குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
ஓம்நமசிவய!
பிடி அதன்உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!
#*#*#*#*#
59.தோஷங்கள்!
சர்ப்ப, பித்ரு, மாத்ரு, சகோதர, மாதுல, பிராமண, பத்தினி, மந்திர, பிரேத ஆகிய சாபங்களால் ஏற்படும் புத்ர தோஷங்களினால் குழந்தை பிறந்த சில நாட்களில் இறப்பது, பாசமுள்ள பிள்ளைகள் வளர்ந்து இளைஞர் / இளம் பெண்ணாக இருக்கும்போது இறப்பது, பெண் குழந்தைகளுக்கு காலங்கடந்து திருமணம் நடப்பது, திருமணம் முடிந்து குறுகிய காலத்தில் வாழாவெட்டியாக பிறந்த வீட்டிற்கு திரும்புவது, மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளையாக பிறப்பது போன்றவைகள் நிகழ்கின்றன.
முன்பிறவியில் தாய் தந்தையரை சரியாக கவனிக்காததாலும், அவர்களை வேதனைப் படுத்தியதாலும், அவர்களின் கடைசிக் காலத்தில் சரியாக பராமரிக்காமல் இருப்பது பித்ரு / பிதுரு சாபமாகின்றது. இதன் காரணமாக இப்பிறவியில் தன் தந்தையோடும் தன் பிள்ளைகளுடனும் ஒத்துப் போகமுடியாது. எப்போதும் ரத்த உறவுகளால் அவமானமும் வேதனையும் தினசரி நடக்க வாய்ப்புண்டு.
சகோதரர்களுக்குச் சேரவேண்டிய சொத்துக்களை தராமல் வஞ்சகம் செய்து எடுத்துக் கொள்வதாலும் சகோதர்களைக் கொடுமைப் படுத்துவதாலும் ஏற்படுவது சகோதர சாபம். இதனால் ஏற்படும் புத்திர தோஷம்.
சொத்துப் பிரச்சனையில் தாய் மாமனை அவமானப்படுத்தியும், சண்டை போட்டும் தாய் மாமன் சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம். இதனால் தாய்வழிப் பகையும், புத்திரர்கள் பகையும் அவமானமும் ஏற்படும். பெண் பிள்ளைகள் வாழாவெட்டியாவதும் விவாகரத்து ஆவதும் இந்த சாபத்தால் ஏற்படுகின்றது.
சாதுக்கள், மகான்கள், சிவனடியார்களை அவமானப்படுத்துவதால் ஏற்படுவது பிராமண சாபம். இதனால் ஊனமுற்ற குழந்தை பிறப்பது மூளை வளர்ச்சி இல்லாத பிள்ளைகள் பிறப்பது ஊமை, குருடு, செவிடு போன்ற குறையுள்ள குழைந்தைகள் பிறப்பதும் கடுமையான புத்திர தோஷம்.
மனைவியை கொடுமை படுத்துவதாலும் குடும்பத்தைவிட்டு வைப்பாட்டி வீடே கதி என்று இருந்து பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து விலகி இருப்பதும் குடும்பத்தைவிட்டு பிரிந்து இருப்பதும் மனைவி சாபத்தால் ஏற்படும் பத்தினி சாபம். இதனால் மனைவி மக்களால் அவமானப்படுத்தப்பட்டு பண்டாரம், பரதேசியாக பிச்சை எடுத்து கடைசிக் காலத்தில் தன்னை கவனிக்க ஆளில்லை என வருந்தி அனாதையாக இறந்து போவது ஆகும்.
மாந்தீரிகர்களைத் தேடிப்போய் தனக்கு வேண்டாதர்களுக்கு பில்லி சூன்யம் வைப்பதும் குல தெய்வத்தை மறந்து வணங்காமல் இருந்து இந்த சாபத்திற்கு ஆளாகியதனால் மருத்துவத்திற்கு புலப்படாத நோய்கள் உருவாகி சம்பாதிக்கும் பணம் முழுவதும் அதற்கே செலவழித்து குடும்ப விருத்தியில்லாமல் தொழில் அமையாமல் தொழிலில் நட்டமடைந்து, பிள்ளைகள் ஊதாரித்தனமாக நடந்து துஷ்ட பிள்ளைகளால் வரும் பிரச்சனைகளை சந்தித்து வேதனை அடைவர்.
இந்த தோஷங்கள் நீங்க பரிகாரமாக குருபகவானுக்கு வியாழன் அர்ச்சனை செய்து முடிந்தவரை அன்னதானம் செய்யலாம். எந்தக்கிரகம் புத்திர தோஷத்தை உருவாக்கியதோ அந்த கிரகத்தின் திசை அல்லது புத்திக் காலத்தில் அந்த கிரகத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு அன்னதானம் செய்யலாம். பௌர்ணமி / ஜன்ம நட்சத்திரத்தன்று குலதெய்வம் கோவிலில் வழிபட்டு அன்னதானம் செய்யலாம்.
#*#*#*#*#
ஓம்நமசிவய!
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!
#*#*#*#*#
58.ஒன்பதின் பகுப்பு- சிறப்பானது!
ஒன்பது என்பதன் பகுப்பு பல பொருள்களுக்கு அமைந்துள்ளது. உடலை ஒன்பது வாசல் கொண்ட ஆலயம் என்பர். 1லிருந்து 9வரை அனைத்து எண்களையும் கூட்டினால் வருவது 45 அதையும் கூட்டினால் வருவது 9. இந்த 9 ஐ 1+8 என எடுத்துக் கொள்ளல் வேண்டும். அதாவது முதலில் இருக்கும் ஒன்று நம்மிடம் உள்ள நிறை. அடுத்து வரும் 8 என்பது நம்முள் இருக்கும் குறைகள். படிப்படியாக நம்மில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்துவர குறை குறைந்து கொண்டுவர வர நிறை அதிகரித்துக் கொண்டு வந்து இறுதியில் முழு நிறையான 9 ஆகிவிடும்.
உலகத்தின் கண்டங்கள், சிறப்பான மேகங்கள், நவநிதிகள், தாரணை யோகம், தர்மங்கள், நவஉலோகங்கள், நவமணிகள், நவரத்தின புலவர்கள் என வாழ்க்கையில் வெற்றிபெற 9 எண்ணின் தொடர்பை முன்னோர்கள் அடிப்படையாக வைத்துள்ளனர்.
நீங்களும் வாழ்வில் சிறப்படைய 9 எண்ணின் உயர் நிலையை அடைய சுய நிலை இழக்காமல் படிப்படியாக குற்றங்களைக் குறைத்துக் கொண்டு நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒன்பது வாசல்களை அடக்கி ஒடுக்கி செயலாற்றும் திறன் கொண்டால் ஒருவன் பிரம்ம நிலையில் இருப்பவன் ஆகின்றான்.
#*#*#*#*#
ஓம்நமசிவய!
மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!
#*#*#*#*#
57.ஏழுகோடி மந்திரங்கள்!
