குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
ஓம்நமசிவய!
மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!
#####
அஷ்டதள கமல முக்குண அவத்தை!
2527. கவிழ்ந்த நிலையில் உள்ள சகசிர தளம் ஆன எட்டு இதழ் தாமரையில் கதிரவன், தோன்றும் கிழக்கு திசையில் இந்திரன் தென் கிழக்கு மூலையில் அக்கினி, தென் திசையில் இயமன், தென் மேற்குத் திசையில் துதிக்கின்ற நிருதி மேற்குத்திக்கில் வருணன் வடமேற்குத் திக்கில் வாயு, வடக்குத் திக்கில் குபேரன் வடகிழக்கு திக்கில் ஈசானன் ஆகியவர் எட்டுத் திக்கிலும் காவல் செய்யும்படி நியமிக்கப்பட்டுள்ளனர்.
2528. தலையைச் சூழ்ந்துள்ள சகசிரதளமான தாமரைஎட்டு இதழ்கஆளி உடையது பெருமை மிக்க இந்த மாய உடலினுள் உள்ளே சிறிய வீணாத் தண்டின் நடுவில் உள்ல சித்திரணி என்ற பெயர் உடைய சுழுமுனை நாடியில் சேர்ந்துள்ள பேரொளியை நில்னைத்து உய்யுமாறு மேல் எழுவீராக,
2529. கவிழ்ந்த நிலையில் உள்ள சகசிர தளமான தாமரையில் திங்கள் கதிரவன் அக்கினியாகிய கலைகள் மூன்று உள்ளன. அந்த மூன்றிலும் பேரொளியாய்ப் பாய்ந்து சகசிரதளத்தை விரியச் செய்து சுடர் ஒளியைப் பெருக்கி நின்றான். இறைவன். அங்ஙனம் எட்டு இதழ்களும் விரிவடைந்து வளர்ச்சி பெறத் திங்கள் கதிரவன் கலைகள் ஆகியவற்றில் பொருந்திக் காணும்போது சகசிரதளம் விரிவு அடைந்து மலர்வதில் உண்மைபோல் இருந்த உடல் கனவில் கண்டாற்போன்று இல்லையாகி விடும்.
2530. இந்த உடலில் ஆறு ஆதாரங்களின் வழியாகப் பாயும் உணர்வு என்னும் நீர் போய் அடையும் பிரமரந்திரம் என்ற குளம் ஒன்று உண்டு. இங்ஙனம் உள்ள ஆறு ஆதாரங்களையும் ஒருமுகப் படுத்துவதில் சிவகதி உள்ளது. இது மிகவும் நுண்மையான ஒளி நிலையாகும். இவற்றை ஒன்று படுத்துவதில் கூறப்பெற்ற குண்டலினியும் உள்ளத்தோடு அவற்றினும் வேறாகச் சிவமும் அங்கே உள்ளது.
2531. எட்டுத் திக்குகளும் எட்டுத் திக்குப் பாலகர்களும் அத்தேவதைகளின் ஊர்திகளும் எட்டு மூர்த்தமாய் நின்றவன் சிவன். அப்பொருமானைக் கன்மேந்திரியம் ஐந்து ஞானேந்திரியம் ஐந்து மனம் புத்தியுடன் பன்னிரண்டும் பொருந்தி நிற்கில் கவிழ்ந்துல்ள எட்டு இதழ்களையுடைய தாமரை உள்ளிருந்து வெளி முகமாய் மலர்ந்து திகழ்மும்.
2532. எட்டு இதழ்களையுடைய தாமரையில் கிழக்கு முதல் வடக்கு வரையுள்ள ஏழு திக்குகளும் சீவன் பொருந்தும் உருவ நிலைகள். பரம் என்ற நிலை எட்டாவதான ஈசான திக்கில் உள்ளது. நடுவாகிய ஒன்பதில் தத்துவங்களை முடிவு செய்யும் பரம் அபரமான சதாசிவம் இருக்கின்றது. மேல் நோக்கி நிமிர்வதில் பத்தாவதான நிலையில் ஆணவம் அற்ற ஆன்மா சிவத்துடன் பொருந்தியிருக்கும் சிறப்பான நிலையாகும்.
2533. உயிர்களின் நன்மைக்காகப் பல ஊழிகளைச் செய்யும் குனம் உடையவனே சிவக்கதிரவனும் இறைவனும் ஆவான். நன்மையைத்தரும் ஊழிகளான நிவிருத்தி முதலிய ஐந்து கலைகளில் செய்யும் சங்காரம் சீவனின் அண்டகோசத்தின் எல்லைக்குள் செய்யும் ஊழியாகும். அந்த உழியுள்ள உழியைக் கடந்த நிலையுள்ளும் இருப்பவன் சிவனே ஆவான்.
2534. பந்த பாசங்களால் சுற்றப்பட்ட உலகத்தில் எட்டுப் பெரிய வடிவாய்த் திகழும் சிவனை எட்டுத் திக்குகளிலும் திரியும் திக்கு யானைகளுடன் தேவர் கூட்டமும் தீயும் மழையும் இயங்குவதற்கு இடமான வெளியும் பரமாகாயத்தில் பற்றுக் கொண்டனவாகும்.
2535. ஒளி பெருகும் ஊற்றையுடைய தலையான மலையின் மீது ஆறு இல்லாது நிரம்பும். அரிய பிரம்மரந்திரம் என்ற குளம் ஒன்று இருக்கின்றது. அங்குச் சேறு இல்லாது அருள் வெளியில் ஆதாரங்கள் என்னும் கொடியில் மலர்ந்த சகசிரதளமான தாமரை இல்லாது ஒளிக்கற்றைகளை தலையில் சூடிய பெருமான் அணிந்து கொள்ள மாட்டான்.
2536. மனம் மொழி மெய்யாகிய முக்கரணங்களின் வயப்பட்டு நின்ற காலத்து நின்றாலும் இருந்தாலும் பலவிதமாய் உலக நிலையைப் பேசினாலும் ஐம்புலன்களை இருத்தி வேறுபாட்டைச் செய்யும் இறைவனை நாடுவர். நடக்கும் போதும் அமர்ந்திருக்கும் போதும் இறையுணர்வு உள்ளதால் சிவத்திருவை உடையவர் ஆவர்.
$$$$$
ஓம்நமசிவய!
பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!
#####
புறங்கூறாமை!
2512. மதியில் உள்ள முயல் கறையை எய்ய மணி கட்டப்பட்ட வாளை எடுத்துச் செல்பவரைப்போல் திருநீலகண்டனை காண மாட்டாதவர் உபாசாந்த நிலையை அறிவோம் என்று சொல்லித் திரிவர். இவர் எல்லாம் வீண் ஆரவாரம் செய்பவரே அல்லாமல் உள்ளத்தில் அரியாதவரே ஆவார்.
2513. கரிய நிறமுடைய காலையுடைய பருந்து வான் வீதியில் செல்லக் கடுமையான தாள்கள் நிறைந்த குளத்தில் கரிய நிறம் உடைய பாம்பு அடங்கியிருத்தல் போல் மனமே நின் பெருமையை நினைக்காது அடங்கி இருப்பாயாக. மற்றும் நீர் அருந்த முடியாத அலை கடலில் ஆறு போய் ஒடுங்குவது போலவும் மனமே அடங்குவாயாக.
2514. ` பகைவர் இற்ந்து போகப் போர் முனையில் நிலைபெற்று போர் செய்வது அற்ப அறிவுடையவர் செய்யும் ஆண்மைத்திறம் ஆகும் உபாசாந்த நிலையில் பொருந்துதலை உடையவர் செய்யும் தவம் கை கூடினால் மக்கள் விரும்பிக் கேட்டவற்றை அளிக்கும் ஒப்பற்ற தேவர் ஆவார்.
2515. சிவத்தையன்றி மற்றத் தேவரிடம் பற்றுக் கொண்டு மாறுபட்ட கருத்தை அடையாதீர். எல்லா உலகங்களுக்கும் அவரே ஒப்பில்லாத தனிப் பெருங்கடவுள் என்று எண்ணி வழிபடில் பதினெண் கணத்தவரும் உம் அழகிய அடியைக்காண வணங்கி எழுவர். அங்ஙனம் இறைவனை நாடி இன்பம் அடையலாம்.
2516. என்னைவிட எனக்கு இனிமை தரும் இறைவன் பொன்னைவிட மிக்க ஒளியுடைய துயவனை விளங்கும் எல்லாவுயிர்க்கும் உயிராய் உள்ள விகிர்தனை பொருந்தும் வகையில் மனத்தைத் திருவடியில் பதித்து நினைப்பீராக.
2517. நிற்கும் போதும் அமர்ந்திருக்கும் போதும் படுத்துள்ள போதும் மலம் அற்ற சிவனைப் பொருந்தும் வகைகளை வாயால் கூறுவராகிலும் ஐம்புல ஆசைகளைக் கொடுத்து அவற்றை ஒவ்வொன்றாய் அறியும் குணத்தையும் போக்கி ஐம்புல அறிவையும் ஒரு சேரப் பெற்று விளங்கும் சிவத்துடன் உண்மையாகவே பொருந்தி ஐம்புல அறிவையும் ஒரு சேரப் பெறும் தன்மையை அறிவீராக.
2518. உயிர்களின் உணர்வுக்கு உணர்வாய் எல்லா உலகமாய் ஏழ் உலகத்தவரும் எண்ணத் தகுந்த அறிவாய் விளங்கும் என் பெருமானாய்த் தகுதியுடையவரை அறிபவனாய் உள்ள இறைவனைத் தியானத்தில் பொருந்தியிருக்கும் ஞானியரை விண்ணுலகத்தவர் உய்வு பெறுவதற்காக விரும்புகின்றனர்.
2519. விண்ணவராலும் அறியப்படாத பெருமானை காலை வேளையில் கண் மலரால் புறத்தே காணாமல் அகத்தே பார்வையைச் செலுத்தி கண்டு எண்ணத் தகுந்த தொடர்பாக மூன்று வேளைகளிலும் இச்சாதனையைச் செய்து வந்தால் மேலான பரனாம் தன்மையைப் பெறலாம்.
2520. சிவபெருமான் தன்னை ஒப்பவர் இல்லாமல் ஏழு உலகங்களிலும் பரந்து நிறைந்துள்ளவன் அப்பொருமானின் திருவடியை அடைக்கலமாய் அடைந்த பின்பு பேரருளை அளித்த பெருமைமிக்க வள்ளலும் ஆவான். மாறுபாடு இல்லாத மனத்தை உடையவரின் அறிவுக்குள் விளங்குபவன் வாடாத சகசிரதள மலரைப் பொருந்தி நிற்கும் புகழை உடையவன் ஆவான்.
2521. எம் தந்தையான சிவபெருமானின் திருவடியைப் போற்றி என்று வணங்கினேன். அவ்வழிபாட்டுக்கு வைத்தது எந்நாளும் வீசும் ஒளியே ஆகும். அது பிராணனால் அமையும் விளக்காகும். அதனால் உடலுக்கு இன்ப நிலை அருளும் நாதம் ஒலித்தது. அப்போது தேவன் விளங்கும் திருச்சபையைப் பார்த்தேன்.
