குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
1-1.எதை நோக்கி!
Written by குருஸ்ரீ பகோராஎதை நோக்கி!
தன் விருப்பிற்கு பிறவா கரு-உடல்-ஆன்மா தன்னைச் சுற்றியுள்ள ஆன்மாக்களுக்கு ஆனந்தம் அளிக்கின்றது. அதன் அடுத்தடுத்த வளர்ச்சி குழந்தை பருவம் முழுவதும் அதன் செயல்கள் அனைவரையும் கவர்ந்து மயக்கி மோனநிலை ஆனந்தத்தை வாரி வழங்குகின்றது, தன் நிலை உணரும் பருவம் வரை அது ஒருவரைச் சார்ந்து இயங்குகின்றது.
தன்நிலை உணர்ந்த பருவம் எய்திய உடன் தான், எனக்கு என்ற எண்ணங்கள் வளர வளர அது தன் சந்தோஷம், தனக்கு சந்தோஷம் தரும் செயல்களைத் தெரிவு செய்து, ஈடுபாட்டுடன் நாட்டம் கொண்டு செயல்பட ஆரம்பிக்கின்றது.
எல்லா உயிர்க்கும் சந்தோஷத்தை அடைய, அதைத் தேட உரிமை உண்டு. வாழ்வின் இரகசியம் அல்லவா! அது அற்புத இலக்கணம். சந்தோஷத்தை அடைய இடற்பாடுகள் ஏற்படலாம். ஆனால் அவையெல்லாம் கடந்து சந்தோஷம் காணும்போது, கடந்து வந்த இடற்பாடுகள் மறைந்து ஆனந்தம் ஏற்படுகின்றது. வாழ்வின் முடிவுவரை இந்த தேடல் தொடர்கிறது. இடற்பாடுகள், இன்னல்கள் கடந்து அடைந்த ஆனந்த சந்தோஷம் அளவில்லாதது.
நல்ல உணவு உண்டு, நல்ல நீர் அருந்தி, தீயப் பழக்கங்களைவிட்டு, நல்ல பழக்கங்களுடன் இருந்தால் எப்போதும் உயிருடன் இருக்கமுடியுமா! எப்போதும் யாரும் உயிருடன் இருக்க முடியாது. பிறகு உன் வாழ்நாளையாவது நீட்டிக்க முடியுமா! அதுவும் சாத்தியமில்லை! நீடித்து என்னபயன்! எதிர்கால சுகங்களும், இறந்தகால மகிழ்ச்சியும் உனது அனுபவமே! அப்படியானால் நான் என்னை அழித்துக் கொள்ளலாமா! தேவையில்லை!
வாழும் ஆசையில் தொடங்கி பேராசையில் வளர்த்து சிக்கலில் சிக்கித் தவிக்கும்போது உடலிலிருந்து உயிரை பிரிக்கும் எண்ணங்கள் தோன்றி வாழ்வு வட்டமாகி ஆரம்பித்த இடத்திற்கு வந்து முடிவாகின்றது. எனவே உயிரை பிரிக்கும் எண்ணங்களை விடுத்து வரும்போது வரட்டும் என வாழ்க்கைப் பாதையில் இணைந்து செல்! ஒவ்வொரு உயிருக்கும் உலக வாழ்க்கையில் வாழும் ஆசைவேண்டும். வாழ்தலின் மீது ஓர் மரியாதை உணர்வு வேண்டும். தன்மீது சுயமதிப்பு கொள்ள வேண்டும்.
நமக்கு ரோஜா மலர் வேண்டும். அதன் மனம் வேண்டும். அழகுவேண்டும். ஆனால் அதை பறிக்கும்போது அதன் முட்கள் நம்மை தீண்டும். வேதனைப்படுத்தும். அதைப்புரிந்து அதிலிருந்து விடுபட்டு நாம் மலரை நம் உணர்வுகளுக்காக, நமக்குள் ஏற்படும் சந்தோஷத்திற்காக பறிக்கின்றோம். அதுபோன்றே வாழ்வில் நமக்கு வேண்டியது வசந்தம். துன்பங்களையும், துயரங்களையும் நீக்கி வசந்தம் தரும் சந்தோஷங்களை தேடித்தேடிக் கண்டுபிடித்து, அடையவேண்டும்.