7கோடி மந்திரங்கள் எனப் பொருள் கொள்ளாமல் ஏழு வகையான முடிவுகளைக் கொண்ட மந்திரங்கள்- எனப் பொருள் கொள்ள வேண்டும். கோடி-கடைசியில் உள்ளவை என அர்த்தம். அவை 1.நமஹா-ஐஸ்வர்யம் அளிப்பது, 2.சுவாஹா-தைரியம் கொடுப்பது, 3.சுவாதா-வசீகரம் தருவது, 4.பட்-விக்னங்களைத் துரத்துவது, 5.உம்பட்-காமாதிகளை போக்குவது, 6.வௌஷட்-தேவதைகளை இழுப்பது, 7.வஷட்-தேவதைகளை வசம் செய்வது என்பனவாகும். இந்தச் சொற்களும் சொற்களைக் கொண்டு முடியும் வரிகள் எல்லாம் மந்திரங்கள் ஆகும். மந்- நினைப்பவரை என்றும், திர-காப்பது என்றும் பொருள். எனவே மந்திரம் என்பது அதை நினைப்பவரைக் காப்பது எனப் பொருள் கொள்ளவேண்டும்.
முப்பத்து முக்கோடி தேவர்கள்!
ஆதித்தியர்-12 பேர், உருத்திரர்-11 பேர், வசுக்கள்-8 பேர், அஸ்வினி தேவர்கள்-2 பேர் ஆக மொத்தம் 33 பேர்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கோடி பரிவார தேவதைகள் உண்டு. எனவே தேவர்கள் 33 பேரை சொல்லும்போது அவர்களின் பரிவார தேவதைகளையும் சேர்த்து சொல்வதனால் 33முக்கோடி தேவர்கள் என்றானது. ஒரு கோவிலில் மூலக் கடவுளை வழிபடும்போது அங்குள்ள பரிவாரதேவதைகளை வழிபடுதல் போன்றேதே இது.
மந்திரம் கால், மதி முக்கால்!
சூரியகலை நடக்கும்போது சுவாசம் பிடரி வழிச் செல்லும். சந்திரகலை நடக்கும்போது 3/2 பாகமாகிய மச்சை(எலும்பினுள் இருக்கும் சாரம்) வழி செல்லும். இதைத்தான் மந்திரம் கால் மதி முக்கால் என்பர் பெரியோர். மந்திரம் என்பது சூரியன்- கால், மதி-சந்திரன்- முக்கால் என்பதாகும். வாசி யோகத்தை கற்றவர் ஓர் அங்குலமுள்ள நேத்திர ஸ்தானமிருந்து பகிர்முக நோக்கில் எண் சாண்(அரைமுழம்) உடலின்கண் உள்ளதை நடப்பதைப் பார்க்கலாம்.
நூறில் ஒன்று!
நூறில் ஒன்று கூடவா தேறாது என சொல்லப்படுவதைக் கேட்டிருப்பீர்கள். அப்படி பார்த்தால் கௌரவர்களின் 100 பேரில் ஒருவன் கூடவா நல்லவர் இல்லை எனக் கேட்கலாம். ஆம் நல்லவர் இருந்தனர். சூதில் தருமன் தோற்றபின் மனைவி திரௌபதியை பணயம் வைக்குமாறு சகுனி கூற தர்மன் சம்மதித்து தோற்றான். இது அனைவரும் அறிந்ததே! ஆனால் அப்போது சூதில் இதை பயணம் வை என்று எதிராளிக்குச் சொல்லக்கூடாது என்பதே தர்மம். அப்படியிருக்க சகுனி சொல்லி துரியோதனன் கேட்க தர்மன் திரௌபதியை பயணம் வைத்தது சரியாகாது. திரௌபதி பயணப் பொருளாக மாட்டாள் இது தர்மம் அல்ல என எதிர்த்தவன் விகர்ணன் என்ற துரியோதணைன் தம்பி. இந்த செயலைக் கண்டு வெட்கி தலை குனிந்து நின்றவன் இன்னொரு தம்பி யுயுத்ஸு. அன்று அரசவையிலிருந்து இவர்களை வெளியேற்றினான் துரியோதனன். யுயுத்ஸூவே சக்ரவியூகத்தில் நிராயுதபாணியான அபிமன்யு கொல்லப்பட்ட விதம் அதர்மம் எனக்கூறி போர்க்களத்திலிருந்து அப்போது வெளியேறியவன்.
#*#*#*#*#
ஓம்நமசிவய!
முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!
#*#*#*#*#
56.ஓம்சாந்தி 3முறை ஏன்!
மனித வாழ்வில் சந்திக்கும் இடர் துன்பங்களுக்கு மூலகாரணங்கள்
1.ஆதிதெய்வீக- நம் கட்டுப்பாட்டில் இல்லாத தெய்வீக சக்திகளால் ஏற்படும் புயல், வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகள்,
2.ஆதி பௌதிக-மனிதருக்குள் ஏற்படும் துன்பம், போராட்டம், கலவரங்கள், ஆசை காரணமாக ஏற்படும் ஆபத்துகள்,
3.ஆத்யாத்மிக- மனித உடல், மனம் சார்ந்த நோய்கள், பிரச்சனைகள். ஆகிய இம்மூன்றினாலும் தடைகள் இடற்பாடுகள் ஏற்படக்கூடாது என்பதால் மூன்றுமுறை ஓம் சாந்தி சொல்லப்படுகின்றது.
#*#*#*#*#
ஓம்நமசிவய!
யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!
#*#*#*#*#
55.மரம் ஏன் வளர்க்க வேண்டும்!
மரம் என்றால் எதாவது ஒரு மரத்தை நிழலுக்காக அல்லது கட்டிடத்தின் முன் அழகு படுத்த வளர்க்கலாம். ஆனால் இங்கே சொல்லப்படுவது ஒருவருடைய நட்சத்திரத்திற்குரிய மரத்தை தன் சொந்த இடத்தில் நட்டு வளர்க்க வேண்டும். அதன் பலன்கள்- அந்த மரம் வளர வளர அவருடைய வாழ்வு வளம் பெரும். மரம் வளர்ப்பவருடைய பாவக் கதிர்களைக் கிரகித்துக்கொண்டு ஓர் ஒப்பற்ற அற்புதமான ஆன்மீகத் தொடர்பை செய்ய வல்லது. அவருடைய தோஷங்களை அந்த மரம் ஈர்க்கும் தன்மையுடையது. அந்த மரம் பூத்துக் குழுங்கும்போது அவரின் வாழ்வு செழிப்பான நிலையில் இருக்கும். கர்ம வினைகள் குறைந்து விடும்.
நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயாளிகள் பன்னீர் மரக்கன்றையும், வெண்குஷ்டத்தால் பதிக்கப் பட்டவர்கள் புளிய மரக்கன்றையும், ஆஸ்மாவினால் பதிக்கப் பட்டவர்கள் முசுக்கொட்டை மரக்கன்றையும், தோல் சம்பந்தமான நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வேப்ப மரக்கன்றையும், மூலநோயால் பாதிக்கப் பட்டவர்கள் நாவல் மரக்கன்றையும், இதயநோயால் பாதிக்கப் பட்டவர்கள் அரச மரக்கன்றையும், வயிறு சம்பந்தமான நோயால் பாதிக்கப் பட்டவர்கள் புன்னை மரக்கன்றையும், காதுநோயால் பாதிக்கப் பட்டவர்கள் கடுக்காய் மரக்கன்றையும், சிறுநீரகக் கோளாறு நோயால் பாதிக்கப் பட்டவர்கள் பனை மரக்கன்றையும், தொழுநோயால் பாதிக்கப் பட்டவர்கள் பூவரசம் மரக்கன்றையும் நட்டு வளர்த்து வருவது நோய்கள் விரைவில் நீங்கி நலம் பெறலாம் என விருட்ச சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
#*#*#*#*#
ஓம்நமசிவய!
ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை
முக்கட் கடாயானை முன்!
#*#*#*#*#
54.நிலத்தின் தன்மையை அறிவது எப்படி!
பால், மலர், கிழங்கு, நீர் போன்ற மணம் வீசும் நிலம் / மண் பெரிய கட்டிடங்கள் கட்ட பயன்படும்.
புன்னை, ஜாதிமுல்லை, தாமரை, தானியங்கள், பாதிரிப்பூ, பசு போன்ற வாசம் வீசும் நிலங்கள் வீடு கட்ட உகந்தது.
தயிர். நெய், எண்ணெய், ரத்தம், மீன் போன்ற வாடை வீசினால் கட்டிடம் கட்ட விலக்கப்பட்ட நிலங்களாகும்.
மாயானம். பள்ளமான நிலம், யுத்தம் செய்த இடம், கோவில் புற்று இருந்த இடம் ஆகிய இடங்களில் வீடு கட்டுவதை தவிர்க்க வேண்டும்.
கோவில், கோவில் கோபுரம், அரசு, வன்னி, எருக்கு, வில்வம் ஆகியவற்றின் நிழல் விடுகளில் படக்கூடாது.
நிலத்தை கொத்தும்போது அல்லது குழி தோண்டும்போது யானை, குதிரை, மூங்கில். வீணை, சமுத்திரம் ஆகியன எழுப்பும் ஓசை கேட்டால் அந்த பூமி/ நிலம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
புதிய விவசாய நிலத்தை உழுது தனியங்களை பயிர்செய்து, பயிர் விளைந்த நிலையில் பசுக்களைவிட்டு மேய விட்டால், பசுக்களின் சிறுநீர், கழிவுகள் மற்றும் வாயில் இருந்து வரும் நீர், நுரை ஆகியவை பூமியில் கலப்பதனால் அந்த பூமியின் சகல தோஷங்களும் நீங்கும். நுண்ணுயிரிகள் பல்கிப் பெருகி நிலத்தை வளப்படும்.
#*#*#*#*#
ஓம்நமசிவய!
களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்!
#*#*#*#*#
53.சகுனங்கள்!
சகுனங்கள் இறைவன் ஆத்மாக்களுக்கு காட்டும் முன்னறிவிப்புகளாகும். பறவைகள் தென்படும் நேரம், திசை, இடம், சத்தம், ஓசையின் இயல்பு, பறவையினம் ஆகியன கொண்டு சகுனங்கள் தெரிந்து கொள்ளலாம்.
நல்ல சகுனங்கள்-
ஆணின் வலது கண், தோள் துடிப்பதும், பெண்ணுக்கு இடது கண், தோள் துடிப்பதும் நல்லது நடக்கப்போகிறது என்பதன் முன்னறிவிப்பாகும்.
வீட்டை விட்டு வெளியில் முக்கியமான காரியத்திற்கு செல்லும்போது கறுப்பு நிறமில்லதா தானியங்கள், பஞ்சு, வைக்கோல், சாணம், நாணயங்கள் பார்த்துச் செல்லல் நல்ல சகுனம். எதிரில் திருமணமான சுமங்கலிகள், பசு, பால்விற்பவர்கள் இவர்களைப் பார்த்தால் நல்லது.
வெளியில் புறப்படும்போது எதிரிலோ, இடது புறத்திலோ மயில் வந்தால் நல்ல சகுனம் வெற்றி நிச்சயம்.
வெளியில் புறப்படும்போது காக்கையின் குரல் இடது புறம் கேட்டால் நன்மை.
காக்கை சேற்றில் மண்ணை கிளறுவது, அசுத்தங்களைக் கொத்திக் கொண்டுவந்து அருகில் போடுவது நன்மை பயக்கும் சகுனங்கள்.
ஒரு வீட்டின் முன் காக்கை அமர்ந்து கரைந்தாலோ அல்லது நடை பயின்றாலோ அது விருந்தாளிகள் வருவதைக் குறிக்கும் சகுனம்.
சிவப்பு அல்லது மஞ்சள் நிறப் பொருளை காக்கை கொண்டுவந்து வீட்டின் முன் போட்டால் அது பணம் அல்லது பொருள் வரவுக்கான சகுனம்.
இரவு நேரத்தில் வீட்டின் எருமை உறுமினால் நன்மை.
கறவைப் பசுவும், எருமையும் தன் முன்னங்கால் குளம்புகளால் பூமியைத் தோண்டுவதும் கொம்புகளில் மண் ஒட்டிக் கொண்டிருத்தலும் நன்மை பயக்கும்.
குதிரை உடலைச் சிலிர்த்து தலையை உதறி உக்கிரமாகப் பார்த்தல் நன்மை.
வெளியில் புறப்படுபவர்கள் எதிரே வரும் அல்லது பார்க்கும் வெண்ணிற மலர்கள், நீர்க் குடங்கள், வயோதிகர்கள், ஆடு, பசு, காளைமாடு, கன்றுடன் கூடிய பசு, சவம், சந்தனம், தானியம், பொரி, எள், சலவைத் துணி, மாமிசம், நெய், குதிரை, யானை, தீப்பந்தம், பசும்புல், பணிவான உறவுகள், தங்கம், வெள்ளி, ரத்தினங்கள், பழங்கள், தயிர், கண்ணாடி, பால், கரும்பு சங்குசப்தம், கருடன் சத்தம் கேட்டாலும், காடை, காக்கை இடமாக பறந்தாலும், ஆகியவற்றை காண்பது நல்ல சகுனம்.
ஒருவன் தூங்கி எழுந்ததும் தாமரைப்பூ தீபம், தணல், தன்னுடைய உள்ளங்கை, மனைவி, மிருதங்கம், கருங்குரங்கு, கண்ணாடி, சூரியன், கோபுரம், சிவலிங்கம், சந்தனம், கடல், வயல், மலை ஆகியன பார்ப்பது மிகமிக நன்மை பயக்கும்.
தீய சகுனங்கள்- அப சகுணங்கள்
ஆணுக்கு இடது கண், தோள் துடிப்பதும், பெண்ணுக்கு வலது கண், தோள் துடிப்பதும் என மாறினால் அது கெட்ட சகுனமாகும்.
வெளியில் செல்வோரை எங்கே போகிறாய் என்று கேட்கக்கூடாது. அபசகுனம்.
மருந்து கடைக்காரன், மருந்து வாங்கி வருபவன், கசாப்புக் கடைக்காரன் எதிரில் வருவது அபசகுனம்.
ஆடை நழுவுதல், குடை விழுதல், கால் தடுக்குதல், தடுமாறுதல், இழுத்துக் கொள்ளுதல் ஆகியன எதோ பிரச்சனை நிகழப்போகிறது என்பதை முன்னரே அறிவிப்பவை.