2522. சகசிர தளத்தில் இறைவன் இருப்பதைக் கண்டேன். அவ்விதம் உடலில் விளங்கும் அவனை உட்புகுந்து காண்பவர் இலர். எலும்புக் கூண்டைத் தாங்கி நிற்கும் பிரமதண்டின் வழியாக உச்சித் தொளையை அடைந்தேன். அவனது கோலத்தைக் கண்ணை மூடிக் கண்டேன். அப்போதும் உலகப் பொருள்கள் யாவற்றையும் நான் கண்டேன்.
2523. சிவபெருமானைப் புகழ்வதால் அமையும் ஞானமும் சிவானந்த தேனும் இருக்கும் சகசிர தளத்தை அறிந்து உடலைக் கடந்து நினைவைப் பதித்தவர்க்கு வனத்தை உடலாக்கும் வீரனும் அங்கு விளங்குவான்.
2524. மாண்புமிக்க மதி மண்டலத்தில் நினைவு கொண்டு நின்ற பெருந்தவத்தினரின் அறிவுக்கும் அறிவு தருபவனாக விளங்கும் சிவன் பேரின்பத்தைத் தருபவனாய் உள்ளான். அத்தகைய சிவ அறிவில் தாம் அறிவு ஒன்றுபடுவதில் உபசாந்தம் அமைந்து ஆகின்ற மலம் நீங்கியவராய்த் திருவடியின் கீழ் அமைதி பெற்றவர்.
2525. பத மூர்த்திகளான சாலோகம் சாமீபம் சாரூபம் என்னும் மூன்றையும் குற்றம் உடையவை என்று நீக்கி இன்பத்தை அளிக்க வல்ல மாயா காரியமான இருளைவிட்டு ஆணவம் அற்று எனது யான் என்னும் புறப்பற்று அகப்பற்று என்பனவற்றை அறவே நீக்கி அங்குச் சிவத்துடன் ஒன்றாய் நிலைத்திருப்பவர் சிவ சித்தர் ஆவார்.
2526. சித்தர் அகண்ட பரந்த சிவத்தைக் கண்டவர். சிவ சிந்தனையில் நின்ற தூமாயை துவா மாயையில் தோய்ந்தாலும் தாமரை இலை நீர்மேல் பற்று இல்லாது விளங்குவர். இந்தச் சீவன்முத்தர் முன் கூறிய சாயுச்சிய நிலையை அடையும் தன்னம உடையவர். மூலாதாரத்தில் விளங்கும் குண்டலினி சத்தியை வசப்படுத்தியவர். இவர்கள் சதாசிவத் தன்மை வாய்ந்தவர் ஆவார்.
#####
ஓம்நமசிவய!
உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்ட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.
#####
உபசாந்தம்!
2506. சிவஞானமே வீடுபேறு அடைவதற்கு வாயில். சிவனிடத்தில் தன் முனைப்பு இல்லாமல் அவனது திருவடியைப் பொருந்த்தியிருப்பதே பத்தி செய்வதற்கு வாயிலாகும். சிவத்தைப் பொருந்த்திச் சிவமாவதே எண்பெருஞ் சித்தி அடைவ்தற்கு வழியாகும். உயிர் வெறுப்பு இல்லாது அடங்கி இருப்பதே சத்தியை அடைவதற்கு உரிய வாயிலாகும்.
2507. காரிய உபாதி ஏழும் தூவா மயையில் இலய முறைப்படி ஒடுங்கும். காரண உபாதி ஏழும் பராகாயமான சிவத்தில் இலயம் அடையும். காரிய உபாதி காரண உபாதிகளின் வாசனை பற்று அற நீங்கினால் பெருமையுடைய உபசந்த நிலை பொருந்தும்.
2508. சிவ தத்துவத்தையும் கடந்து துரிய நிலையில் நிற்பது ஆன்மத் தூய்மையாகும். முற்படும் சாக்கிராதீத நிலையில் உடலில் பொருந்தும் பரம் வெளிப்பட்டு நிற்கும். அந்தப் பரம் தன்னில் உடனான சிவ வியாபகத்தில் நிற்பதே உபசாந்தம்.
2509. உயிர் முப்பத்தாறு தத்துவங்களின் சேர்க்கையால் ஆணவ மலத்தளையை நீக்கிக் கொள்ளுதல் கிடைத்தற்கரிய பேறான தன் இயல்பான வடிவத்தை அறிதல். தன் உண்மை அறிந்தபின் தத்துவங்களினின்று நீங்கித் தூய்மை அடைதல். அளவுபடுத்திச் சொல்ல முடியாத இன்ப நிலை பெறல். ஒளிக்கெல்லாம் ஒளியைத் தரும் சிவனிடம் அடங்கி இருத்தல் என்பவை தத்துவங்களின் மாறுபட்ட உபசாந்தம் ஆகும்…
2510. தனக்கு வாய்த்த உபசாந்தம் அமையப் போய்ப் பொருந்திய சிவமாய் ஆதலால் சிவானந்தத்தில் ஆழ்ந்து அந்த நினைவு நீங்குதலும் மௌன நிலையாகிய சுக அனுபவத்தோடு நின்று அதையும் நீங்குதல் என்பது உபசாந்தநிலை அமைவதற்கு வேண்டிய பத்துப் படிகள் ஆகும்.
2511. பரை ஒளியில் கலப்பைப் பெற்றுப் பரத்துடன் பிரிவு இல்லாமல் அலையற்ற ஆழமான கடல் நீரை ஒத்து நின்று குருவின் உபதேசத்தை உணர்ந்து சிவானந்தத்தை அனுபவிக்கும் ஆன்மா பேச்சு அற்ற பேரானந்தத்தை அடைந்து பிறவிக் கடல் நீங்கியவன் ஆவான்.
#####
ஓம்நமசிவய!
அகரமென அறிவாகி உலகம் எங்கும் அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப்பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப் போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும் நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!
#####
காரிய காரண உபாதி!
2501. துன்பத்தைத் தருவதற்கு இடமான மாயா காரிய வித்தியா தத்துவம் ஏழும் பொருந்தும் பர உபாதியான சுத்தவித்தை ஈசுவரன் சதாசிவன் விந்து நாதம் சத்தி சிவன் என்ற ஏழும் காரிய காரண நிலையினின்று நீங்கத் திருவைந்தெழுத்து அமையும். அங்ஙனம் நீங்க உயிரானது சிவமாகும்.
2502. இறை சிந்தனையால் ஆன்மாவைப் பற்றியுள்ள காரிய உபாதியான முப்பத்தாறு தத்துவங்களும் நீங்க தத்துவங்களுக்கு வேறான நின்மல நனவில் பொருந்தும் கனவிலும் நனவோடு முப்பத்தாறு தத்துவங்களும் நீங்கிய நிலையில்; உறக்கத்தை அடையாமல் அரிய இடமான துரியத்தே தங்கியிருக்கும் உயிரே தொம்பதம் ஆகும்.
2503. முப்பதமான் ஓம் என்னும் பிரணவத்தில் அகரம் உயிர் உகரம் அகந்தை இல்லாத பரம் மகரம் சிவமாய் விளங்கும். இனிச் சிவய என்பதில் உள்ள சிகாரம் சிவமாகும். வகரம் பரம் ஆகும். யகரத்தை உயிர் எனக் கூறலும் ஆகும்.
2504. உயிர்க்கு உயிராய் நீக்கம் இல்லாமல் நிறைந்து அழிவுற்றுச் சோர்வைத் தரும் காரண உபாதிகள் உயிர்களின் பக்குவ நிலையிலே உடனாய் நிற்கும். இறைவன் கருணையால் அன்றி நடுக்கத்தைச் செய்யும் ஆன்மாக்களின் ஆணவத்தை நீக்குவது இயலாது.
2505. காரிய உபாதி ஏழில் ஆணவ மலக் குற்றத்தினால் பசுத் தன்மை கொண்ட உயிர் மய்ங்கி நிற்கும். காரண உபாதியாகி ஏழில் உயிர் ஒளியை அறிவதில் மேலான சிவம் கலந்து நிற்கும். காரியமாகவும் காரணமாகவும் உள்ள இவை கற்பனையாகும். அசிபத பொருளை உணர்ந்து அனுபவிக்கும் போது அது நீங்கிய பாழில் மேலான பரன் உள்ளது.
#####
ஓம்நமசிவய!
வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொலுநால்வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை யாறானைத் துகளெழானைச்
செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வோ
#####
முப்பாழ்!
2495. மாயையின் செயலால் வித்தியா தத்துவம் ஏழினையும் ஞான விசாரணையால் அவை பொய் என்று அறிய ஆன்ம சொரூபம் விளங்கும் உடல் பிரக்ஞையும் காரணமான சிவ நிலைகள் ஏழினையும் கண்டு நீங்க ஆன்ம அறிவும் காரிய காராணங்களாய் உள்ளவற்றைக் கண்டபோது உண்டான உபாசாந்தமும் அகலும் முப்பாழும் நீங்கப் பிறவி நீங்கும்.
2496. மாயாப்பாழும் சீவப்பாழும் உபாசாந்தப்பாழும் நிலைபெற்ற பர்னின் அறிவுக்கு அப்பாற்பட்ட முப்பாழ் என்னும்ப்டி சிவசத்தியான அருளில் சீவன் அடங்கி நிற்கும் மூன்று பாழ் நிலைகளாகும். அத்தகைய தூய்மையான சிவ சொரூபத்தில் அடங்கி நிற்பதே தத்துவமசி என்ற வாக்கியத்தின் முடிவாகும்.
2497. தனக்கு ஒப்பு இல்லாத பரவிந்து ம்ண்டலத்தில் விளங்கும் தலைவனான நந்தியின் திருவடியை அடைய அதுவே நெறி என்று மாயப்பாழ் போதப்பாழ் உபாசாந்தப்பாழ் என்னும் மூன்றையும் கடந்து அதற்கு மேல் அளவிட்டு அறிய முடியாத நிலையில் மயங்கி நின்றேன்.
2498. துரியம் கடந்து சொல்வதற்கு முடியாத பாழினை அடைவதற்கு முடியாத மேலாம் நிலை என்று அறிவற்றவர் உரைப்பர். ஆனால் அறிவுடையவர் அரிய மேலாம் பாழ் என்றே வணங்குவது அரிய முப்பாழும் கடந்த நிலை என்பதை யார் அறியவல்லார்.
2499. முப்பத்தாறு தத்துவங்களும் நீங்கத் திரோதானமான நகரமும் மலமாகிய மகாரமும் நீங்கி திருவருட் சத்தியான பரை என்னும் யகார்மாகிய ஆன்மாவை உண்மையான பரநிலையின் முடிவில் சிவவச்த்தியுடன் சேர்ப்பிக்கும். ஆராய்ந்தால் அது வல்லவர் உயிர்களால் அறிய இயலாத சிவயநம என்பதன் கருத்தாகும்.