பல பருக்கைகள் கொண்ட உணவை நாம் எடுத்து உண்கின்றோம். ஒரு கல் இருந்தால் உணவில் கல் என்கின்றோம். 1000 இன்பங்களிடையே ஒரு துன்பம் வந்தாலும் அது நமக்கு சலிப்பை ஏற்படுத்துகின்றது. வாழ்வே சலிப்பு என்கின்றோம். அது சரியில்லை. கல் நீக்கி உணவு உண்பதுபோல், சலிப்பை நீக்கி வாழ்வில் சந்தோஷம் காணவேண்டும்.
சந்தோஷம் போதும் இனி எந்த சந்தோஷமும் வேண்டாம் எனக்கூறக்கூடிய நிலையில் எந்த ஒரு உயிரும் இயங்குவதாக இல்லை. எல்லா உயிர்களும் அந்த அளவில்லா சந்தோஷத்தை நோக்கியே செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. கஷ்டங்களைத் தாண்டியும் அந்த சந்தோஷத்தை அடையத்தான் நினைக்கின்றன. இது எல்லா உயிருக்கும் பொதுவான உலக நியதி.
அந்த சந்தோஷங்களை நாம் எவ்வாறு இழக்கின்றோம். ஏன் இழக்கின்றோம்! எப்படி அதை அடைய முயலுவது என்பதன் சிந்தனையே இந்த “சந்தோஷப்பூக்கள்”. ‘உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகில் சந்தோஷம் காணலாம்’ என்ற கவிஞரின் கூற்றின் உண்மையை விளக்கி, உங்களிடையே மறைந்துள்ள திறன்களை வெளிக்கொணர்ந்து, செயலாக்க, வாழ்வில் சந்தோஷம் அடைதல் என்பதை உணர்த்துவதே இதன் குறிக்கோள்.
ஒவ்வொரு உயிரின் ஆன்மாவும் வாழ்வின் ரகசியமான சந்தோஷத்தை நோக்கியே பயனிக்கின்றது. இன்னல்களிடையே தோன்றும் அந்த சந்தோஷம் அந்த ஆத்மாவின் பயணத்திற்கு வேண்டும் என்ற அடிப்படையில், ஒவ்வொரு உயிரும் அதை அடைய மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டியாக அமையட்டும் “சந்தோஷப்பூக்கள்” என்ற இந்த தொகுப்பு என்பதே இந்நூலின் ஆசிரியனின் நோக்கம்! எந்த நிலையிலும் ஆனந்தமாக இருப்பது என்பது எல்லாவற்றிலும் முக்கியமானது.
உலகில் உலவும் எந்த ஆன்மாவிற்கும் புத்தியோ அறிவுரையோ கூறி அவர்களை சங்கடப்படுத்த எண்ணமில்லாமல், அவர்கள் தம் வாழ்வின் சூழ்நிலையை, நிலையாமையை புரிந்துணர்வு கொண்டு, மனு தர்மத்தின் வெற்றி ரகசியங்களையும் தெரிந்து, அவர்களுக்குள் இருக்கும் ஆற்றலை உணர்ந்து, வாழ்வில் வெற்றி கொள்ள வேண்டும், வாழும் வலிமை அடையவேண்டும். சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும் என்பதுதான்-- “சந்தோஷப்பூக்கள்”-குருஸ்ரீ பகோராயின் நோக்கம்.
1.புரிந்துணர்வு:
Written by குருஸ்ரீ பகோரா1.புரிந்துணர்வு:
1.1. எதை நோக்கி
1.2. ஆனந்தம்
1.3. கர்மம்! காரணம்
1.4. அதிர்வுஉணர்வுகள்(பொது உணர்வு அலை,பிறவிகள்)
1.5. நிஜம்
1.6. செயல்(கர்மம்,தண்டனை-ஜீவஒளி,செயல் கர்மம்,செயல் குழப்பம்)
1.7. எவர் தவறு
1.8. பயம்(அவதாரம்,புண்ணியம்,தர்மம்)
1.9. கர்ம-பயணம்(ஜீவாதாரம்,கடமை)
சமர்ப்பணம்!
