்கை அறுந்து விழ நடனத்தை ரசித்துக் கொண்டிருந்த சித்தர் சலங்கை அறுந்ததனால் குறை ஏற்பட்ட நடனத்தைச் சரி செய்ய அந்த கால் சலங்கையை எடுத்து நடன மங்கையின் கால்களில் கட்டினார். இதைப் பார்த்த கூட்டத்திலிருந்த ஒருவன் சித்தராயிருந்தும் மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லையே என ஏளனமாகச் சொல்ல அனைவரும் சிரிக்க அவமானமடைந்த சித்தர், வெல்லும்பொழுது விடுவேன் வெகுளியை, செல்லும்பொழுது செலுத்துவேன் சிந்தையை ,அல்லும் பகலும் உன்னையே தொழுதேன், கல்லும் பிளந்து கடுவெளியாமே! என இறைவனிடம் முறையிட பயங்கர சத்தத்துடன் சிவலிங்கம் பிளந்தது. மக்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து மன்னிக்க வேண்டினர். அரசனும் சித்தரிடம் மன்னிப்புகேட்க மனம் இரங்கிய சித்தர் எட்டும் அறிந்த உனக்கு எட்டும் அறியாத எந்தனுக்கு எட்டும் அறிந்தும் ஒன்று சேருயே எனப் பாட உடைந்த லிங்கம் ஒன்று சேர்ந்தது. உடன் அங்கு மழை பெய்தது. மக்கள் பஞ்சம் தீர்ந்தது.
பூராட நட்சத்திரக்காரர்கள் இறைவன் இறைவிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தால் தோஷம் நிங்கி நன்மை ஏற்படும்.
திருவையாறைச் சுற்றியுள்ள பஞ்ச பூதத் தலங்கள்.-நிலம்-திருவையாறு, நீர்-திருமழபாடி, அக்னி-திருநெய்தானம், ஆகாயம்- கடுவெளி, காற்று-பெரும்புலியூர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)