2500. மன மண்டலமே உடல் என்றும் உடலே மன மண்டலம் என்றூ கூறும் தன்மை அறிந்து அவ்விரண்டுக்கும் உள்ள உண்மையான தொடர்பை உணரும் ஞானியர்க்குத் தம்மை கீழ்படுத்தும் பள்ளமும் இல்லை. மேலாகச் செய்யும் மேடும் இல்லை. காரியப்பாழ் காரணப்பாழ் உபாசாந்தப்பாழ் என்பவை இல்லை. உள்ளமும் இல்லை. அவரிடம் பிரகிருதி நாட்டமும் இல்லை. ஆதலால் அவர் உடல் அறம் கடந்து விளங்குவர்.
#####
ஓம்நமசிவய!
பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.
#####
முக்கரணம்!
2485. தான் தங்குவதற்குரிய இடமான பருவுடல் நுண்ணுடல் காரணவுடல் என்ற மூன்றில் பொருந்திய ஆன்மா தனக்கு அந்த உடம்புகள் வேறானவை எனக் கூறும் தன்மையைப்போல சிவன் என்றும் பரம் என்றும் சீவன் என்றும் உள்ள வேறுபாட்டையும் ஒன்று என்று உணர முடியுமோ.
2486. ஒளியை உடைய கண் பார்வையைப் மேலும் ஒளியை பெறும்படி செய்து பிரணவத் தியானத்தால் மூலாதாரக் கனலை எழுப்பி சந்திரக்கலை, சூரியகலை ஒன்றாகுமாறு சுழுமுனையில் சேர்த்துத் தலைக்குமேல் உள்ள சகசிரதள வெளியில் பொருந்தித் தியானம் முதிரச் சிவபதம் பொருந்தும்.
2487. மனம் வாக்கு காயம் என்னும் முன்று கருவிகளின் சோர்வை நீங்கி அங்ஙனம் சோர்வு அடையாமல் எல்லாவற்றையும் ஒரு சேர அறியும் திறத்தைச் சிவபெருமான் தந்தான். உடம்பைப் பற்றிய சதாசத்தியான மனோன்மனி கவிழ்ந்த சகசிரதளத்தில் நின்றுவிட அதன்மேல் விரிந்த சகசிரதளத்தில் உன்மனி கலையில் சமாதி பொருந்தும்.
#####
முச்சூன்ய தொந்தத் தசி!
2488. அது என்ற தத்பதம் நீ என்ற தொம்பதம் அதுவாக ஆகிறாய் என்ற அசிபதம் என்ற மூன்றும் பழைய மூன்று பதங்களும் நின்மல் துரியத்தில் விளங்க அத்தோற்றத்தில் உயிர் பரன் சிவம் நிற்கும். இம்மூன்றில் சொல்லப்படும் பதமே தொந்தத் தசி யாகும்.
2489. தொந்தத்தசி என்னும் மூன்றில் பழைய கன்மமும் மாயையும் ஆணவமும், தொந்தத்தசி மூன்றில் பழைமையான தாமதம் இராசதம் சாத்துவிகம் என்பனவையும் ஆகிய மலமும் குணமும் கெடச் சிவன் தோன்றினால் முழுமதியின் முன்பு இருள் கெட்டு ஒளி உண்டாவதைப் போல் ஆன்மப் பேரொளி அமையும்.
2490. தொந்தத் தசி என்ற வாக்கியப் பொருளை வாசியில் பொருந்த்திக் காண அம்முறையில் யகரம் விளங்கும் படியாகச் செய்து முடிவற்ற நிலையை அவ்வாக்கியத்தில் மேலே?றும் முறையில் சிவன் முன் வைத்துத் தத்துவமசி என உச்சரிப்பாயாக.
2491. சிவத்தை முன்வைத்துத் திங்கள் மண்டலம் விளங்குமாறு செய்து பிரணவமான உபதேசத்தை உண்மையான இதயத் தானமான சகசிரதளத்தில் பொருந்தி நிற்பாயாக. அவ்வாறு நின்றால் உண்மையுணர்ந்து சிவனுக்கு அடிமை என்று ஆன்மா இன்ப மயமாய் விளங்கும்.
2492. மாயையில் தோன்றும் சீவனான தொம்பதமும் மேலான பரையிடத்து விளங்கும் பரமான பசுவும், விரும்பப்படும் சாந்தியில் பொருந்தும் ஆகிறாய் என்ற அசிபதமும் ஆன அந்த வாக்கியம் மேலான தொடராகும். அந்த உரையான நீ அதுவாகிறாய் என்பதில் வாசியான உணர்வு பொருந்தும்.
2493 .தேவதத்தனிடத்து ஆகிய காலம் இடம் முதலியவை விட்டால் அவனே இவன் என்பது போல் உடல் மாயை நீங்கிய நிலையில் நீ அது ஆகிறாய் என்பர். அப்போது உண்மை அறிவான உயிர் பரமாய்ச் சிவனாகும்.
2494. தாமதம் இராசதம் சாத்துவ்கம் என்னும் மூன்று குணங்களும் ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்று மலங்களும் அகர உகர மகர ஆகிய பிரணவத்தால் நீங்கும். சீவன் அகாரமாய்ப் பருவுடல் நுண்ணுடல் காரண உடல்களைக் கடந்து விளங்கும் துரியமும் தொந்தத் தசியால் ஆகும்.
#####
ஓம்நமசிவய!
ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.
#####
மும்முத்தி!
2474. சீவன் தன் முத்தி நிலையைத் துரியா தீதத்தில் பெறும். ஆன்மா தன் செயலற்று அருள் வழியே நிற்கும் நிலையே பரமுத்தி எனப்படும். சிவமுத்தி என்பது சிவானந்தம் ஆகும். மூன்று இடங்களிலும் சீவமுத்தி பரமுத்தி சிவமுத்தி என்று மூன்று வகைப்படுவதாய்ப் பிரணவத் தொனியின் வழியே செயலின்றி எண்ணியிருப்பின் நாதாந்தம் அமையும்.
2475. பிறவிப் பயனை அறியாதவரின் உயிர் பிறவியில் வந்து விடும். பிறவிப் பயன் இறைவனை வழிபடுதல் என்று அறிந்த உயிர் இறைவன் திருவருளை நாடிப் ப்யன் பெறும். வெளியேயுள்ள உலகில் உள்ளத்தே உள்ள கருவி கரணங்களிலும் உயிருக்கு நன்மை தருவது என்பதை அறிந்து உலகையும் கருவி கரணங்களையும் விட்டு நீங்கி நிற்கும் சிவத்துடன் பொருந்துதலே முத்தியாகும்.
2476. சிவத்தை நினைத்து சிவமாகி ஆணவம் கன்மம் மாயை என்று மூன்று குணங்களையும் அழித்து தாமத இராசத சாத்துவீகம் ஆன முக்குணங்களையும் தொலைத்துத் தவத்தால் அடையும் மும்முத்தி என்ற அது நீ ஆகின்றாய் என்ற அறநெறி நின்று சோகம் பாவனை செய்பவர்க்கு மலம் இல்லாச் சிவன் தானே வெளிப்பட்டு அருளுவான்.
2477. தளையைப் போக்கும் பரசிவ்னே, எண்பெருஞ் சித்திகளும் வீடு பேறும் மேலான சிவமுமாகும். நின்மல் துரியாதீதமும் மூன்று துன்பங்களைத் தொலைக்கும் சிவானந்தம் மேலான சமாதியாகும்.
#####
முச்சொரூபம்!
2478. ஆணவ மலத்தில் கட்டுண்ட உயிர்கள் பக்குவமாதற் பொருட்டு இறைவன் கன்மம் மாயை மாயேயம் திரோதாயி என்பனவற்றைக் கூட்டி ஆணவம் வலிமைகெட இருவினை ஒப்ப வந்த நிலையில் சிவோகம் பாவனை மேற்கொண்டு செய்து மேலும் ஒரு நிலையாக்கிச் சீவ பர சிவ நிலைகளை அடைந்து நீங்கி அவ்விடத்து இறுதியில் பழமையான பரம் பொருளின் உண்மையில் அந்த உயிர்களை நிலைபெறச் செய்வான்.
2479. சகலர், பிரளயக்லர், விஞ்ஞானகலர் என்னும் மூவர்கள் வாழ்கின்ற இடம் பிரகிருதி மாயை, தூமாயை, துவாமயை ஆகும். இந்த மூன்று மாயைகளிலும் முப்பத்தாறு தத்துவங்கள் தோன்றியுள்ளன. இம்மூன்று மண்டலங்களிலும் பொருந்தி நிற்கும் ஆத்ம பேரொளியைக் கண்டபோதே எடுக்க வேண்டிய உடலின் கணக்கு முடியும்.
2480. உலகம் தோன்றிய வண்னமே ஒடுங்கிப் பல ஊழிகள் போயின. அப்போது ஊழி முடிவில் சீவன் பரன் சிவன் என்ற ஒன்றுள் ஒன்றாய் ஆராய்ந்து உணரும் தன்மையில் சிவன் உடனாயிருந்து உபசரிக்கும் அள்வையும் பெருமையையும் யாரோ உணர்ந்து தெரிய வல்லாவர்.
2481. உயிர் இனங்களைப் பெரிதாய் முதலாக எண்ணப்படும் வேறுபாடுகளாய் விகாரப்படுத்தித் தான் அருவமாயும் உருவமாயும் அருவுருவமாயும் ஒளிவடிவாய் வெளிப்பட்டு அருள் செய்யும் நாத சத்தியின் தலைவனான இறைவன் உயிர்களின் தொகுதி உருவமாயும் உடன் இருப்பவனாகவும் அங்ஙனம் இருந்தாலும் அவற்றால் அறியப்படாதவனாயும் விளங்குகின்றான்.
2482. மாணிக்க மணியின் முன் வெண்பளிங்கு அதன் வண்ணம் தன்மை என்பனவற்றைப் பெற்று மாணிக்கம் என்று கூறுமாறு நிற்கும். அது போல் தணிந்த இயல்புடைய ஆன்மா சீவ சொரூபம் பர சொரூபம் சிவசொரூபம் என்ற சத்திகள் பொருந்திய போது அவையேயாய் ஆகும்படி செய்த பெருமை உடைய சிவனது திருவடிகளைப் பற்றி நிற்கும்.
2483. பளிங்கைப் போன்ற ஆன்மா மாணிக்கம் போன்ற சிவ ஒளியின் பிரகாசம் தோன்ற தன்மையைச் செய்யும் கண்மணியில் நாடி ஒளியுடைய தத்துவமசி என்னும் முப்பதத்தால் போதல்பாழ் சீவப்பாழ் சிவப்பாழில் நின்று சொல்லால் அடைய முடியாத பிரணவத்தால் ஞானமுத்திரையின் முடிவில் பெறும் அனுபூதியால் அறியாமை ஆன இருள் நீங்கிப் பிறவி அறும்.