பறவைகள் இயல்பிற்கு மாறாக இயங்குவது தவறான சகுனமாகும். இரவில் கத்தும் ஆந்தை பகலில் கத்துவதும் பகலில் கத்தும் காக்கை இரவில் கரைவதும் தீய சகுனங்கள்.
வெளியில் புறப்படும்போது மயில் அகவல் குரல் கேட்டால் உடமைகள் களவு போகும் என்பது சகுனமாகும். காக்கையின் குரல் வலது புறம் கேட்டால் அது தீமை. தவளை கண்டபடி கத்தினால் தீமை. மான் வந்து குதித்து விட்டுச் சென்றால் மரணம் வருவதைக் குறிப்பதாகும்.
அண்டங்காக்கை ஒருவரது நிழலையோ அல்லது அவரது துணியையோ கொத்தினால் அது அபசகுனம். தீமைகள் ஏற்படும். கவனமுடன் இருக்க வேண்டும்.
மான், கிளி, நாய், மூஞ்சுறு, ஆகியன வலமிருந்து இடம் போனால் அபசகுனம்.
நரி, குரங்கு, மாடு, எறுமை ஆகியன இடமிருந்து வலம் போனால் அபசகுனம்.
நாய் ஊளையிடுவது அபசகுனம்.
வெளியில் செல்லும்போது வளர்ப்பு நாய் இடது கையையோ, வலது பக்கத்தையோ முகர்ந்து பார்த்தல் அபசகுனம். எதிரில் விறகு வண்டி ஒற்றை பிராமணன் வந்தால் சகுனம் சரியில்லை.
வளர்க்கும் பசு அபயகரமாக அலறினால் அது கெடுதல்.
குதிரை நீரில் மூழ்கினாலோ, கால் தடுக்கி விழுந்தாலோ, கண்களில் நீர் வடிய எஜமானின் காலை நக்கினாலோ அபசகுனம்.
யானை மதம் கொண்டு ஓடுதல் அரசுக்கு அபசகுனம்.
பாம்பு, பன்றி, முயல், எண்ணெய்த்தலை, அவிழ்ந்த தலை, சதா திரிபவன், ஈரத்துணி, அரளி/கனகாம்பரம் போன்ற சிவந்த புஷ்பங்கள், உப்பு, இடருதல், துணியவிழ்தல், அழுகை, கலகம், தும்மல், தடைவார்த்தை கேட்டல் ஆகிய சகுணங்கள் கண்டால் காரியம் ஜயம் உண்டாகாது.
ஆபரணங்கள்-சகுணம்!
ரத்தினங்கள், முத்து, நீலம், வைடூர்யம், இந்திர நீலம், சந்திரகாந்தக் கல், சூர்ய காந்தக் கல், ஸ்படிகம், புஷ்பராகம், ராஜபட்டம், ராஜமயம், ஜோதிராம் ஆகிய ரத்தின வகைகள் அணிந்தால் செழிப்பான வாழ்க்கை அமையும். அவை நல்ல நீரோட்டத்துடன் உட்புறம் ஒளி வீசுவதாகவும், குற்ற மற்றதாகவும், நன்கு பதிக்கப்பட்டிருத்தலும் வேண்டும். பிளவு பட்டிருத்தலோ, ஒளி மங்கியதாகவோ, சொர சொரப்பான தன்மை உடையதாகவோ இருக்கக்கூடாது.
கந்தகம், முத்துச் சிப்பி, கோமேதகம், ருத்திராட்சம், பவளம், மாணிக்கம் ஆகியவற்றை தங்கத்தில் பதித்து அணிந்தால் வெற்றிகள் கிட்டும்.
மரகதக் கல் கிளியைப் போன்ற நிறத்துடன் குளிர்ச்சியானதாக இருக்க வேண்டும். பத்ம ராகம் பிரகாசமானதாயும் முத்துக்கள் உருண்டையாயும் வெண்மை நிறத்துடனும் இருந்தால் மிக விசேஷம்.
#*#*#*#*#
ஓம்நமசிவய!
மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!
#*#*#*#*#
52.கனவுகளின் நன்மை தீமை பலன்கள்!
கனவு கான்பது மனித இயல்பு. அவற்றிற்கு பலன்களும் உண்டு. தூங்கும்போது ஏற்படும் கனவிற்கு நற்பலன்களும், தீயபலன்களும் ஏற்படலாம்.
நற்பலன்தரும் கனவுகள்-
மலையின் மீது ஏறுதல்
குதிரை-யானை-காளை இவற்றின்மீது சவாரி செய்தல்
வெள்ளை நிறப் பூக்கள் பூத்துக் குலுங்குதல்,
கேசம் நரைத்துப் போயிருத்தல்,
வெள்ளை நிற ஆடைகளை அணிந்திருத்தல்,
பசு, எருமை, பெண்குதிரை, சிங்கம், யானை ஆகியவற்றிடம் பால் அருந்துதல்,
கையில் கத்தியுடன் நடத்தல்,
பெரியோர், தேவர்களிடம் ஆசி பெறுதல்,
பசுவின் கொம்பிலிருந்து கொட்டும் நீர் தெளிக்கப்படுதல் ஆகியன வரப்போகும் நன்மைகளை உணர்த்துபவை.
மரணம், விபத்திற்கு ஆளாதல்,
அரசின் பரிசு பெறுதல்,
குதிரை-யானை-காளை இவற்றைக் காணுதல்,
அரச சபைக்குச் செல்லுதல்,
உறவினர்கள் சேர்க்கை,
கொடி மரத்தில் ஏறுதல்,
மேல் மாடியில் நடத்தல்
நிர்மலமான ஆகாயம் பார்த்தல்,
காய் கனிகளுடன் இருக்கும் மரங்கள் ஆகியன மன மகிழ்ச்சியுடன் நன்மை தருபவை.
சிரச்சேதம், சந்திரக்கலையிலிருந்து விழுதல், சிங்காசனத்தில் அமர்ந்து முடி சூடுதல் ஆகியன அரசுப் பதவிகளைக் கொடுக்கும் கனவுகள்.
ஆணின் வலது கண், தோள் துடிப்பதும், பெண்ணுக்கு இடது கண், தோள் துடிப்பதும் அதிர்ஷ்டம் வரப்போகும் அறிகுறிகள்.
தீய பலன்தரும் கனவுகள்-
நாபி தவிர மற்ற இடங்களில் தாவரம் வளர்ந்திருப்பது போல காண்பது,
மொட்டைத்தலை,
சேறு படிந்த உடல்,
நிர்வாண உடல்,
உயரமான இடத்திலிருந்து கீழே விழுதல்,
தொட்டிலில்படுத்து ஆடுதல்
கம்பி வாத்தியங்கள் இசைத்தல்,
இறந்த பாம்பு வழியில் கிடத்தல்,
செந்நிறப் பூக்கள்: பூத்து குலுங்கள், ஆகியன வரப் போகும் துன்பத்தை தெரிவிப்பன.
கரடி, கழுதை, நாய், ஒட்டகச் சவாரி,
சந்திர சூரியர்கள் நிலை பெயர்தல்,
மீண்டும் கர்ப்ப வாசம் அடைதல்,
சிதையில் எரிதல்,
பூகம்பம் போன்ற பேரிடர்கள்,
மூத்தோர் சினத்திற்கு ஆளாகுதல் ஆகியவை துன்பத்தை அளிப்பவை.