Written by குருஸ்ரீ பகோராசந்தோஷப்பூக்கள்!
(உன்னதமான நிகழ்வுகள் அனைத்து வயதினருக்கும்)
ஓம் சிவாயநமக!
யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!
சமர்ப்பணம்!
என் வாழ்க்கைப் பயணத்தில் நடந்த நிகழ்வுகளின் தாக்கங்கள், பல சிந்தனைக்குப்பின் எழுத்து வடிவம் பெற்று, பூக்களாகப் பூத்த அதை, என்னை ஆளாக்கிய, பாலும், பாசமும் ஊட்டிய பாசறை மாணிக்கங்கள் என் தாய்வழிப்பாட்டி (காலம்சென்ற) திருமதி: நாவாயம்மாள் மாரிமுத்து அவர்களுக்கும், என்தாயின் சகோதரரும், என்னை வளர்த்த தந்தையுமான (காலம்சென்ற) திரு: மா.பழனியப்பன் அவர்களுக்கும் என் நீங்கா நினைவுகளுடன் சமர்பித்து, காணிக்கையாக்கி என்றும் நன்றியுள்ளவனாக இருக்க விழைகின்றேன். பாசத்தின் பாசறை அவர்கள். அந்த பள்ளியில் வளர்ந்ததால்தான் என்னால் இதுபோன்று பாசமுடன் சிந்திக்கத் தோன்றியதோ என்னவோ! என் வாழ்நாள் முழுவதும், மறக்க முடியா அன்பை பொழிந்த, அந்த மறைந்த நல்ல ஆன்மாக்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் என்றும் எப்போதும் கிடைக்கட்டும். அந்த அன்பு பாசறையில் பூத்ததுதான் நானும் இந்த “சந்தோஷப்பூக்களும்”
முதல் கோரிக்கை!
நான் நாத்திகனில்லை! முற்றிய ஆன்மீகவாதியுமில்லை! பழமையும், புதுமையும் கலந்த ஓர் இரண்டும் கொண்டான்! என் தினசரி வாழ்நாளில் கண்ட, கேட்ட, பார்த்த, படித்த நிகழ்வுகள் என்னுள் தோற்றுவித்த உணர்வுகளின் வழி மொட்டாகி, செம்மையான சிந்தனை புரட்சிப் பூக்களாய் பூத்த, எண்ணங்களை எழுத்துக்களாய் எழுதி தட்டெழுத்தில் கோர்த்து, திருத்தி வடிவமைத்து மலரவிட்டுள்ளளேன். மலர்களில் வாசனையுள்ள, வாசமில்லா மலர்களைப்போல இந்த “சந்தோஷப்பூக்கள்”-ல் சில மணமில்லாதவையாகவும், சில மணமுள்ளதாகவும் இருக்கக்கூடும். தலையில் தூக்கி வைக்கவும் வேண்டாம்! கீழேபோட்டு மிதிக்கவும் வேண்டாம்! ஏற்றுகொள்ள முடிந்தவற்றை ஏற்றுக்கொண்டு மற்றதை விட்டு விடும்படி பணிவு கொண்டு கூறுகின்றேன். நன்றி! வணக்கம்! ----- எண்ணங்களைக் கோர்த்தவன்
இரண்டாம் கோரிக்கை!