2484. மாறுபட்ட தன்மையுடைய ஆயிரம் இதழ்த் தாமரையுள் விளங்கும் பேரொளியைச் செல்லும் மூலாதாரத்தினின்றும் தோன்றும் நாதமானது அருளால் கிட்டுமானால் அங்கே பொருந்தும் அமுதேசுவரி வெளித்தோன்ற முன்பு அடைந்திருந்த மேல் வாசலைத் திறந்திருப்பாயாக.
#####
ஓம்நமசிவய!
தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!
#####
முத்துரியம்!
2466. உயிர் கேவல சாக்கிரம் கனவு உறக்கம் என்பனவற்றைக் கடந்து சிவ துரியத்தை அடையும். சீவனுக்கு ஆதியான பரமும் கனவு நனவு உறக்கம் என்ற மூன்றையும் கடந்து பர துரியத்தை அடையும். சிவனும் பரனைப் போன்று நின்மலக் கனவு முதலிய மூன்றைக் கடந்து துரியத்தை அடையும். இப்படித் தொந்தத்தசி -தத்துவமசி என்ற பெருவாக்கியம் விளக்கும் நெறி அமையும்.
2467. சீவனின் நனவில் பொருந்தும் துரிய நிலையே தொம்பதம் ஆகும் சகல சாக்கிரத்தி; உள்ள துரியத்தில் ஆன்மா பரதுரியம் பொருந்தும். சீவன் அப்பர நிலை நீங்கிச் சிவநிலை அடைவது நின்மல நனவில் ஏற்படும் துரியம்-பேருறக்கம். ஆகும். மேன்மை பொருந்திய மேல் கூறப்பெற்ற சிவபர சிவதுரிய நிலைகள் இவ்வாறு அமையும்.
2468. சீவன் விளங்கும் துரியத்தில் நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம் என நான்காகிப் பணியும் பரதுரியத்தில் பொருந்தும் நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம் என்னும் நான்கும் மேலான பரமாகிப் பொருந்தும். சீவ பரசிவச் சேர்க்கையில் சீவ துரியம், பரதுரியம் என்ற பொதுமையில் இரண்டும் சீவபர துரியத்தில் உள்ள விரிவாகிய எட்டு நிலைகளுமாகப் பத்தாகும்.
2469. மேல் கூறப்பட்ட பத்து நிலைகள் பொருந்திய சீவபர துரியத்தில் சிவ்த்தை அடையும் பொருட்டு உபதேச முறைப்படி நின்று பராபரச் சேர்க்கையில் ஒரு முடிவை அடையச் செய்கின்ற நாத விந்துக்களான இரண்டு திருவடிகளையும் சேர்த்து நிற்பாயாக.
2470. சீவஒளி விளங்கும் துரிய நிலையில் நீங்காது பொருந்தியிருங்கள். இதை நீங்கள் அடைய முடியாது என்று எண்ணினால் அடையக்கூடிய நெறியை உணர்த்தும் ஞன நூல்களைச் சிந்தித்திருந்தால் பல் நா உதடுகள் பொருந்திச் சொல்வதற்கு மேற்பட்ட சிவதத்துவம் நாதமாய் அமையும்.
2471. அசத்தான முப்பத்தாறு தத்துவங்களையும் விட்டுச் சித்து வடிவான பரமாய் சார்ந்திருந்த சுத்த மாயை அசுத்தமயைகளை அருள் சத்தியால் சிதைத்து அதன் விளைவான பிரிவற்ற சிவ சத்தியைப் பொருந்திடும் இயல்பைச் சிவநெறியில் ஈடுபட்ட அன்பர் நெறி காடும் முடிவை அறிந்திருந்தனர்.
2472. நனவில் நான்காம் நிலையான துரியத்தில் தன் உயிர் விளங்கும் தொம்பதம் என்ற ஒளி நிலை ஆவது போல் வினைகளினின்றும் நீங்கிய சிவன் நின்மலச் சாக்கிரத்த்தை ஆதியாக உடைய நான்காம் நிலையான நின்மலதுரியம் அடைய பரதுரியம் அமைந்து அதனையும் கடந்த துரிய தீதத்தில் தற்பரம் என்ற நிலையை அடையும்.
2473. முத்துரியத்தில் தொம்பதம் என்றும் தற்பதம் என்றும் சொல்வது போல் நம்பத் தகுந்த மூன்றாம் துரியமான சிவதுரியத்து மிக நுண்ணிய நிலையாகும். அங்கு அப்பால் விளங்கும் பரம் பொருள் ஆன்மாக்களை ஆட்கொள்ளும் சிறப்பு மிக்க நந்தியாகும்.
#####
ஓம்நமசிவய!
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!
#####
பரலட்சணம்!
2452. நின்மல துரியாதீதத்தில் விளங்கும் நந்தி ஆன சிவம் பரந்து நிற்கும் தனமையும் அறிவும் கொண்டது. ஆன்மா துரியாதீதத்தில் தன் அறிவை இழந்து நிற்பன். ஆன்மாவில் சந்திர மண்டலம் விளங்கி ஆணவமாகிய இருளை விட்டுச் சிவத்துடன் ஒன்றாய்ப் பொருந்தினால் சிவம் உயிரில் பதிந்து தனது பரப்பையும் அரிவையும் பொருந்தும்.
2453. சிவன் முதலும் முடிவும் இல்லாத மேலான தலைவர். அவர் பேரொளி வடிவம் உடையவர். எங்கும் நிறைந்தவர். நல்லார்க்குத் தோன்றுவார். அல்லார்க்குத் தோன்றார். செம்மையோடு விளங்குபவர். அந்தச் சிவஞானத்தை அவ்வாறு உணர்வில் பெற்றவர் நல்வினை உடையவர் ஆவர்.
2454. நின்மல துரியத்தில் சிவன் பரையோகத்தில் ஆழ்ந்து ஆணவம் அற்று விளங்கும் நிலையைக் கடந்து அது தூய்மை அடையும் துரியாதீதத்தில் அந்தச் சீவர்களுக்கு வீடுபேற்றை அளிக்கப் பரவெளியில் நடனம் செய்யும் பெருந்தலைவனான சிவத்தைப் பிரணவச் சுனையில் துருவிக் காண வல்லார்க்கு எவ்வகைப் பட்ட குற்றமும் இல்லை.
2455. செந்நிறமான நாதத்தின் முன்பு வெண்மையான இய்லபு கெட்டு ஒடுங்கும். அது போன்று உண்மையான பரசிவத்துடன் சீவன் முனைப்பு அற்று ஒடுங்கும். பொய்யான உலக முகத்து ஓடாத உள்ளத்துடன் நிற்பதுடன் எண்ணுவதையும் கைவிட்ட பாழில் குண்டலினி சத்தியாகிச் சிவமேரு என்றபிரணவ உச்சியில் விளங்கும் தன் கணவனுடன் ஒன்றாவாள்.
2456. சிவமேருவில் நாத சத்தியுடன் பொருந்திய சீவர்க்குக் கலை முதலிய தத்துவங்கள் ஒடுங்கும். ஒடுங்க எஞ்சியுள்ள சுத்தமாயை அசுத்த மாயையின் பிணிப்பு அடியுடன் மீண்டும் முனையாதபடி நீங்க துவாத சாந்தத்தில் உண்மைப் பொருளான சிவம் விளங்க அப்பெருமான் அச்சத்தை நீக்கி என்னை அடிமையாய் ஏற்று ஞான நிலை பெறுமாறு செய்தான்.
2457. என் உண்மை நிலை இன்னது என உணர்த்தினான் நந்தியெம்பெருமான். அவன் என் உண்மை வடிவை அறிந்தும் இதுவரை சொல்லாத பரவெளியுடன் அறிவுடன் செல்லுமாறு செய்து பின் பிரணவ ஒளியில் ஆன்ம வடிவை வேறாய் விளங்கத் தன்சத்தியை அளித்துத் தற்பரம் ஆக்கினான்.
2458. நுண்மையான பூத நிலையில் விரிந்தும் பெரும் பூத நிலையில் சுருங்கியும் மண், விண், தீ, நீர், காற்று, எங்கும் நிறைந்த கதிரவன், சந்திரன், பயனாய் அகண்டமான வானத்தில் எல்லாவற்றையும் இறைவன் ஒருவனே தாங்கி நின்றான்.
2459. அருவத் திருமேனி கொண்ட சிவத்தின் நிலையில் தானாக விளங்கும் சத்தியும் தற்பரனாய் விளங்கும் அந்தப் பரையே பரனுக்கு உடல் ஆகும். தனு கரண புவன போகங்களைச் சீவர்களுக்குப் படைத்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்னத்தால் ஞான சத்தி முதலிய பேதங்களைப் பெருமை மிக்க பரனிடத்து அகலாமல் இருந்து படைப்பு முதலிய ஐந்தொழில்களைச் செய்து நடிப்பாள்.
2460. உடம்புக்கு கீழ் மேல் சூழ் இருந்து மெய் வாய் கண் மூக்கு செவி என்பனவற்றைக் காக்கும் விந்து சத்தி பரையும் பரையாக அருவமான சிவம் சத்தி நாதம் விந்து ஆகிய நான்கில் ஞானத்தைப் பெறும்படி செய்து ஆணவ மலத்தில் கட்டுண்டவர்களை நட்த்தும்.
2461. பரையினது ஒலி வேறு வேறு இயல்பு உடையதாய் அறு ஆதாரங்களில் பொருந்தி ஆறு வகையான வேறுபாடுகளை அளிப்ப்தாய் வேறு வேறு தத்துவங்களை மாயையால் தொழிற்படுத்துகின்றது. மாயை ஒளியைத் தூண்டுவதாய்ச் சீவனை அசைவித்து மூச்சை இயக்கி உணவை உண்பித்து உறக்கத்தையும் அடையுமாறு செய்யும். ஆனால் மாயையின் செயலான தத்துவங்களைக் கடந்து பர ஒளியில் பொருந்தியிருத்தலே ஆன்மா அடையத் தக்க பேராகும்.
2462. தனது பரம் என்ற நிலை ஒப்பில்லாத பேரொளியில் நிலைபெற்று உள்ளது. அதுவே மேலான ஒப்பில்லாத ஞானமும் தத்துவங்களை அழித்து நிற்கும் அறிவும் ஆகும். ஆன்ம அறிவு நீங்கித் தன் ஒளியை அறிந்து சிவப் பேரொளியில் புகுந்து சுட்டி அறிகின்ற அறிவை விட்டு நிற்பதைவிட இங்கு ஒப்பாகச் சொல்லக் கூடியது ஒன்றும் இல்லை.
2463. பழைய மறைகள் சிவத்துக்கு மேன்மையான வானமே உடல் என்று கூறும் பிறைத் திங்களைச் சூடிய சிவபெருமான் விளங்கும் வானில் துரியாதீத நிலையில் தன்னைக் கண்டு அப் பரநிலையை அடைந்தவனும் தூமாயைக்கே நெருங்கில் அவன் ஆராயின் தூய்மை உடையவன் ஆகமாட்டான்.