ஆணின் இடது கண், தோள் துடிப்பதும், பெண்ணுக்கு வலது கண், தோள் துடிப்பதும் துன்பத்திற்கான அறிகுறிகள்
இது போன்ற தீய கனவுகள் கண்டால் விழித்தெழுந்து கைகால்கள் முகம் கழுவி கிழக்கு முகமாக அமர்ந்து இறைவனை- சிவனை ஓம் என்ற பிரணவம் உச்சரித்து தியானம் செய்து பின்னரே உறங்கத் தொடங்க வேண்டும். அப்போது அதன் பாதிப்புகள் குறையும்.
#*#*#*#*#
ஓம்நமசிவய!
பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!
#*#*#*#*#
51.உற்பாதங்கள்-இடைஞ்சல்கள்!
இடைஞ்சல்கள் மூன்றுவகைப்படும். திவ்ய, அந்தரிக்ஷ, பௌமம் உத்பாதங்களின் விளைவு ஒருவார காலம் நீடிக்கும். இதற்கு பரிகாரமாக வேள்விகள் செய்யலாம். அப்படிச் செய்யாவிடில் உத்பாதங்களின் விளைவு நெடுங்காலம் நீடிக்கும்.
திவ்ய-தெய்வீகமாய் ஏற்படுபவை. கிரகம், நட்சத்திரம் ஆகியவற்றால் பயம் ஏற்பட்டு நடக்கக் கூடாது நடந்து விடுமோ என்ற சந்தேகம்
அந்தரிக்ஷம்- பூமியின் சுழற்சியால், இயற்கை பாதிப்பால் ஏற்படுபவை. எரி நட்சத்திரபாதை, திசைகளின் விபரீத சுழற்சியால் மண்டலங்கள் வானில் தோன்றுதல், சூரிய சந்திரர் ஒளியில் மாற்றங்கள், ஆகாயத்தில் கந்தர்வ நகரம் காணுதல், ஆதீத மழை அல்லது மழை இன்மை எல்லாம் அந்தரிஷம் எனப்படும்
பௌமம்- நீர் நிலைகள், மரங்கள், பூகம்பம், பூமி அதிர்வு, எரிமலை ஆகியன பூமியின் உத்பாதம். மின்னல் சமுத்திரத்திற்கு அடியில் ஏற்படும் நெருப்பு- வடவாமுகாக்னி திடீர் எழுச்சி, சர்ப்பங்கள் மேலேறி வருதல் எல்லாம் துர் நிமித்தங்கள். மேகத்திலிருந்து விழும் மழை பாறைகள் மீது விழுந்து கீழிறங்கி பிராணிகளுக்கு நஷ்டத்தைக் கொடுக்கும்.
#*#*#*#*#
ஓம்நமசிவய!
உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்ட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.
#*#*#*#*#
50.நிமித்தக் குறி சாத்திரங்கள் (8)!
1.அந்தரிக்ஷ நிமித்தம்-சூரியன் சந்திரன், விண்மீன்கள் போன்றவற்றைக் கொண்டு நடக்கப்போகும் நன்மை தீமைகளைக் கூறுவது அந்தரிக்ஷம். இதன் மூலம் தான் பஞ்சாங்கம் கணிக்கப்படுகின்றது.
2.பௌமம்.-பூமியில் ஒரு குழியைத் தோண்டி வேள்விக்குண்டம் நடத்தி பலன்களை உரைப்பது.
3.அங்க நிமித்தம்.-மனிதன் மிருகம் ஆகிய உடல்களிலிருந்து இரத்தம் உடல் உறுப்புகளைப் பார்த்து நன்மை தீமைகளை உரைப்பது.
4.ஸ்வர நிமித்தம்-ஆந்தை அலறல், நாய் அழுதல் போன்ற குரல் ஒலிகளை வைத்து நல்லது, கெட்டது உரைத்தல்.
5.இவ்யஞ்ஜன நிமித்தம்-உடலின் நிறம் கொண்டு நன்மை தீமைகளை நிர்ணயம் செய்தல்.
6.லட்சண நிமித்தம்-உலகில் சூரியன், சந்திரன், சுவஸ்திகம், கலப்பை, ஈட்டி, தீவு, கடல், மாளிகை, விமானம், பர்ணம், பட்டிணம், கோபுரம், இந்திரக்கொடி, சங்கு, கொடி, உலக்கை, குதிரை, ஆமை, அங்குசம், சிங்கம், யானை, எருது, மீன், குடை, படுக்கை, இருக்கை, வர்த்தமானம், ஸ்ரீவத்ஸம், சக்கரம், அக்னி, கும்பம் ஆகிய 32 சுப லட்சணங்களை பார்த்து நன்மை தீமைகள் சொல்லுதல்.
7.சிந்ந நிமித்தம்-ஆயுதம், முள், எலி இவற்றால் ஏற்பட்ட வெட்டுகளைக் கொண்டு பலன் சொல்வது.
8.சொப்பண நிமித்தம்.-கனவில் தோன்றுவதைக்கொண்டு பலன் கூறுவது
#*#*#*#*#
More...
ஓம்நமசிவய!
அகரமென அறிவாகி உலகம் எங்கும் அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப்பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப் போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும் நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!
#*#*#*#*#
49. வர்ணாசிர தர்மம்!
வர்ணாசிர தர்மம் நான்கு 1. பிரம்மச்சரியம், 2. கிரஹஸ்தியம், 3. கிரஹஸ்தியம், 4. சன்னியாசம்
பிரம்மச்சரியம்
பிரம்மச்சரியம் என்பது திருமணமே புரியாமல் நித்ய கர்மானுஷ்டங்களை கடைப் பிடிப்பது ஆகும். ஒருவன் பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டுமென்றால் மனதையும் ஐம்புலன்களையும் அடக்க வேண்டும். இன்சொல்லால் பேசி அறவழியில் நடக்க வேண்டும். இறைவனுக்கு நிவேதனம் செய்த உணவை மட்டுமே உண்ண வேண்டும். இறைவன் நாமங்களையே உச்சரித்து சதா இறை சிந்தனையில் இருக்க வேண்டும்.
கிரஹஸ்தியம்
இல்லறத்தில் ஈடுபட்டு மனை மக்களுடன் இல்லற தர்மத்தை கைக்கொண்டு வாழ்வது. இறைபூஜை, அதிதிபூஜை செய்வது சிறப்பு.
வனப்பிரஸ்தம்
அரசாட்சி செய்பவர்கள் குறிப்பிட்ட காலம் வரை நல்லாட்சி செய்து உரிய காலத்தில் அரச பதவியைத் துறந்து உரியவர்களிடம் ஒப்படைத்து தன் துணையுடன் காட்டிற்குச் சென்று பற்றைத் துறந்து பகவான் பதத்தை நாடுவது ஒன்றையே குறிக்கோளாக வைத்து வாழ்வது.