வந்தேன், உடலடைந்தேன், சந்தோஷம்காண விழைந்தேன், வாழ்ந்தேன், சென்றேன் என்றில்லாமல் இந்த ஆத்மாவின் உடல் கொண்டு அனுபவித்த, நுகர்ந்த, அனுபவங்களை, உணர்வுகளை ஏனைய ஆன்மாவின் உடல்களும் பயனடையவேண்டும் என்ற நோக்கில் அடியார்க்கும் அடியான் எழுதி வெளியிட்டது. கேள்விப்பட்ட, படித்த ஆன்மாக்கள் மற்ற ஆத்மாக்கள் அவர்களின் சந்தோஷ வாழ்விற்கு பயனுள்ள தகவல்தரும் இந்நூலை ஒருமுறையேனும் படிக்க உதவுங்கள். வாழ்வின் சந்தோஷம்கான அனைவரும் விழையட்டும். சந்தோஷப்பூக்கள் பூத்தமுகங்களாக இவ்வுலகம் பிரகாசிக்கட்டும். அருள் அதற்கு துணையாக நிற்கட்டும் என விரும்பும் “ஆசிரியனின் ஆத்மாவின் குரல்”
மூன்றாம் கோரிக்கை!
வியாபார நோக்கின்றி, மனித வாழ்வு வளம்பெற வேண்டும் என்ற கருத்தில், இப்புத்தகம் வெளியிடப் பட்டுள்ளதால், இந்நூல் பற்றி கேள்விப்பட்ட ஒவ்வெருவரும் ஒரு பிரதியை பெற்று ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கின்றேன். மேலும் இந்நூலின் மூலம் கிடைக்கும் நிதி அனைத்தும் கோவில்கள் புணரமைப்பு, ஆன்மீகவளர்ச்சி, மற்றும் மருத்துவ பொதுக்காரியங்களுக்காக மட்டும் பயன்படுத்த ஆசிரியர் உள்ளம் கொண்டிருப்பதால் அன்பர்கள் தங்களால் இயன்ற நிதி கொடுத்து பல நல்ல செயல்கள் குறையின்றி உங்களின் பங்களிப்புடன் நடந்திட உதவிக்கரம் நீட்டுங்கள்-அடியார்க்கு அடியோன், குருஸ்ரீ பகோரா கயிலைமணி. ப.கோவிந்தராசன்.
ஆசிரியரின் முகவரி:
குருஸ்ரீ பகோரா கயிலைமணி. ப.கோவிந்தராசன்.
Naavaapalanigo Trust (Head office)
32,TelephoneNagar, Moolappalayam, ஈரோடு-638 002
32,டெலிபோன்நகர், மூலப்பளையம், ஈரோடு-638 002.
Email-இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். Ph:04242280142/9442836536.
PLvisit:naavaapalanigotrust.com தலைப்புகள் உள்ளே
1. புரிந்துணர்வு:1-9
2. வெற்றியின் ரகசியங்கள்:2-9
3. துன்பம், துயரம் நீங்க:3-18
4. சந்தோஷம்காண:1-6
5. பேரின்பம் அடைய:1-9
6. இறுதி உரை:1-3
******
சந்தோஷப்பூக்கள்
Written by குருஸ்ரீ பகோரா
சந்தோஷப்பூக்கள் (உன்னதமான நிகழ்வுகள் அனைத்து வயதினருக்கும்)
ஆசிரியன் அடியார்க்கு அடியான் குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன். |
நிறுவனத்தலைவர்
Written by குருஸ்ரீ பகோராநிறுவனத்தலைவர்: குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர் (பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல். ஈரோடு-1.
அலைபேசி-94428 36536, 75982 36536.
தொலைபேசி-0424 2280142
பொருளாளர்
Written by குருஸ்ரீ பகோராபொருளாளர்: கோ.ரவிசங்கர். பி.இ., எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்.& டி. கட்டுமானப்பிரிவு, சென்னை-600 089.
அலைபேசி-94433 55252, 87544 77252
செயலாளர்
Written by குருஸ்ரீ பகோராசெயலாளர்: மா.முத்துச்சாமி
மக்கள் செய்தி தொடற்புத் துறை (பணி ஓய்வு)
ஈரோடு-638 001. அலைபேசி-98421 04326
அறங்காவலர்
Written by குருஸ்ரீ பகோராஅறங்காவலர்: ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048
அலைபேசி-98421 268877, 97910 68877
அறங்காவலர்
Written by குருஸ்ரீ பகோராநிறுவனத்தின் அறங்காவலர்: ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்., சென்னை.
அலைபேசி-95000 83252
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.