2464. வான், காற்ரு, தீ, நீர் பொருந்தும் நிலம் என்பவை இலயமாகும் கோயிலான தற்பரமே அந்தத் துரிய நிலையில் விளங்கும் சிவம் ஆகும். வான், காற்று, தீ நீர் பொருந்தும் நிலம் என்பனவற்றில் நிறைந்து நிற்கின்ற வெளியாகிய சத்தியே அவனது வடிவம் ஆகும்.
2465. பண்னிரண்டாம் நிலையான துவாத சாந்தப் பெருவெளியில் பரவிய கதிர்களையுடைய சிவத்தைப் பொருந்தும் வண்ணம் தானாகவே வந்து பொருந்தும். எனவே இந்த நிலையை நழுவ விடாமல் இருங்கள். உயிர்களுக்குச் சொல்லக் கூடியது இதைவிட வேறு ஒன்றும் இல்லை.
#####
ஓம்நமசிவய!
முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!
#####
முப்பரம்!
2445. உடலில் இயல்பாகவே சுற்றி எழுகின்ற அக்கினி மண்டலம், கதிரவ மண்டலம், சந்திர மண்டலம் என்பனவற்றுள் விளங்கும் சிவனை இளங்கொடி போன்ற குண்டலினி சத்தி தாங்கி நின்று உயிர்கட்டு இன்பத்தை விளைவித்து கீழ்முகம் கொண்டு அக்கினி மண்டலத்துள் பக்குவம் அடையச் செய்து நன்மை அருளூகின்றான்.
2446. குண்டலினி சத்தி தலையைக் கடந்தபோது வான் மண்டலம் முழுவதும் பரவியுள்ளது. அது மிகவும் மேம்பட்ட பொருளாக விளங்கும், அவளுடன் பொருந்திய சிவன் அங்கு நின்ற எல்லாப் பொருளிலும் முழுமையாய் கலந்து நின்றான். கன்று கதறியபோது ஓடி வரும் தாயைப் போன்று சீவன் நினைத்த போது அருள் பொழிவன் இறைவன். அவன் அருளியபின்பு அந்தச் சீவன் குன்றின் மீது இட்ட விளக்கைப் போன்ற ஒளி பெறும்.
2447. முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்த நிலையில் விளங்கும் பரம் சொல்லாமல் சொன்ன உபதேசத்தைச் சொல்லப் போனால் சிவபரம் பொருள் வேறாய் வெளிப்பட்டுக் குருமேனி தாங்கி அருளிய இன்பத்தைப் போற்றிப் பாது காத்துக் கொள்ள வேண்டும்.
2448. தத்துவங்களின் பற்று நீங்கப் பொருளைப் பற்றிய விஞ்ஞான கலர் நிலையடைந்து ஆன்மாக்கள் சதாசிவம் ஆவார். அப்படிப் பற்று நீங்க நாதத்தைத் தொழுவதால் நாத வடிவான சிவத்தின் அறிவே ஆன்மாவின் அறிவாகும். சிவபேதம் கெடச் சிவப்பற்று மிக மேம்பட்டவர்க்கே பழைய தத்துவங்களின் பற்று நீங்கிப் பற்றிக் கொண்டுள்ள சிவ அறிவு மிக்குப் பரமாகக் கூடும்.
2449. மேலான சதாசிவ பதவி அடைந்தவர் பாசம் பற்றாத மிக மோசமான நிலையை அடைந்தவர் ஆவார். அவர் சிவத்தைச் சார மிக மேன்மையான சிவனந்தம் விளங்கும். இவ்வாறு ஆன்மாக்களை மிக மேன்மையாய்ச் செய்வது அறிவின் வடிவான சிவமாகும்.
2450. நின்மலச் சாக்கிரத்தில் கலை வித்தை அராகம் புருடன் மாயை என்று ஐந்து தத்துவங்களும் நீங்கி கருவி அறிவையும் விட்டு ஆன்மா தனித்து நின்றபோது நினைவையும் விட்டு நீங்கிய துரியாதீதத்தில் நேயப் பொருளான சிவத்தை சார்ந்து அறிவு வடிவான உயிர் தற்பர நிலையை அடையும்.
2451. தன்னைத் தூய்மையாகக் காணாலும் என்னிடம் விரிவாகக் காணலும் பின்பு கருவி கரணங்களைக் கொண்ட ஆன்மாவின் நிலை மாறிச் சிவனும் சீவனும் கலந்து தத்துவங்களை விட்ட நல்ல பராதீத நிலையில் அகரத்தை ஆதியாக உடைய பிரணவ வடிவான சிவத்தை நாடுக.
#####
More...
ஓம்நமசிவய!
அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!
#####
முக்குற்றம்!
2435. காமம், வெகுளி, மய்க்கம் என்ற மூன்று குற்றங்கள் உள்ளன. அவையாவும் உயிர்களுக்குத் துன்பத்தை தருவன. அதனால் உயிர்கள் தங்களின் உண்மை வடிவத்தை அறியாமல் மாயா காரியமான இருளில் ஆழ்ந்து மயங்கியுள்ளன. காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்று குற்றங்களிலிருந்தும் விடுபட்டவர் பிறப்பு இறப்புகளை நீக்கினவர் ஆவர். அங்ஙனம் நீங்காதவர் அம் முக்குற்றங்களின் காரியமான மாயையில் துன்புற்று அழிவர்.
2436. காமம் வெகுளி மயக்கம் என்ற மூன்று குற்றங்களையும் நீக்கிப் பாதுகாவலான திருவடி பற்றியிருக்கும் எனக்கு மணியோசை பொன்ற பிரணவத் தொனியினும் பொருந்துவதான ஒளியைத் தலைப்படுதல் இயலும்.
####$
முப்பதம்!
2437. தோன்றிய தீ என்ற பதம் அது என்ற பதத்தை சூழ்ந்திருக்க ஏற்றுக்கொள்ளப் பெற்ற ஆகிறாய் என்ற பதமும் என்ற இம்மூன்றோடும் பொருந்தியவன் பிறவி நீங்க அகண்டப் பொருள ஆவான். இவ்வாறு ஏற்றுக் கொள்ளப் பட்டவன் இவ்வுடல் ஒழியச் சிவன் ஆவான்.
2438. திருவருளால் பெறும் நாத உபாசனையில் நின்று பூதம் முதலாகப் பேசப்படும் தொண்ணூற்றாறு கருவி பேதங்களையும் நாதாந்த நிலையில் நீங்கி வேதம் உணர்த்திய நீ என்ற பதமாதல் உண்மையான நிலையாகும்.
2439. தத்பதம் என்பதும் துவம் பதம் என்பதும் திருவருளால் பொருந்தியிருப்பதும் அசிபதம் ஆகும். எல்லாவற்றாலும் அளவினால் அளவிட்டுக் கூற முடியாத சிவபெருமான், பரையின் விளக்கத்தில் கற்பனையாக இல்லாமல் உண்மையாகவே அசிபத நிலையில் கலந்தருளுகின்றான்.
2440. உயிரும் பரமும் அசிபதத்தில் பொருந்தித் தங்கு தடையற்ற சிவமும் கலந்தால் உவமம் கட்ட இயலத பாலும் தேனும் அமுதமும் போன்று அந்த இன்பப் பொருளால் வாய் பேசா மௌனத்தில் திகழ்வதாகும்.
2441. தொம்பதம்- சீவன் தத்பதமாக- பரமாக மாறுவது அசிபத நிலையில் உள்ளது. சிவனை நம்பிய சீவன் சிவத்தன்மை விட்டு பரன் என்ற பேரைப் பெற்றுச் சிவன் ஆகின்றான். மேலான உண்மையுடைய பெருவாக்கியத்தில் அழகிய அசி என்ற பதத்தின் செம்பொருளை உணர்த்திச் சிறப்பு மிக்க நந்தியின் சிவபெருமான் எங்களை ஆண்டருளினான்.
2442. ஐம்பது எழுத்துக்களும் வாக்கின் வடிவான சத்திகள் என்பதை மக்கள் அறியாதவர் ஆவர். அவருள் அறிந்தவர் சிலர் சத்திகளைக் கொண்டே இறைவனை நாடி உரைக்கப்படும் முப்பதத்தால் உணர்த்தப்படும் பொருளில் உணர்வைச் செலுத்தி விந்து நாதமாய்ச் சிவமாய் விளங்குவர்.
2443. நாத ஒலியை அறியும் ஆன்மாவின் நிலைநழுவினால் சாக்கிராதீதம் உண்டாகும். ஐம்பொறிகள் ஐந்தும் சத்தம் முதலியவற்றை விடப் பரம் ஆகும். இந்த ஐம்பொறி அறிவு மூன்றும் இரண்டும் ஒன்றும் நீங்கவே சிவன் அநாதியான நின்மலச் சாத்திரம் முதலியவற்றைக் கூட்டி உயிர்களைப் பக்குவப் படுத்துகின்றான்.
2444. ஆன்மா மேலான நின்மலத் துரியத்தில் நனவு நிலையில் விரியாத காலத்து நின்மலக் கனவு அமையும். இதில் அலையில்லாத கடல் போன்று அசைவின்றி இருக்கும் நிலையே துரிய சுழுத்தியாகும். சிவத்திடம் பொருந்திய போது அதுவும் நீங்கிய நின்மலத்துரியமே அசிபதமாகும்.
#####
ஓம்நமசிவய!
நீடாழி உலகத்து மறை நாலொடைந்தென்று நிலை நிற்கவே
வாடாத தலவாய்மை முனிராசன் மாபாரதஞ் சொன்னநாள்
ஏடாக் மாமேரு வெற்பாக வங்கூர் எழுந்தாணிதன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ.
முருகார் மலர்த்தாம் முடியானை அடியார் முயற்சித்திறம்
திருகாமல் விளைவிக்கும் மதயானைவதனச் செழுங்குன்றினைப்
பருகூதன் முதலாய்ப் முப்பத்து முக்கோடி புத்தேளிரும்
ஒருகோடி பூதே வருங்கை தொழுங்கோவை உற உன்னுவாம்.
#####
அடிதலை அறியும் நிறம் கூறுதல்!
2425. கால் எது தலை எது என்பதை வீணர்கள் உணர்ந்து கொள்வதில்லை. கால் என்பது குண்டலினி சத்தி. மூலாதாரத்தில் குண்டலினி விளங்குவதற்குக் காரணம் அருள் என்பர். ஒளிவிளங்கும் ஞானமே பண்பு நிறைந்த தலையாகும். சத்தியானது அந்த ஞானமான சிவத்தைக் காட்ட உயிர் வீடுபேறு அடையும்.
2426. உடலில் அடியானது தலையில் வந்து பொருந்துவதை வீணர்கள் அறியவில்லை. தலை உச்சியிலும் அடி மூலாதாரத்திலும் இருக்கின்றன. மூலாதாரத்தில் உள்ள குண்டலினி தலையை அடைந்து பொருந்தும் அறிவை அறிந்த ஞானியர் சிற்றறிவு நீங்கிப் பேரறிவு உடையவராக இருப்பர்.