சன்னியாசம்
அனைத்து உறவுகளையும் துறந்து பற்றற்ற நிலையில் வாழ்வது. கிடைத்தால் சாப்பிடுவது இல்லாவிட்டால் கிடைத்த இடத்தில் படுப்பது என்பதை ‘சத்திரா போஜனா-மடாநித்திரா’ என்பர். தனக்கு என்று எதையும் வைத்துக் கொள்ளவதில்லை. நாளைக்கு என எதையும் சேமிப்பதில்லை.
#*#*#*#*#
ஓம்நமசிவய!
வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொலுநால்வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை யாறானைத் துகளெழானைச்
செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வோம்.
#*#*#*#*#
48.பிராயச்சித்தம்!
ஒருவன் தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதே பிராயசித்தம் எனப்படும். செய்த பாவங்களை உணர்ந்தால் அவற்றிற்கு என்ன பரிகாரங்கள் எனத் தெரிந்து செய்யவேண்டும். என்ன பாவங்கள் என்ன பரிகாரம் எனத் தெரியாவிட்டாலும் தானம் தர்மம் பூஜைகளைச் செய்து வருவது புண்ணிய பலன்கள் பயக்கும்.
பன்னிரண்டு வயதுவரை குழைந்தைகள் செய்யும் பாவங்கள் பெற்றோரையே சேரும். பெற்றோர் இல்லை என்றால் அக்குழந்தைகளை வளர்க்கின்றவர்களை சேரும். இதற்குப் பிரயசித்தம் செய்து கொள்ளலாம். வளர்க்கின்றவர்கள் செய்யும் பாவங்கள் குழந்தைகளைச் சேராது.
ஜீவஹிம்சை-பிரயச்சித்தம்
ஜீவஹிம்சைக்கு பிரயச்சித்தாமாக மகாயக்ஞங்கள் செய்யவும்.
1. பிரம்ம யக்ஞம்- வேதம் ஓதுதல்
2. பித்ரு யக்ஞம்- பித்துருக்களை திருப்தி செய்தல்
3. தேவ யக்ஞம்- ஹோமம் செய்தல்
4. பூத யக்ஞம்- உதவிநாடி வருவோரை உபசரித்தல்
#*#*#*#*#
ஓம்நமசிவய!
பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.
#*#*#*#*#
47.தவறுக்கான தண்டனைகள்!
மனதால் செய்த பாவத்தை மனதாலும், வாக்கால் செய்த பாவத்தை வாக்காலும், உடலால் செய்த பாவத்தை உடலாலும் அனுபவிப்பர்.
தாமிஸிரநரகம்!
பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும் அபகரிப்பதும் பாவச்செயலாகும். அதே போல் பிறரது குழந்தையை அபகரிப்பது மகாபாவமாகும். பிறரது பொருளை ஏமாற்றி அபகரிப்பது, நமக்கு தீராத துன்பத்தைத் தரும். இதற்குத் தண்டனையாக, நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும் கதைகளாலும் நையப் புடைத்து மீண்டும் மீண்டும் இங்கு தள்ள மயங்கி கிடப்பான்.
அநித்தாமிஸ்ரநரகம்!
கணவனும் மனைவியும் சேர்ந்து மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல் தவறாகும். கணவன் மனைவியை வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும் பாவச்செயலாகும். இத்தகையவர்கள் இந்த நரகத்தில் உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிக்க வேண்டியது வரும்.
ரௌரவநரகம்!
பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுப்பது, பிரிப்பது, அழிப்பது, அவர்களின் பொருள்களைப் பறிப்பது என்பது குற்றமாகும். இதற்குத் தண்டனையாக, ஜீவன்களை சூலத்தில் குத்தித் துன்புறுத்துவார்கள். பொன் பொருளை இழ்ந்து துன்பத்திற்கு ஆளானவர்கள் நரகத்திற்கு வந்தால் அவர்களும் இவனை இம்சிப்பார்கள். காம மிகுதியினால் தன் சுக்கிலத்தை பூமியில் விட்டவன் அந்த பூமியின் தூள் ஒன்றுக்கு ஒருவருஷம் வீதம் இந்த நரகத்தில் துன்பப்படுவான்.
மகாரௌரவநரகம்!
மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவமாகும். இங்கு குரு என்ற சொல்லக்கூடிய, பார்ப்பதற்குக் கோரமான மிருகம் காணப்படும். இவை பாவிகளைச் சூழ்ந்து, முட்டி மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.
கும்பிபாகம்!
வாயில்லா விலங்குகளை , உயிர்களை வதைத்தும் பலவிதங்களில் கொடுமைப் படுத்தும் பாவிகள் அடையும் நரகம் இது. எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க் கொப்பறையில் போட்டு, பாவிகளைத் துன்புறுத்துவார்கள். பசுக்கள் மேய்ச்சலுக்குச் செல்லும் பாதையை அடைத்து பயிரிடுபவன் நூறு ஆண்டுகள் இந்த நரகத்தில் உழல்வான்.
காலகுத்திரம்-காலவெம்மை!
பெரியோர்களையும் பெற்றோர்களையும் அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும் பட்டினி போட்டும் வதைத்த பாவிகள் செல்லும் நரகம் இதுவாகும். தன்னாலவது பிறராலாவது தானம் செய்ததும், பிராமணர் உழைப்பில் சம்பாதித்ததுமான நிலத்தை அநியாயமாக அபகரித்தவன் சந்திர சூரிய காலம் இருக்கும்வரை இந்த நரகத்தில் துன்பப்படுவான். மேலும் அவனது புத்திரபௌத்திரரும் பூமியும் செல்வமும் சந்ததியும் அற்று பரமதரித்திரத்தை அடைவார்கள். இங்கு அக்னியும் சூரிய வெப்பமும் கொளுத்தி வாட்டும் போது அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கப்படுவது உறுதி.
எவன் கங்கை நீரைக் கையில் எடுத்துக் கொண்டு பொய்யை சொல்கின்றானோ அவன் பிரமனின் வயது காலம் வரை காலசூத்திரத்தில் உழல்வான் என சிவன் பிரதிக்ஞை செய்துள்ளார்.
அசிபத்திரம்- வாளலகு!
தெய்வ நிந்தனை செய்தவர்களும் தர்மநெறியை விட்டு அதர்ம நெறியைப் பின்பற்றியவர்களும் அடையும் நரகம் இது. இங்கு பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு அவதிப்படுவார்கள். இனம் புரியாத ஒரு பயம் உண்டாகும். வாளலகு என்ற ஒருவகை இலையினால் செய்யப்பட்ட சாட்டையால் அடித்து துன்புறுத்துவார்கள். அடிக்கும்போது அங்குமிங்கும் ஓடி கால் இடறி கீழே விழுந்தால் அசிபத்திரம் கத்தியினால் உடலில் கீரி துன்பப்படுவர். மாட்டு மந்தைகள் இருக்குமிடம், தடாகம் ஆகியவற்றை ஆக்கிரமித்து உபயோகிப்பவன் பதினான்கு இந்திரன் ஆயுட்காலம்வரை இந்த நரகத்தில் கிடப்பான்.
பன்றிமுகம்!