2427. நிலத்திலும் வானத்திலுமாய் உள்ளும் புறமுமாய்க் கலந்து நின்றவன் எம்பெருமான். அவன் அவ்வவ்வண்டங்களின் வாழும் வன்மை மிக்க அசுரரும் தேவரும் உய்யும்படிதான் பின்னே உலகத்தைப் படைத்தான். அவனது பெயர் நந்தி என்பது. அவன் தன் இரு திருவடிகளையும் என் தலையில்மீது சூட்டினான்.
2428. என் மனத்துள்ளே சிவத்தின் திருவடியுள்ளது. என் உள்ளமும் தன் செயல் அற்று அவனது திருவடியை வணங்கிக் கொண்டிருக்கின்றது. மனத்தின் உள்ளும் வெளியிலும் பரவியிருக்கும் சிவன் என்னை அறிந்து உணர்த்தா விட்டால் என் தந்தையை நானும் உணராதவன் ஆவேன்.
2429 .சொல்ல அரிய ஆறு ஆதார ஒளிக்குமேல் பரமாகாயத்தில் என் தலைவனான சிவன் விரும்பி அங்கு எழுந்தருளியுள்ளான். உள்ளத்தினாலே எண்ணிக் காண் முடியாத பிரணவத் தெளிவையும் எனக்கு உணர்த்தினான். பின் நான் அவன் திருவடிகளான விந்து நாதங்களை என் தலையில் அணிந்து நின்றேன்.
2430. பதியின் பொருள் விளங்கும் தலையின்மேல் உள்ளத்தை வையுங்கள். திங்கள் கலை விளங்குமாறு செய்து அந்த திருவடியை எண்ணித் துதி செய்யுங்கள். கங்கையாற்றைச் சடையில் அணிந்த உமையொரு பாகன் முத்தியை அளிப்பான். அப்பெருமானை வழிபடுகின்ற காலங்களில் கண்டு வழுபடுங்கள்.
2431 .சிவனது திருவடிக்கமலங்களை இடைவிடாமல் நினைப்பவரின் உள்ளத்தில் அப்பெருமான் விளங்கித் தன்னை நினையாதவரின் மனத்தில் அவனும் வெறுப்பு அடைந்து ஒளிந்திருந்தான். அங்ஙனம் பக்குவம் செய்பவனே ஆன்மாக்களைப் பாதுகாத்துக் கொண்டிருப்பவன்.
2432. உடலில் சிவன் விளங்கும் சகசிரதள்மான தாமரை மலர் ஒன்று இருக்கின்றது. அங்கு வழிபடத் திங்கள் கதிரவன் அக்கினியான மூன்று கண்மலர்க்ள் உண்டு. அவ்வழிபாட்டால் இறைவன் திருவடியாகிய விந்து நாதம் விளங்குவன். அங்கு நிலைத்து நின்று திருவடிகளை வணங்கும் திறம் உடையவர்க்கு இப்பொழுது சிவப்பே/று அடைவர்.
2433. விந்து நாதன் என்ற திருவடியை என் தலையின் மீது வைத்தவனும் ஆணவ மலக்கட்டு நீங்கவே உலகப் பொருளை விரும்பும் மயக்கம் பொருந்திய ஊள்ளத்தில் தளர்ச்சி கெடப் பால்போன்ற வெண்மையான ஓலியைப் பற்றிக் கொண்ட என்னைச் சிவபெருமான் அடிமையாய்க் கொள்ள எண்ணினான். அதன்மேல் அடையும் மேலான பலனகளை என்னால் சொல்ல முடியாது.
2434. தாங்கள் பெற்று வளர்த்த மக்களிடம் கொண்ட சம்பந்தத்தையும் அவர் செய்யும் குற்றத்தையும் உணர்ந்து அவரது குற்றத்தைப் பாராட்டாமல் குணத்தைக் கொள்ளும் பெற்றோரைப் போல் இறைவனும் உயிரின் தன்மைக்கு ஏற்ப வெறுப்பற்ற செயலுக்குப் பொருந்தும்படி ஏற்றுக் கொண்டு தக்கபடி அருள் செய்வான்.
#####
ஓம்நமசிவய!
ஓம் எனும் பொருளாய் உள்ளாய் பூமெனும் பொருள்
தொறும் பொலிவாய் அகரம் முதலென ஆனாய்
அகர உகர ஆதி மகரமாய் நின்ற
வானவ பகர்முன்னவாம் பரமே போற்றி!
#####
பதி பசு பாசம் வேறின்மை!
2405. அறிவு அறிவு என்று கூறப்படும் உயிர் மிகவும் பழமையானது. உயிர்க்குத் தலைவனான சிவமும் ஆன்மாவைப் போன்று மிகவும் பழமை வாய்ந்தது. உயிரைப் பிணித்துள்ள பாசம் பழமையானது. பேரறிவுப் பொருளான சிவம் உயிரிடம் விளங்குமானால் பாசமானது நீங்கிப் பிறவி இராது.
2406. நான்முகன் திருமால் உருத்திரன் மகேசன் சதாசிவன் முதலிய் பெருந் தேவர்கள் முதலாக உயிர்கள் பல கோடியாகும். பசுக்களைப் பிணித்துள்ள ஆணவம் கன்மம் மாயை என்ற மலங்கள் மூன்று. உயிர்கள் தம் அறிவை விட்டு மலங்களை அகற்றினால் பதியினைப் பற்றி விடாமல் நிற்கும்.
2407. பாசத்தில் கட்டுண்டு கிடக்கும் உயிர்கள் காமியத்தோடு செய்த சரியை கிரியை யோகத்தால் அடையும் சாலோக சாமீப சாருபம் ஆகிய பயன்கள் மூன்று. அவற்றின் முடிவான ஞானத்தைப்பெற நாள்தோறும் தியானம் செய்து தொடர்பு சிறிதும் பற்றாமல் விருப்பம் இன்றி வணங்குங்கள், அங்ஙனம் வணங்கினால் குடத்தின் உள்ளே வைக்கப்பட்டிருந்த விளக்கைக் குன்றின்மீது வைத்ததைப் போல் ஒளிபெற்று விளங்குவீர்கள்.
2408. சிவன் ஆன்மாக்களின் ஆணவமல வலிமை கெடக் கன்மத்தையும் மாயையும் பொருந்தியவன். பரந்த கதிர்களையுடையவன். இத்தகையவனைப் பற்றுள்ளம் கொண்டு ஞானியர் எண்ணுவர். அங்ஙனம் நினைக்கும் தியான பலத்தால் மனம் கூசும் பாசத்தை நினைப்பது எப்படி. பழமையாகவே தொடர்ந்து வந்துள்ள பாசத்தில் மீண்டும் சீவனை விடுவது எப்படி.
2409. மந்திர ஆற்றலால் நீங்கிய விடம் தீண்டியவனை மீண்டும் பொருந்தாது. அது போன்று ஞானத்தின் பசுத்தன்மையும் பாசத்தன்மையும் விட்டு மெய்மையைக் கண்டான் மீண்டும் அவற்றை பொருந்தான். தன்னைக் கேவலாவத்தையிலும் சகலாவத்தையிலும் பிணைந்திருந்த பாசத்தை சுட்டழித்து நின்மல் துரியாதீதத்தில் விழிப்பு நிலையில் அந்த உண்மையான ஞானியர் காண்பர்.
2410. ஆராயப்படும் பதியுடன் நன்மை பெறும் பசுவும் பாசமும் எக்காலத்தும் நிலையாய் இருப்பவையாம். எனினும் நித்தியப் பொருளான சிவத்தின் தன்மை இன்னவாறு என்று அறிபவர் ஒருவரும் இல்லை. பசு பாசங்களின் நித்தியத் தன்மையும் அவற்றின் நீக்கமும் அருட்கண்ணால் நாடிய சைவர்க்கு விளங்குமாறு சிவன் அருள் செய்வான்.
2411. கோயிலுள் மூலத்தானத்தில் உள்ள சிவலிங்கம் அருளுடன் கூடிய சிவலிங்கம் ஆகும். அங்குள்ள வலிய காளை பசுவாகும். அங்கு இடபத்துக்குப் பின்னே உள்ள பலிபீடமே பாசமாகும். இவ்வுண்மை சிவாலயத்தின் அமைப்பை ஆராய்ந்து பார்க்க விளங்கும்.
2412. பதி, பசு, பாசம், என்பனவற்றை உணர்த்தும் ஞான நூல்களை நாள்தோறும் ஆராய்ந்து உணர்பவர்க்கு நெறியைக் காட்டி பதிப் பொருளானது பசு ஞானத்தையும், பாச ஞானத்தையும் பற்று நீங்கக் கெடுக்கும். பதி, பசு, பாசம் என்பனவற்றைக் குறியீடாகக் கொண்டு தியானித்தால் பசு ஞானம் பாச ஞானம் நிலைபெறமாட்டா.
2413. பதிப் பொருளான சிவத்தையும் பசுவான உயிரையும் பாசமான மலத்தையும் முத்தி நிலையையும் பசு பாசம் நீங்கும் வகையையும் காட்டி சந்திர கலையில் விளங்கும் சிவம் அறியும்படி துதிக்கும் நூல்களையும் தூய சைவத்தில் வைத்துள்ளான்.
2414. அறிவு வயப்பட்ட விஞ்ஞானகலர், பிரளயகலர், சகலர் என்று மூன்றுவகைப் பட்டவர்கள் எங்கும் உள்ளனர். இத்தகைய உயிர்கள் எங்கும் இருக்க எல்லாம் அறிந்த சிவன் அவற்றில் நிறைந்துள்ளான். ஆன்மாக்களின் தகுதியை அறீந்த சிவம் அவ்வற்றின் பக்குவத்துக்கு ஏற்பப் படைகின்றான்.
2415. படைப்பில் தொடக்கம் என்பது பரம் சிவம் சத்தி என்பவற்றை இறைவன் உயிர்க் கூட்டங்களிடையே பொருந்தி உறக்கத்தில் வைப்பதாகும். பின்பு படைப்புக்குரிய தற்பொருளான சிவம் சங்கற்பத்தினால் செய்யப் படைப்பில் முதல் நிலை சுத்த மாயையிலே அந்த பரத்தில் ஆகும்.
2416. இத்தகைய தூய்மையான உடலை விந்து நாதம் சத்தி சிவம் பரம் ஆகிய அருவுருவத்தில் உள்ள ஐந்தினால் சூக்குமமாகிய ஐந்து தொழிலைச் செய்பவன் சதசிவ முகத்திலான தூய ஈசான மூர்த்தியாகும்..
2417. பொருந்தும் பரசிவம் சத்தி நாதமும் மேலும் பரவிந்து சதாசிவன் மகேசனும் இன்னும் உருத்திரன் திருமால் நான்முகன் ஆகிய ஒன்பது நிலைகளும் உலகத்தில் விளங்கும்படி படைப்பவன் அரன் என்னும் சிவமே.
2418. படைத்தலும் காத்தலும் இளைப்பாற்றும் பொருட்டுச் செய்யும் அழிப்பும் மறைப்பும் வாழ்கின்ற போது விளங்க அருளாலும் உட்லை விட்டபின்பு நிகழும் அருளாலும் எனச் சிவபெருமான் சகலர்க்கு இணைந்த அநாதியான தொழிலை ஐந்து எனக் கூறலாம்.
2419. முப்பத்தாறு தத்துவங்களையும் குண்டலினி சத்தியில் தொடர்பாக்கி மேலான மாயையில் சிவ தத்துவம் வித்தியாத் தத்துவம் ஆன்ம தத்துவம் என மூன்று பகுதியாக்கி இறுதியாய் ஆனம தத்துவத்தில் உயிர்களுக்கு கருவிகளையும் வகுத்து தன்மையால் வேறான பதிப் பொருளால் பசு பாசத்தினின்று மீளும்.
2420. பதியானது பசுவிடம் பாச பந்தங்களில் விருப்பம் உண்டாகச் செய்யும். அதனால் இரு வினைகளைச் செய்யும் படி ஆழ்த்தும் அங்குச் செய்யும் வினையின் பயன்களாகிய பாவபுண்னியங்களான நரகம் சொர்க்கம் ஆகியவற்றில் அனுபவிக்கும்படி செலுத்தும் நாள் ஆக் ஆக நான் என்னும் ஆணவம் மட்டும் பொருந்தி நிற்கும்.
2421. பொருந்திய பாசமான மாயையில் தனுகரணங்களுடன் கூடி அவற்றையே தான் என்று எண்ணியிருப்பது ஆணவம் அத்தகைய மயக்கம் கெடவே இறைவன் உயிர்களை மாயையுடன் பொருந்தி வைத்தான். ஆணவ வலி குன்றிட அறிவுடைய ஆன்மாவின் புலப்பட்ட நாதசத்தியே சிவபொருமானின் திருவடிகளை அடைவதற்கு உரிய வழிகளாகும்.
2422. நாத வழிபாடு உயிர்களுக்கு வினைகளை ஊட்டிக் கழித்துச் சிவபோகத்தை அனுபவிக்கும் உபாயம் அல்லாமல் ஆணவ மலமான உயிர்குற்றம் நீங்கி அவா நீங்கித் தூய்மையன ஆவதற்கும் இதுவே மூலமாகும். அழுக்குத் துணியை மேலும் அழுக்காகவுள்ள உவர் மண் முதலியவை தூய்மை செய்வது போல் இறைவன் உயிர்களுக்குப் பாசத்தைச் சேர்ப்பதெல்லாம் பாசத்தைப் போக்குவதற்கே ஆகும்.
2423. பாசத்திலே உள்ள உயிர் கூட்டமே பரம் முதலாகும். பாசத்தில் கட்டுப்பட்டிருக்கும் உயிரே பசு எனச் சொல்வர். பாசத்தைப் பயிலும் போது சிவமே தற்பரமாகிய நாதமாக விளங்குவதால் அந்த வழிபாட்டால் பசு பதியாக ஆகும்.
2424. சனகர் முதலிய முனிவர் நால்வரும் வேதப் பொருளின் உண்மைக் குறித்து தட்சிணாமூர்த்தியை வினவினர். அவர்க்கு அருள் மேனியை உடைய பெருமான் சுட்டுவிரலைப் பெருவிரலோடு சேர்த்துக் காட்டி அவர் கேட்டவற்றின் பொருளை ஞான முத்திரைகளால் உணர்த்தினர். சின் முத்திரையின் நுண்பொருளை அம்முனிவர்கள் உணரவில்லை. ஆதலால் அவரது தலையைத் தீண்டி தீட்சை செய்தாய். அவர்கள் அம்முத்திரையை உணர்ந்து தம் உண்மையான ஒளிவடிவில் நிலை பெற்றுத் திகழ்ந்தனர்.
#####
ஓம்நமசிவய!
மண்ணாய் விண்ணாய் மலர்ந்தாய்
கண்ணுள் மணியாய்க் கலந்தாய்
நீர்தீக் காற்றாய் நின்றாய்
கார் குளிராகக் கணிந்தாய்
பகலவன் நிலவாய்ப் பரந்தாய்
நிகர்மீன் கணமாய் நிலைத்தாய் போற்றி!
#####
ஆறந்தம்!
2370. மறையின் வடிவான உபநிடதங்களின் கூற்றும் மேன்மையான சித்தாந்தமான சிவாகம முடிவும் நாத தத்துவத்தின் முடிவும் கூறத்தக்க அட்டாங்க யோக நெறியின் முடிவும் முதலாவதான நிவிருத்தி முதலிய கலைகளின் முடிவும் என்ற இவை ஆறு அந்தங்கள் ஆகும்.
2371. ஆறு அந்தங்களையும் தம்மில் கொண்டு அறிபவர் மேலான சுத்த தத்துவத்தை உணர்ந்தவர் ஆவார். மலம் அற்றவர் தாம் ஆறு அந்தங்களையும் அறிய இயலும். இவ்விதம் கூறப்பெற்ற ஆறு அந்தங்களையும் அறியாதவர்க்கு உலகங்களின் தோற்ற ஒடுக்கங்களை அறிய முடியாது.
2372. நான் முழுமுதற்பொருள் என்னும் வேதாந்தமும் நான் சிவம் என்னும் சித்தாந்தமும் நீங்காத துரிய நிலையில் ஆன்மா தனது உண்மை வடிவான ஒளியைக் கண்டு இனிய மேலான பரம் அபரமாக விளங்கும் சிவத்துடன் சேர்வதாய் ஆன்மா தன் மலங்கள் அகற்றி எட்டுப் பேரும் சித்திகள் அடைவது பயனாகும்.
2373. உயிரானது சிவத்துடன் பொருந்தி நின்று நீண்டு செல்லும் மனமும், சத்தம், பரிசம், ரூபம், இரசம், கந்தம் என்ற புலன்களின் உண்மையை அறிந்திட்டுச் சுத்தமாயை அசுத்த மயைகள் பற்றாவகை நினைத்துத் தலைவனான முழுமுதற் பொருளை அடைவதே சித்தாந்த நெறியாம்.
2374. பொருந்தும் நானமுகன் திருமால் உருத்திரன் ஆகியவருக்கு மறைப்பையும் அருளையும் செய்யும் மகேசன் சதாசிவன் ஆகியோருக்கும் அப்பால் மிக்கு விளங்கும் பரவிந்து பரநாதம் முதலிய நீங்காத முப்பத்தாறு தத்துவங்களையும் விட்டு நீங்கும்போது ஆன்மா ஒன்றே இருப்பதாகும்.
2375. முப்பத்தாறு தத்துவங்களால் பிணிப்பைத் தெளிந்து அழித்து நாதாந்தத்தைக் கடந்து மேல் உள்ள ஆணவம் என்ற இருளும் நீங்கிடச் சிவத்துடன் ஒன்றிய உணர்வாகப் பொருந்தி நிற்பின் இகழ்வு இல்லாத நாதமுடிவில் அறிவு பொருந்தும்.
2376. ஞானியரால் உணர்த்தப்படும் இயமம் நியமம் முதலிய எட்டு உறுப்புக்களை உடைய அட்டாங்க யோக நெறியில் சென்று நீங்கி சமாதியில் பொருந்தி அங்குள்ள சிவத்துடன் பொருந்திடச் சீவன் தத்துவங்களை விட்டுப் பரமாகப் பற்றுகளை நீங்கிய போது உபசாந்த நிலை பொருந்தும் என்பதே யோகத்தின் முடிவாகும்.
2377. சித்தாந்தக் கொள்கையில் கூறப்பெறும் கலாந்தத்தை ஆராயின் நீங்குகின்ற நிவிருத்தி முதலிய கலைகள் உள்ளனவாகிய விந்து சத்தியில் ஒடுங்கியிருத்தலும் தெளிவாய் ஆராய்ந்து அதைத் தெளிவு பெறுதலும் ஆகும்.
2378. முன்பு தெளிந்த நிவிருத்தி முதலிய கலைகள் மேதை முதலிய சோடசக் க;லைகள் அன்றி ஆராயும் ஐங்கலைகள் வேறு ஒளியில் அமைந்திருப்பனவற்றை அறியவல்லார்க்கு அருளையுடைய சிவனது மந்திர தந்திரமும் தெளிவு உபதேசமும் ஞானத்துடன் ஐந்து பிரிவில் அடங்கும் என்பதை உணர்க.
2379. ஆகமங்களும் வேதங்களும் பழமையானவை. தந்திரக்கலை அந்நூல் கூறும் சடங்குகளைச் செய்து அவற்றின் பயனை எதிர் நோக்கியிருப்பது உடல் அல்லாத பழைய மந்திரத்தை விளக்க முடியாததாகும். இதுவே சிவத்தை விளக்கும் அறிவும் உபதேசமும் ஆகும்.
2380. சிவஞானக் கலை என்பது பேரொளியில் பிழம்பாய் உள்ள சிவம். எனவே இதுகாறும் மேற்கொண்டு வந்த ஒழுக்கமும் அன்பும் மறையும் சிவகலையின் இறுதியில் தன்னை வேறாகக் காணும் உண்ர்வை விட்ட ஞானியர் சொல்லுக்கும் உள்ளத்துக்கும் எட்டாத சிவம் ஆவார்.
2381. சீவன் சிவமாகும் தன்மையை அடைந்தால் பயிற்சியாலான கலாந்த நாதாந்த யோகாந்தமும் மற்றப் போதாந்த வேதாந்த சித்தாந்தமும் ஞானமாக அமைய அந்தச் சிவமே சீவனாய் விளங்கும்.
2382. ஆறு அந்தங்களும் நேயப் பொருளில் போய் அடங்கி விடும். ஆறு அந்தங்களால் அடையப் பெறும் பொருளான சிவத்தில் காண்பவனான சீவன் அடங்கும். மற்றத் தத்துவங்களை விட்டு நிற்க. தெளிந்து பிரணவ யோகத்தில் உண்மையான சிவானந்தம் ஏற்படும்.
2383. உண்மையான ஆறு அந்தமான கலைகளும் பிரணவத்தின் உருப்புகளான அ, உ, ம, விந்து, நாதம் என்பவனவற்றுள் அடங்கும்.. உண்மையான கலாந்தமான இரண்டுல் சிவ தத்துவம் ஐந்துடன் வித்தியாதத்துவம் ஏழும் முடியும். உண்மையான சிவகலை ஒருமித்து முடிவான நாதாந்தத்தில் உண்மைக் கலையைச் சொன்னால் அஃது முடிவை அடையும்.