குற்றமற்றவரைத் தண்டிப்பது கொடுமையாகும். நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத் துணைபோவதும் அதர்மமாகும். இந்த நரகத்தில், பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் ஒரு வகை மிருகம் காணப்படும். அதன் வாயில் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் அவதிப்படுவார்கள். உண்ணத் தகுந்ததை உண்னமுடியாமல் உண்ணத் தகாததை உண்ணும் பன்றியைப் போல் உண்பான்.
அர்த்தகூபம்-பாழுங்கிணறு!
உயிர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமையாகக் கொலை செய்தல் ஆகிய குற்றங்கள் புரிந்த பாவிகள் அடையும் நரகம் இது. கொடிய மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும். விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும்.
அக்னிகுண்டம்!
பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து வாழ்ந்த பாவிகள், பலாத்காரமாக தனது காரியங்களை நிறைவேற்றிக் கொள்பவர்கள் இந்த நரகத்தை அடைவார்கள். பிறர் சொத்துக்களின்மேல் ஆசைக்கொண்டு ஆக்கிரமிப்பு, வயலில் வரப்பை தள்ளிப் போடுதல், எல்லைக் கற்களை மாற்றி தன் எல்லையை அதிகரித்துக் கொள்ளல் ஆகியன குற்றமே. இங்கு பாவிகள் ஒரு நீண்ட தடியில் மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னிகுண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள். கிணறு, குளம் ஆகியன பாழடைந்து சிதிலமாக இருந்தும் அதைச் சீர்படுத்தாமல் வேறு கிணறு, குளம் வெட்டுதல் குற்றமே. அவர்கள் இந்நரகத்தில் துன்புறுத்தப்படுவார்கள்.
வஜ்ரகண்டகம்!
சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடையும் நரகம் வஜ்ர கண்டகம். நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக் கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்ப்பந்திக்கப் படுவார்கள்.
கிருமிபோஜனம்!
தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் சுரண்டிப்பிழைத்த பாவிகள் இங்குதான் வரவேண்டும். பிறவற்றைத் துளைத்துச் செல்லும் இயல்புடையது கிருமிகள். இந்த நரகத்தில், பாவிகளைப் பலவிதமான கிருமிகள் கடித்துத் துளையிட்டு துன்புறுத்தும்.
சான்மலி!
நன்மை, தீமை, பாபம் ஆகியவற்றைப் பாராமல், உறவுமுறையைக்கூடப் பாராமல் யாருடனாவது எப்படியாவது கூடி மகிழும் காதகர்கள் அடையும் நரகம் இது. இங்கு இத்தகைய பாவிகளை வஜ்ரகண்ட முள்ளாலான தடிகளாலும் முட்செடிகளாலும் எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள்.
வைதரணி!
நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்குப் புறம்பாக நடந்தவர்கள் அடையும் நரகம் இது. வைதரணி என்பது நீர் நதியல்ல. இங்கு ரத்தம் சீழும் காணப்படும். சிறுநீரும் மலம் கலந்திருக்கும். கொடிய பிராணிகள் இருக்கும். பாவிகள் இந்த நதியில் விழுந்து துன்பப்படுவார்கள்.
பூபோதம்!
சிறிதும் வெட்கமின்றி இழிவான பெண்களுடன் கூடி, ஒழுக்கக்குறைவாக நடந்து, எந்த லட்சியம் இன்றி வாழ்ந்தவன் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனை விஷமுடைய பூச்சிகள், பிராணிகள் கடிக்கும். மலம். சிறுநீர், சீழ், உதிரம் நிறைந்த நகரத்தில் தள்ளப்பட்டு அவற்றையே உண்ண வேண்டி வரும்.
பிராணிரோதம்!
பிராணிகளைக் கொடுமைப்படுத்தினால் அடையும் நரகம் இது. இங்கு கூர்மையான பாணங்களை ஜீவன்களின் மீது எய்து துன்புறுத்துவார்கள்.
விசஸனம்!
பசுக்களைக் கொடுமை செய்பவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனுக்கு சவுக்கடி கொடுத்துத் துன்புறுத்துவார்கள்.
லாலாபக்ஷம்!
மனைவியைக் கொடுமைப்படுத்தி முறையற்ற மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுக்கும் கொடியவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனும் அதே முறையில் இந்திரிய குண்டத்தில் தள்ளி அதில் அமுக்கி அதையே உண்ணச் செய்து வதைபடும்.
சாரமேயாதனம்!
வீடுகளை தீவைப்பது, சூறையாடுவது, உயிர்களை வதைப்பது, விஷத்தைக் கொடுத்துக் கொல்லுதல், மக்களைக் கொன்றுகுவித்தல் போன்ற கொடிய பாவங்களைச் செய்தவர்கள் அடையும் நரகம் இது. இங்கு விசித்திரமான கொடிய மிருகங்கள் ஜீவனை வதைக்கும். நாய்களால் கடிப்பட்டு நாய் இறைச்சியை திண்ண வேண்டி வரும்.
அவீசி!
தானம் செய்யும்போது தன் பெயரை முன்னிலைப் படுத்துபவரும், பொய்சாட்சி சொல்பவரையும் நீர்நிலைகளில் ஜீவன்களைத் தூக்கிவீசி அழுத்துவார்கள்.
பரிபாதாளம்.!
எந்தக் குலத்தில் பிறந்தவராயிருந்தாலும் மது போதையூட்டம் பானங்களை அருந்தியவர்களை இந்த நரகத்தில் நெருப்பைக் காய்ச்சி உருக்கியுள்ள எஃகிரும்பை குடிக்கச் செய்வர்.
க்ஷாரகர்த்தமம்.!
கயவன் தன்னை புகழ்ந்துகொண்டு யாரையும் மதிக்காமல் அவமரியாதை செய்பவன் இந்த நரகத்தில் தள்ளப்பட்டு தலை கீழாகப் கிடத்தப்பட்டு துன்பங்களை அனுபவிப்பான்.
ரக்ஷோகணம்.!
யாகத்திற்காக மனிதர்களைப் பிடித்து நரமேத யாகம் செய்பவர்களும் நரமாமிசம் சாப்பிடுபவர்களும் இங்கு தள்ளப்பட்டு நரப்பசுவாக கொல்லப்பட்டவர்களே இங்கு வந்து கத்தியால் இவர்களை கீறி ரத்தத்தை குடிப்பர்.
சூலப்புரோதம்.!
தீவினை புரியாதவர்களை கொலை செய்பவரும். சூலத்தினால் / கயிற்றினாலே தற்கொலை செய்து கொள்பவர்களும் இங்கு தள்ளப்பட்டு சூலம் முதலிய வற்றால் குத்தி கோர்க்கப்படுவார்கள். கொக்கு கழுகு போன்ற பறவைகள் அவர்களை கொத்தி துன்புறுத்தும்.
தந்த சூகம்.!
பம்பு முதலிய துஷ்ட ஜந்துக்களும் தேள் முதலான விஷப் பூச்சிகளாலும் பாவிகள் துன்புறுத்தப்படுவார்கள்.
வடாரோதம்.!
கூடுகளிலும், வளைகளிலும் வாழும் பிராணிகளை துன்புறுத்துபவர்கள் இந்த நரகத்தில் புகையாலும் நெருப்பாலும் விஷத்தாலும் துன்புறுத்தப்படுவார்கள்.
பர்யாவர்த்தனகம்.!
உணவருந்தும் வேளையிலும் பணி செய்யும் அதிகாரிகளை சுட்டுப் பொசுக்கவேண்டும் என்று லோப குணத்துடன் செயல்படுபவர்கள இந்த நரகத்தில் அவன் கண்களை கழுகு, காகம், முதலிய பறவைகள் கொத்த துன்புறுத்தப்படுவான்.
சுசீமுகம்!
நான் செல்வத்துடன் இருக்கின்றேன் என்ற கர்வத்துடன் இருப்பவர்கள் பிறரைப் பார்த்து தன்னுடைய பணத்திற்கு செலவு வந்துவிட்டது என்று நினைத்து முகத்தில் வெறுப்பைக் காட்டுபவர்கள், பூதம்போல பணத்தைக் காப்பவர்கள் இந்த நரகத்தில் அளவற்ற துன்பங்களை அனுபவிப்பார்கள்.
மேலும் பசுக்கள் குதிரைகளை விரோதத்தின் பேரில் கொல்வது, கனிகள் தரும் நல் மரங்களை அழிப்பது, தங்கத்தை திருடுவது, ஆண் / பெண் ஐ கடத்திச் செல்வது, தெய்வ சொத்துக்களை அபகரிப்பது, பெண்ணை பலவந்தப்படுத்துதல், பிற உயிர்க்கு விஷத்தைக் கொடுத்தல், பொருள்களின் அளவுகளிலும் தரத்திலும் தில்லுமுல்லு செய்வது, குற்றம் செய்து சிறையில் அடைக்கப்பட்டவர்களை தப்ப விடுவது, அரசு உத்தரவுகளை சரியாகச் செய்யாமால் மீறுவது ஆகியனவையும் குற்றங்களே. இவைகளுக்கும் தக்க தண்டனைகள் உண்டு.
சிரார்த்தம் செய்யும் பூமியின் உடமைக் காரனுக்கு பணம் ஏதும் கொடுக்காமல் பிதுர்களுக்கு பிண்டம் போடுபவன் நரகத்தை அடைவான். தீபத்தை ஆசனமில்லாமல் பூமியின்மேல் வைத்தால் ஏழு ஜென்மங்கள் குடிகாரனாகவும், புத்தகத்தை பூமியின்மேல் வைப்பவன் பிறவி முடிவில் குஷ்டரோகியாகவும், முத்து, ரத்தினம், தங்கம் ஆகியவற்றை பூமியின்மேல் வைப்பவன் ஏழு பிறவிகளுக்கு அந்தகனாகவும், சிவலிங்கத்தை மண்மீது வைப்பவன் நூறு மன்வந்திரம் புழுக்களைத் திண்பவனாகவும், சங்கு, மலர்கள், கோரோசனம், சந்தனம், கற்பூரம், மலர்மாலை, ஜபமாலை, ருத்திராட்சம், தர்ப்பை ஆகியவற்றை பூமியின்மேல் வைப்பவன் மன்வந்திர காலம் நரகத்திலும், கிரகண காலத்தில் பூமியை வெட்டுபவன் மகாபாபியாகவும் உறுப்புகள் குறைந்தவனாகவும், யாகஞ் செய்ததனால் உண்டாண உஷ்ணத்தை பாலினால் நனைக்காதவன் ஏழு பிறவி உஷ்ணத்துடன் அல்லல் படுபவனாகவும் இருப்பார்கள்.
#*#*#*#*#
ஓம்நமசிவய!
ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.
#*#*#*#*#
46.கிரகங்கள் பாதிப்பிலிருந்து விடுபட!
கிரகங்கள் அமைதியான வாழ்க்கை, செல்வம், உடல் நலம், நீண்ட ஆயுள், மழை வளம் என அனைத்தையும் தருபவன. எனவே அவைகளை ஆராதிக்க வேண்டும். வேள்வி செய்யலாம். கிரகங்களை ஆராதித்து வழிபடுவதால் அவற்றின் பாதிப்பிலிருந்து விடுபட முடியும். கிரகங்களின் மூல மந்திரம் தெரியாவிடினும் அந்தந்த கிரகங்களின் காயத்ரி மந்திரத்தை சொல்லி பயன் பெறலாம்.
சூரியன், சந்திரன், அங்காரகன் எனும் செவ்வாய், புதன், பிரகஸ்பதி என்ற தேவ குருவாகிய வியாழன், சுக்கிரன் என்ற வெள்ளியாகிய அசுர குரு, சூரியனின் மகனான சனி, ராகு-கேது என்ற நிழற் கிரகங்கள் ஆகிய ஒன்பதும் நவகிரகங்கள்.
ஒரே ராசியில் சனி, செவ்வாய், ராகு, சூரியன் சஞ்சரித்தல் திடீரென அசம்பாவிதங்கள் நடைபெறும். மக்கள் சமுதாயமே நலிவடையும்.
சூரியன் சில காலம் தெரியாவிட்டாலும் புகையுடன் தெரிந்தாலும், வானில் தூமகேது, எரிநட்சத்திரம் தெரிந்து விழுந்தாலும் இவைகள் எல்லாம் துர் நிமித்தங்கள்.
ஒவ்வொரு நட்சத்திரதிற்கும், கிரகங்களுக்கும் துர் நிமித்தங்களை மாற்றியமைக்கவோ அல்லது தீவிரத்தைக் குறைக்கவோ ஆற்றல் உண்டு. அதற்கு வேள்வி ஆகுதிகள் செய்ய வேண்டும்.
அமைதியான வாழ்க்கை, செல்வம், உடல் நலம், நீண்ட ஆயுள், நாட்டில் பசுமைக்கு நல்ல மழை என்ற அனைத்தையும் இவைகளே கொடுப்பதால் இவைகளைத் திருப்தி படுத்த வேள்விகள் வழிபாடுகள் செய்ய வேண்டும்.
சூரியன் உருவத்தை செம்பிலும்-எருக்கு சமித்துடன், சந்திரனை ஸ்படிகத்திலும்-பலாசமித்துடன், அங்காரகன் எனும் செவ்வாய் உருவத்தை சிவப்பு நிறத்திலும்-கருங்காலி சமித்துடன், புதன் உருவத்தை சந்தன மரத்திலும்-நாயுருவி சமித்துடன், வியாழன் என்ற பிரகஸ்பதியை தங்கத்திலும்-அரசு சமித்துடன், சுக்கிரனை வெள்ளியிலும்-அத்தி சமித்துடன், சனி-வன்னிசமித்துடன், ராகு-அருகம்புல்லுடன், கேது-தர்ப்பையுடன் சனி, ராகு, கேது உருவங்களை ஈயத்திலும் வடித்து ஆராதனை செய்ய வேண்டும். இந்த சமித்துகளை தேன், நெய், தயிரில் தேய்த்து கோளுக்கான மந்திரங்களுடன் ஹோமகுண்டங்களில் பய பக்தியுடன் சேர்த்து முடிவில் அந்தணர்களுக்கு உணவளித்து தானங்கள் செய்தால் கிரகங்களின் பாதிப்புகளிலிருந்து விடுபடமுடியும்.
சந்தனக் குழம்பில் அந்தந்த உருவங்களை வரைந்தும் வழிபடலாம்.
#*#*#*#*#
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.