2384. ஆன்மாக்களை இயக்கும் சத்தியான குண்டலினியை நாதத்தின் தலைவனான சிவன் ஏற்றுக் கொண்டபின் அநேகமானவரை நடத்தும் எம்பெருமையுடைய அச்சிவனின் திருவடிகளை முடிமேல் சூட்டி அழிவில்லாது வேதாந்த சித்தாந்தங்களின் சிறப்பை நாதாந்தத்தால் உணர்த்தியருளிய சிவ குருநாதனை எண்ணியிருங்கள்.
2385. வணங்குபவரின் வழிபாட்டுக்கு ஏற்பச் ச்வபெருமான் அருளிச் செய்த ஆகமங்களில் உணர்த்தப் பெறும் உண்மைச் சமயத்துக்கு ஏற்பப் புறம்பாய் இருக்கும் மாயை மகாமாயை என்பனவற்றைச் கடந்ததே வேதாந்தம் சித்தாந்தத்தால் உணர்த்தப்படும் உண்மையாகும்.
2386. வேதாந்தம் சித்தாந்தம் என்னும் இரண்டும் வேற்றுமை இல்லாத ஒரு தன்மை உடையவை. ஆன்ம அறிவே முடிவான ஞானம். யோகாந்தம் பொதுவாக ஞேயப் பொருளைக் காட்டும். நாதாந்தம் ஆனந்தமாய் இன்பத் தோற்றம் தருகின்ற ஒளி ஏற்படும். பழமையான முத்திரையானது பிரணவ சமாதியில் பொருந்தியிருக்கத் தக்கது.
2387. வேதாந்த நெறியில் சீவனுக்கு உரிய காரிய உபாதிகள் ஏழின் பிணிப்பு நீங்க நாதாந்தத்தின் பசுத்தன்மை கெடும்படியான தொம்பதம் (உயிர்) பொருந்தும். மேல் உள்ள காரண உபாதிகளான ஏழையும் உடைய உண்மையான பரன் அறிவின் முடிவான தற்பதம் (சிவன்) ஆகும். பின்பு இவ்விரண்டான தன்மைகளும் நீங்கி ஒன்றான அசிபதம் பொருந்தும்.
2388. ஏழு அண்டங்களையும் நீங்கி அப்பால் விளங்கும் பேரொளிக்குள் இருக்கும் ஒளியினை பழமையாய்ப் பொருத்தி நின்ற பராசத்தி என்றே கொண்டவன் தன் வடிவ நிலையில் தனியாய் விளங்கும் எம் தலைவன் ஆவான்.
2389. சிவத்தை உணர்த்தும் நாதத்தை இலட்சியமாகக் கொண்டு தெய்வத்தால் அருளப்பட்ட செயலையே தம் செயலாய்க் கொண்டு செய்து தோத்திரப் பாடலைக் கொண்டு வழிபட பிரணவத்தின் உறுப்புகளாகிய அகர உகர மகர விந்து நாதங்களைக் கடந்து இவற்றை அடக்கிய சிவம் அமையும்.
2390. ஒருவனாக உள்ள சிவத்தை நினைக்கமாட்டார். உயிரைப்பற்றிய உண்மையை அறிய மாட்டார். அவரவர் துய்க்கும் இன்ப துன்பங்களுக்கு முன் செய்த வினையே காரணம் என்பதை உணரமாட்டார். அசுத்த மாயை சுத்தமாயை என்னும் காரணம் இவற்றால் கட்டுண்டிருப்பதை எண்ணிப் பார்ப்பதில்லை. ஏகனாய் விளங்கும் சிவபெருமானே இவை யாவற்றையும் ஆன்மாவின் உள்ளே நின்று உணர்த்தி அவ்வினை அழியும்படி செய்து அருவமாய் நின்று யாவற்ருக்கும் ஆதாரமாய் உள்ளான்.
2391. சிவபெருமான் அன்பர்களை இடமாகக் கொண்டு எழுந்தருளுகின்றான். அவர்கள் பக்குவம் அடையப் பலசத்திகளை அவர்களின் ஆன்மாவிடம் பொருந்துகின்றான். வன்மையுள்ள சிவ சங்கற்பத்துக்கு ஏற்ப அவை தொழிற்பட ஆன்ம சங்கற்பம் உருவத்தைப் பற்றாத போது அந்தச் சத்தியின் செயல் நீங்கச் சிவானந்தம் உண்டாகச் செய்வான்.
2392. வேதாந்தத்தில் சொல்லப்படும் தொம்பதம் பசு என்னும் ஆன்மாவைக் குறிக்கும் என்பர். நாதாந்தத்தின் பசுத்தன்மை இயல்பாய் நீங்கி நின்ற நல்ல பதியே அறிவின் முடிவான தத் என்ற் சொல்லாகும். சீவன் சிவன் என்னும் இரண்டும் இரண்டறக் கலத்தல் இயல்பாய்ச் சிவசாயுச்சியம் என்ற அசிபதமாகும்.
2393. வேதாந்தம் சித்தாந்தம் என்னும் இரண்டும் சீவன் சிவமாதலைப் பற்றி உரைக்கும். நன்மையற்ற நான்முகன் திருமால் உருத்திரன் மகேசன் என்ற நால்வரும் சிவமாகும் தன்மையுடைய சதாசிவ மூர்த்தியின் ஆணைவழி செய்த படைத்தல் முதலிய தொழில்கள் முடிவுற்று ஒன்றாகுமானால் வியப்புக்குரிய வேதாந்தாம் ஞானம் தரும் சித்தாந்தம் ஆகும்.
2394. சித்தாந்த சைவத்தில் சீவன் முத்தி நிலை கை கூடுவதால் சித்தாந்த சைவ நெறியில் நிலைத்து நிற்பவர் முத்திநிலை –சிவப்பேறு பெற்றவர் ஆவார். சித்தாந்தம் வேதாந்தம் இரண்டு நெறிகளும் செம்பொருளான சிவத்தைக் குறித்தலே. ஆதலால் சித்தாந்தமும் வேதாந்தமும் சிவத்தையே காட்டும்.
2395. சிவத்தை பரமாகவுள்ள சீவனின் உள்ளாகவும் வெளியாகவும் விளங்கும் குற்றம் அற்ற வேதாந்த நெறியும் சித்தாந்த நெறியும் என்று ஆனால், தோழமை கொண்ட துரியாதீதத்தில் விளங்கும் ஞானம் சிவமேயாகும். இத்தகைய சிவஞானத்தை உணர்ந்து கடைபிடிப்பவர் சிறந்த தத்துவ உணர்வுடையோர் ஆவர்.
2396. ஆன்மா நிறைந்துள்ள முப்பத்தாறு தத்துவங்களும் உருவம் உடையவனவாயும் உருவம் அற்றவனவாயும் உள்ளன். இவற்றுள் விந்து நாதம் ஆகிய தத்துவங்களில் விளங்குபவர் சதாசிவர். சீவனின் நாதாந்த நிலையில் உள்ளது தற்பரம் என்ற மெய்ப்பொருளாகும். இந்த நிலையை அடைவதே சிவ சாயுச்சியம் ஆகும்.
2397. வேதங்களும் ஆகமங்களும் இறைவனால் அருளிச் செய்யப்பட்டவை என்ற உண்மையை விளக்கும் நூல்களாகும். வேதம் பொதுவாகவும் ஆகமம் சிறப்பாகவும் உள்ளன. சிவபெருமானால் உணர்த்தப்பட்ட அவற்றின் முடிவுகள் வெவ்வேறானவை எனச் சிலர் மொழிவர். தத்துவத்தால் உணர்ந்த சான்றோர்க்கு இவற்றுள் வேறுபாடின்மை விளங்கும்.
2398. பரமான சீவன் பெறும் சிவானந்தம் எல்லாம் மேலான ஆனந்தமாகும். மேல் மூன்றாயுள்ள பாழாகிய மாயையில் பொருந்தாத ஆன்மாவும் சாம்பவி கேசரி முதலான முத்திரைகளால் அடையும் ஆனந்தமும் சிவ நடனத்தை இடைநாடியில் கண்டு களிப்பதால் வரும் ஆனந்தமும் ஆகியவற்றைப் பெற்ற உள்ளம் அழகுடையதாகும்.
2399. கலாத்தமாவது மேதை முதலிய பதினாறு கலைகளும் நிவிர்த்தி முதலிய ஐந்து கலைகளுமாகும். நாதந்த நிலையில் அகர் உகர மகர விந்து நாதம் என்ற ஐந்தாகும். ஆதலில் அரனே பிரணவமாகப் பொருந்தி அவற்றை முடிவு செய்வதனால் பற்றிப் பஞ்சாந்தகன் அவன் என்று அவனே வேதங்கலிலும் ஆகமங்கலிலும் மொழிந்துள்ளான்.
2400. பஞ்ச கலைகளின் முடிவு வேறாகும் என எண்ணாது எல்லாம் ஒரே முடிவை உடையன என்று சித்தாந்த வேதாந்த நெறிகளில் தலைப்பட்டு நின்றால் யோகத்தின் முடிவுகள் சமாதி அமையும். அங்ஙனம் அமைந்தால் வானத்தை இடமாகக் கொண்டு நடிக்கும் கூத்தப் பெருமான் திருவடியை அடைவான்.
2401. சிவனின் திருவடியைப் பொருந்தும் பழமையான சீவன் ஐந்து மலங்களும் கெட்டு அநாதியாய் உள்ள ஆன்மாவின் சுட்டநிலை அழித்துத் தன் உண்மையான பரநிலையைக் கண்டு சிவ வடிவு கொள்ளும். தன் ஆதி மலமான ஆணவம் நீங்கச் சகல தத்துவங்களையும் கடந்த நிலையில் நீர் பாலுடன் சேர்ந்து பாலாகவே இருப்பதைப் போன்று சீவன் சிவமாதல் வேதாந்தம் கூறும் உண்மையாகும்.
2402. உயிரையும் பரனையும் மேன்மையான சிவனையும் மய்க்கம் நீங்கிய நான் அதுவானேன் என்னும் வாக்கியப் பொருளாக உணர்க. அதனால் சுட்டியறியும் தன்மை கெட்டு அறிவாகிப் பேரறிவுடன் அடங்கி நிற்பதே மயக்கம் அற்ற சித்தாந்தம் என்க.
2403. நிலையான் அகண்டப் பொருளான அது நான் என்ற பாவனை அந்தணர் சிறந்ததாகக் கொண்டு ஒழுகும் சிவயோகம். இதனையே தான் சித்தாந்தம் பாவிக்கச் சொன்னது. ஆதலால் சிறந்த வேதத்தால் ஆராயப்பட்ட பொருள் செறிவு உடையது ஆகமநூல் ஆகும் என்பது விளங்கும்.
2404. வேதம் காலத்தால் ஏற்பட்டது. ஆகமம் முழுமைத் தன்மையுடையது, ஆன்மாக்களுக்குத் தலைவனான இறைவன் அருளியவை இரண்டுமே ஆகும். பழமையான வேதம் படிப்படியாக வந்து மிக மேம்பட்ட வேதாந்தமும் சித்தாந்தமும் ஆகும்.
#####
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.